search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanliness Drive"

    • அரியமான் கடற்கரையில் தூய்மை பணியை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்றுகளை நட்டார்.
    • பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பாக கரு ணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தை யொட்டி சாத்தக்கோன்வலசை ஊராட்சி அரியமான் கடற் கரையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தூய்மை பணியை தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்று களை நட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி வீர பத்திரன், ராமேஸ்வரம் நக ராட்சி தலைவர் நாசர்கான், ராமநாத புரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் நட ராஜன், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத், ஊராட்சி செயலர் விஸ்வநாதன் உட்பட சுற்றுலாத்துறை அலுவ லர்கள் மற்றும் கிராம பணி யாளர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியில் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டு அரியமான் கடற்கரையினை சுத்தம் செய்தனர். பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தைப் போன்று தூய்மையான பாகிஸ்தான் மற்றும் பசுமையான பாகிஸ்தான் திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று தொடங்கி வைக்கிறார். #ImranKhan #CleanlinessDrive
    இஸ்லாமாபாத்:

    ‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் நமது நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்துக்கான பிரசார தூதவர்களாக விளையாட்டு மற்றும் கலைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களை அவர் இணைத்துள்ளார்.



    அதேவகையில், பாகிஸ்தானிலும்  தூய்மையான பாகிஸ்தான் மற்றும் பசுமையான பாகிஸ்தான் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி, பாகிஸ்தான் நாட்டிலுள்ள 4 மாகாணங்களை சேர்ந்த முக்கிய பெருநகரங்களில் பிரதமர் இம்ரான் கான் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என பாகிஸ்தான் வானொலி தெரிவித்துள்ளது. #Pakistancleanlinessdrive #ImranKhaninaugurate 
    ×