என் மலர்
நீங்கள் தேடியது "Cauvery Management"
- தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியுள்ளது.
மேலாண்மை ஆணைய தலைவர் ஹால்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக அதிகாரிகாள், கர்நாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தர வேண்டிய நீர் விவகாரம், நீர்த்திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
- ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தியது.
- இருதரப்பு வாதங்களை கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம், கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் இன்று டெல்லியில் சுமார் ஒன்றை மணி நேரம் நடைபெற்றது.
இதில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா, புதுச்சேரி ஆகியே மாநிலங்களின் அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர்.
அதேபோல் ஒவ்வொருவரும் தங்களின் மாநிலங்களின் அணைகளில் உள்ள நீர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.
ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கையை முன் வைத்திருந்தது.
அப்போது கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவில் இருந்து எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தியது.

அதேபோல் தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு பிலிகுண்டுலு அணையில் இருந்து திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பருவக் காலம் என்பதல் கர்நாடாகவில் போதிய நீர் இருக்கும் என்ற காரணத்தால் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு வழக்கம் போல் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும், குடிநீர்த் தேவைக்கே தண்ணீர் உள்ளதாகவும் கூறிவிட்டது. அதேபோல் தமிழகம் கேட்கும் அளவிற்கு நீர் திறந்து விட முடியாது. அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு என்பதை பொறுத்து தண்ணீர் திறந்து விட முடியும் என்று கர்நாடகா தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம், கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.







