என் மலர்
நீங்கள் தேடியது "chess championship"
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில், பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகள் பொதுப் பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு, ஆரம்ப நிலை பிரிவு என 3 பிரிவு களாக நடத்தப்பட்டது. போட்டிகளை மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார். செயலர் வைகை குமார் முன்னிலை வகித்தார்.
பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் நெல்லை மாவட்ட வீரர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட வீரர் சிபி சக்கரவர்த்தி, இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவர் ஜேட் ஆட்ரியான், இலஞ்சி பாரத் பள்ளி மாணவர் சுரேந்தர் ஆகியோர் முதல் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.
புது வீரர்கள் பிரிவு மாணவர்கள் பிரிவில் சுரண்டை அரசுப்பள்ளி மாணவர் பரணிசுதாகர், மாணவிகள் பிரிவில் இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவி தர்ஷினி, ஆரம்ப நிலை வீரர்கள் பிரிவில் தென்காசி வேல்ஸ் பள்ளி மாணவர் தீனதயாளன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
பொதுப்பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன் பரிசு கோப்பையும் மற்ற பிரிவின ருக்கு பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்கள் பெற்றவர்கள் பொதிகை கோப்பை 2023 மாநில சதுரங்க போட்டியில் விளையாட தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
விழாவில் ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி முதல்வர் ஏஞ்சல் பொன்ராஜ், மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பாலகிருஷ்ணன், குலசேகரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், சதுரங்க பயிற்சியாளர்கள் ஜெயசங்கர், அருண்குமார், ராஜகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சதுரங்க கழக இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.
- அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்
- தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை செஸ் அசோசியேஷன் மற்றும் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் 12 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு அமலோற் பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிரிட்டோ வரவேற்று பேசினார்.
அமைச்சர் லட்சுமி நாராயணன், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தனர்.
மேலும் இப்போட்டி நடைபெற உறுதுணையாக இருந்து இட வசதி ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளி தாளாளர் லூர்துசாமியை பாராட்டினர். அதோடு இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- கொனேரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.
- ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ் சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து சாம்பியனாக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து தற்போது ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கொனேரு ஹம்பி சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ராபிட் செஸ் உலக தொடரில் கொனேரு ஹம்பி வெண்கல பதக்கம் வென்று இருந்தார். மேலும், கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்.
- உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
- 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "2வது முறையாக உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் கொனேரு ஹம்பி. இதன்மூலம் இப்படி ஒரு நம்பமுடியாத, மகத்தான சாதனையை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உங்களின் புத்திசாலித்தனம் பலரையும் ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.






