search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess awareness"

    • வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கும் விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பை ஆகியவற்றை வழங்கினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.
    • சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.

    குடிமங்கலம்:

    செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டிகள் குடிமங்கலம் ஒன்றிய அளவில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.

    வெற்றி பெறும் முதல் 3 மாணவ மாணவிகள் வரும் 27 ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். போட்டிக்கு ஆர்பிட்ராக முகமது அஸ்லாம், சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.

    • செஸ் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார்.

    சிவகங்கை

    44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் மகளிர் சுய உதவிகுழுவினர்கள் கூட்டாக இணைந்து ரங்கோலி கோலமிடல் நிகழ்ச்சியை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 445 ஊராட்சிகளிலும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செஸ் போட்டியின் சிறப்பு அம்சங்கள் குறித்து வண்ண கோலங்களால் விளக்கப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • 189 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

    தூத்துக்குடி:

    உலக சதுரங்க சங்கம் சார்பில் உலக நாடுகளுக்கிடையேயான 44-வது ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் அகில இந்திய சதுரங்க கழகம் மூலம் மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 189 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

    மாணவர்களுக்கு சதுரங்க போட்டியினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சதுரங்க போட்டியில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களை ஊக்குவித்து, அந்த மாணவர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் நமது தமிழக அரசு, சதுரங்க சங்கங்கள், உடற்கல்வி ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

    இதன் முதற்படியாகக் கல்லூரிக் கல்வித்துறை, தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக காமராஜ் மகளிர் கல்லூரியில் சதுரங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சதுரங்கப் போட்டியில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுடன் பார்வையாளர்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சதுரங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, கன்னியாகுமரி மாவட்டம் விளையாட்டு விடுதி மேலாளர் ராஜேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயரத்தினராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஒலிம்பியாட் சதுரங்கப்போட்டியினை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு நிகழ்வாக தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் சதுரங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சதுரங்க போட்டியும் நடத்தப்பட்டது. சிறப்புமிக்க சதுரங்க வீரர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை காமராஜ் மகளிர் கல்லூரியுடன் மாவட்ட நிர்வாகம் மாவட்ட சதுரங்க கழக நிர்வாகத்தின் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    ×