search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chikkana college"

    • வனத்தீ தடுப்பு பற்றிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
    • காட்டுத்தீ இயற்கையான முறையில் ஏற்படுவதை விட மனிதர்களால் அதிகம் ஏற்படுகிறது .

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2, திருப்பூர் வனச்சரகம் சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள ஏ. வி. அரங்கில் வனத்தீ தடுப்பு பற்றிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது . முன்னதாக அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் , காடுகளுக்குள் எப்படி பாதுகாப்பாக செல்லவேண்டும் , காட்டுத்தீயை எப்படி அணைக்க வேண்டும் , காட்டுத்தீ எப்படி உருவாகிறது , வெப்பம் , எரிபொருள் மற்றும் காற்று இந்த மூன்று பொருட்களும் சேரும் போது நெருப்பு உருவாகிறது என்றார். மேலும் காட்டுத்தீ இயற்கையான முறையில் ஏற்படுவதை விட மனிதர்களால் அதிகம் ஏற்படுகிறது .ஆகையால் இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். காட்டுத்தீ மிகவும் ஆபத்தானது.காட்டுத் தீ உருவானால் பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவும். இவை காடுகளில் வாழும் உயிரினங்களை அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் காடுகளின் வளத்தையே அழிக்கிறது . காட்டுத்தீ இயற்கையான முறையில் எப்படி உருவாகிறது என்பதை தெளிவாக கூறினார். சில நேரங்களில் அதுவும் வெயில் காலங்களில் காய்ந்து போன மரங்கள் மற்றும் செடிகளில் நெருப்பு உருவாகிறது எனவும் , மழைக்காலங்களில் மின்னல் மரங்களில் படும்போது நெருப்பு உருவாகிறது, இதன் மூலம் காட்டுத்தீ உருவாகிறது , மனிதர்கள் காடுகளுக்குள் செல்லும் போது தீயை மூட்டுவதால் அதிலிருந்து வரும் நெருப்பு காடுகளில் பரவுவதன் மூலம் காட்டுத்தீ உருவாகிறது . மேலும் காடுகளின் அருகில் வசிக்கும் மக்கள் குப்பைகளை எரிப்பதன் மூலம், அதிலிருந்து உருவாகும் நெருப்பு காடுகளில் பரவுவதன் மூலம் காட்டுத்தீ உருவாகிறது.

    அவற்றை கட்டுப்படுத்த ரசாயன பொருட்கள் பயன்படுத்தி காட்டுத் தீ அணைக்கப்படுகிறது, காட்டுத்தீ அதிகமாக பரவும் போது கிளவுடு சேவிங் என்ற தொழில்நுட்பம் மூலமாக செயற்கையான முறையில் மழைகளைப் பொழியவைத்து காட்டுத்தீ அணைக்கப்படுகிறது என்று கூறினார். பிறகு மாணவர்கள் தங்கள் கேள்விகளை கேட்டு நிவர்த்தி செய்தனர். மாணவ செயலர்கள் சுந்தரம், ரமேஷ், பாலாஜி ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
    • பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் போதை தடுப்பு மற்றும் 33வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றும், விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும், இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போதே தலை கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் நிச்சயம் அணிய வேண்டும். ஒரு வழி பாதையில் செல்லக் கூடாது . போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம்.அவற்றால் எண்ணற்ற நோய்கள் பரவுகிறது. குடும்ப நிம்மதியை இழக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    தெற்கு காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். பிறகு மாணவ செயலர்கள் ரத்தினகணேஷ், அருள்குமார், பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு நடனமும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடனமும் அரங்கேற்றினர்.மாணவ மாணவிகள், பொதுமக்கள் , காவல் துறையினர் அனைவரும் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும்.
    • தேசிய மாணவர் படை ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு.

    திருப்பூர் :

    தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் - 30, ஆங்கிலம் இலக்கியம் - 50, பொருளியல் - 30, வரலாறு - 50, பி.காம்., 100, பி.காம்.சி.ஏ., 60, பி.காம்., சர்வதேச வணிகம் - 50, பி.பி.ஏ., - 50, பி.சி.ஏ., - 50, பி.எஸ்சி கணினி அறிவியல் (ஷிப்ட் 1) - 60, பி.எஸ்சி., கணினி அறிவியல் (ஷிப்ட் 2) - 60, பி.எஸ்சி., இயற்பியல் - 24, வேதியியல் -48, கணிதம் - 75, விலங்கியல் - 48, ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் - 50 ஆகிய இளநிலை பட்டபடிப்புகள் வழங்கப்படுகின்றனர்.

    இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tngasa.in மற்றும், www.tngasa.org என்றஅங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் இன்று முதல் ஜூலை15 வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:-

    இணையதளத்தில் கேட்கப்படும் சுய விவரங்கள், தேர்வு செய்யப்போகும் கல்லூரிகள் தேர்வு, பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.

    ஒரு கல்லூரியில் விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரி எனில் கூடுதல் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.சந்தேகம் இருக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'சி' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், www.cgac.in இணையதள முகவரியில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×