search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியமான் கடற்கரையில் தூய்மை பணி
    X

    அரியமான் கடற்கரையில் தூய்மை பணி

    • அரியமான் கடற்கரையில் தூய்மை பணியை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்றுகளை நட்டார்.
    • பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பாக கரு ணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தை யொட்டி சாத்தக்கோன்வலசை ஊராட்சி அரியமான் கடற் கரையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தூய்மை பணியை தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்று களை நட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி வீர பத்திரன், ராமேஸ்வரம் நக ராட்சி தலைவர் நாசர்கான், ராமநாத புரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் நட ராஜன், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத், ஊராட்சி செயலர் விஸ்வநாதன் உட்பட சுற்றுலாத்துறை அலுவ லர்கள் மற்றும் கிராம பணி யாளர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியில் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டு அரியமான் கடற்கரையினை சுத்தம் செய்தனர். பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×