search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cash Scam"

    • மர்ம கும்பல் தன்னிடம் இருந்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது.
    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி பகுதியைச் சேர்ந்த சுந்தேரசன் மகள் சுமதி (வயது28).

    இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    இவரது செல்போனிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் குறைந்த முதலீடு செய்ததால் தொழில் தொடங்கி அதன் மூலம் கமிஷனும், லாபம் கிடைக்கும் என்று ஒரு விளம்பர மெசேஜ் (குறுஞ்செய்தி) வந்தது. அதனை நம்பிய சுமதி உடனே மெசேஜ்-ல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு அவர் விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின்பு அந்த எண்ணில் தொடர்பு கொண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு சுமதி ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தினார்.

    அதன்பின்பு அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் மர்ம கும்பல் தன்னிடம் இருந்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் பதறிப்போன சுமதி செய்வதறியாது திணறினார்.

    இதுகுறித்து சுமதி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் குற்றபிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்ஜினீரிங் படித்த இளம்பெண்ணிடமே வாடஸ் அப் மூலம் நூதன முறையில் மர்ம கும்பல் பணம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

    • ஒரு லிட்டர் ஆயில் இந்தியாவில் ரூ.1 லட்சம் என்றும், நீங்கள் எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம் என்று மோசடி ஆசாமிகள் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.
    • புற்று நோய்க்கான எண்ணையின் பெயரை சொல்லி மோசடி கும்பல் கைவரிசை காட்டி இருக்கிறது.

    ஜிபே பண மோசடி போன்று இன்னொரு வகையான புதிய மோசடியும் கடந்த சில நாட்களாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மரப்பட்டை ஆயில் எங்களுக்கு தேவைப்படுகிறது. நாங்கள் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி கும்பல் கைவரிசை காட்டி இருக்கிறது.

    நீங்கள் ரூ.2 லட்சத்துக்கு ஆயில் வாங்கி கொடுத்தால் உங்களுக்கு இரட்டிப்பு லாபமாக 4 லட்சம் ரூபாய் தருகிறோம் என்று கூறி மோசடி கும்பல் கைவரிசை காட்டத் தொடங்கி உள்ளது.

    இதற்கான பேச்சு வார்த்தைகளை ஆன்லைன் மூலமாகவே நடத்தி மும்பையை சேர்ந்த `ஆர்.கே.இண்டஸ்ட்ரி' என்ற நிறுவனத்தின் பெயரையும் மோசடி ஆசாமிகள் பயன்படுத்தி உள்ளனர். இந்த பெயரில் மும்பையில் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    ஆனால் அவர்களுக்கும் மோசடி ஆசாமிகளுக்கும் தொடர்பு இல்லை. ஒரு லிட்டர் ஆயில் இந்தியாவில் ரூ.1 லட்சம் என்றும், நீங்கள் எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம் என்று மோசடி ஆசாமிகள் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.

    நீங்கள் உடனடியாக 20 லிட்டர் மரப்பட்டை எண்ணையை வாங்குவதற்கு ரூ.20 லட்சம் பணம் கட்டினால் அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கில் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோசடி ஆசாமிகள் கூறியதை கேட்டு 8 பேர் தலா ரூ.20 லட்சம் பணத்தை கட்டி உள்ளனர்.

    இதன் மூலம் மோசடி கும்பல் ரூ.1½ கோடியை பறித்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பூரை சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட நபர்கள் அங்கு சிறிய அளவில் தொழில் செய்து வருபவர் கள் என்றும், தாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    பேராசை காரணமாகவே 8 பேரும் தங்களது பணத்தை இழந்துள்ளனர் என்றும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் இப்படித் தான் ஆசை காட்டி மோசடி செய்து வருகிறார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
    • சில பெண்களிடம் அவசர வேலைக்கு லேப்-டாப் தேவைப்படுவதாக கூறி 2 பெண்களிடம் 2 லேப்-டாப்பும் ஒரு பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் பணமும் வாங்கியுள்ளார்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் ராகவன் வீதியில் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இந்த விடுதிக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் விடுதி வார்டன் கார்த்தியாயினி(65)என்பவரிடம் தன்னுடைய பெயர் ராமலட்சுமி(31) என்றும், சொந்த ஊர் மதுரை அண்ணாநகர் என்றும் கூறினார்.

    மேலும் தான் வருமானவரித் துறை அதிகாரியாக இருப்பதாகவும் கூறிய அவர், அதற்கான ஆவணங்களையும் காட்டினார். தற்போது ஐ.ஏ.எஸ்.பயிற்சி வகுப்பு சென்று வருவதாக தெரிவித்தார். நான் இங்கு தங்குவதற்கு அறை வேண்டும் என கேட்டார்.

    இதனை உண்மை என நம்பிய விடுதி வார்டன் அவரை தங்க அனுமதித்தார். அப்போது அந்த இளம்பெண் விடுதியில் தங்கி உள்ள அனைத்து பெண்களிடமும் சகஜமாக பேசியுள்ளார்.

    அப்போது அங்கு தங்கியிருந்த சில பெண்களிடம் நான் வருமான வரித்துறை அதிகாரியாக உள்ளேன். உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இளம்பெண் விடுதியில் தங்கி இருந்த சில பெண்களிடம் அவசர வேலைக்கு லேப்-டாப் தேவைப்படுவதாக கூறி 2 பெண்களிடம் 2 லேப்-டாப்பும் ஒரு பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் பணமும் வாங்கியுள்ளார். பின்னர் பணத்துடன் 2 லேப்-டாப்களையும் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார்.

    தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம் பெண்கள் இதுகுறித்து விடுதி வார்டனிடம் தெரிவித்தனர். அவர் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விசாரணையில், ராமலட்சுமி வருமான வரித்துறை அதிகாரி என கூறி போலி ஆவணங்களை காட்டி 2 லேப்டாப், ரூ.30 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ராமலட்சுமி கோவையில் உள்ள அவரது தோழி ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று ராமலட்சுமியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், ராமலட்சுமி தர்மபுரி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் தங்கி இருந்து பல்வேறு பெண்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் ராமலட்சுமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×