என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.6.90 லட்சம் மோசடி: வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜால் விபரீதம்
- மர்ம கும்பல் தன்னிடம் இருந்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது.
- புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி பகுதியைச் சேர்ந்த சுந்தேரசன் மகள் சுமதி (வயது28).
இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போனிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் குறைந்த முதலீடு செய்ததால் தொழில் தொடங்கி அதன் மூலம் கமிஷனும், லாபம் கிடைக்கும் என்று ஒரு விளம்பர மெசேஜ் (குறுஞ்செய்தி) வந்தது. அதனை நம்பிய சுமதி உடனே மெசேஜ்-ல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு அவர் விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின்பு அந்த எண்ணில் தொடர்பு கொண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு சுமதி ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தினார்.
அதன்பின்பு அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் மர்ம கும்பல் தன்னிடம் இருந்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் பதறிப்போன சுமதி செய்வதறியாது திணறினார்.
இதுகுறித்து சுமதி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் குற்றபிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீரிங் படித்த இளம்பெண்ணிடமே வாடஸ் அப் மூலம் நூதன முறையில் மர்ம கும்பல் பணம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.






