search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chess championship"

    • அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்
    • தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை செஸ் அசோசியேஷன் மற்றும் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் 12 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு அமலோற் பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிரிட்டோ வரவேற்று பேசினார்.

    அமைச்சர் லட்சுமி நாராயணன், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இப்போட்டி நடைபெற உறுதுணையாக இருந்து இட வசதி ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளி தாளாளர் லூர்துசாமியை பாராட்டினர். அதோடு இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
    • பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில், பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

    இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டிகள் பொதுப் பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு, ஆரம்ப நிலை பிரிவு என 3 பிரிவு களாக நடத்தப்பட்டது. போட்டிகளை மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார். செயலர் வைகை குமார் முன்னிலை வகித்தார்.

    பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் நெல்லை மாவட்ட வீரர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட வீரர் சிபி சக்கரவர்த்தி, இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவர் ஜேட் ஆட்ரியான், இலஞ்சி பாரத் பள்ளி மாணவர் சுரேந்தர் ஆகியோர் முதல் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.

    புது வீரர்கள் பிரிவு மாணவர்கள் பிரிவில் சுரண்டை அரசுப்பள்ளி மாணவர் பரணிசுதாகர், மாணவிகள் பிரிவில் இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவி தர்ஷினி, ஆரம்ப நிலை வீரர்கள் பிரிவில் தென்காசி வேல்ஸ் பள்ளி மாணவர் தீனதயாளன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    பொதுப்பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன் பரிசு கோப்பையும் மற்ற பிரிவின ருக்கு பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்கள் பெற்றவர்கள் பொதிகை கோப்பை 2023 மாநில சதுரங்க போட்டியில் விளையாட தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    விழாவில் ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி முதல்வர் ஏஞ்சல் பொன்ராஜ், மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பாலகிருஷ்ணன், குலசேகரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், சதுரங்க பயிற்சியாளர்கள் ஜெயசங்கர், அருண்குமார், ராஜகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சதுரங்க கழக இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.

    ×