search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus-lorry collision"

    • 45 பேருடன் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • லாரி திடீரென முன்னாள் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பக்கம் மோதியது.

    கடலூர்:

    ஆந்திராவில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் வரை ஆன்மிக சுற்றுலா செல்ல 45 பேருடன் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சினை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த நரசிங்கப்பள்ளியை சேர்ந்த கணேஷ் (வயது 25) என்பவர் ஓட்டிவந்தார்.இந்த பஸ் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி கூட்ரோடு அருகே இன்று அதிகாலை வந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பஸ்சின் பின்னால் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டம் கடமை நேந்தலை சேர்ந்த ஆரோக்கியசாமி (56) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    இந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பக்கம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த அணில் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது டேங்கர் லாரியில் இருந்து ஆசிட் வெளியேறியதால் அந்த பகுதியில் கண் எரிச்சலும், மூச்சு திணறல் ஏற்பட்டது. அப்பகுதியே புகை மண்ட லமாக மாறியது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் வர வழைக்கப்பட்டனர். அவர்க ளுடன் சேர்ந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கு தீயணைப்பு படையினர் தண்ணீரை பிய்ச்சி அடித்தனர். சாலையில் இருந்த ஆசிட் சாலையோரம் ஓடியது. விபத்தில் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ராமநத்தம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • விருதுநகர் அருகே நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன்(58). இவர் திருச்செந்தூர் செல்வதற்காக கரூரில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் சென்றார். அந்த பேருந்து கல்குறிச்சி அருகே சென்றபோது பஸ்சின் முன் பக்க டயர் வெடித்தது.

    இதனால் பஸ்சை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த டிரைவர் பண்டாரம் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு அருப்புக்கோட்டை பணிமனைக்கு தகவல் கொடுக்க சென்றார். பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சாலையோரத்திலும், பஸ்சின் முன்னாலும் நின்றிருந்தனர். பஸ்சின் கண்டக்டர் ஏகாம்பரம் பழுதடைந்த டயரை கழட்டிக்கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி நின்றிருந்த பஸ்சின் பின் பக்கத்தில் மோதியது. இதில் பஸ் முன் பக்கம் நகர்ந்து நின்றுகொண்டிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் ஈரோடு மாவட்டம் பாசூரை சேர்ந்த பழனிசாமி என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் முருகேசன், பரமத்திவேலூரை சேர்ந்த லோகநாதன், போத்தனூர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து முருகேசன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விளாத்திக்குளத்தை சேர்ந்த பாக்கியராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே இன்று நடந்த விபத்தில் ஆம்னி பஸ் -லாரி மோதி 2 டிரைவர்கள் பலி ஆனார்கள்.
    • விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையில் இருந்து 20-க்கும் பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் ஒன்று தேனி மாவட்டம் போடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவாக போடி பகுதியை சேர்ந்த சுருளி முத்து என்பவர் உடன் வந்தார்.

    இந்த பஸ் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் பால் பண்ணை எதிரே வந்தது. அப்போது முன்னாள் இரும்புக் பட்டைகள் ஏற்றி சென்ற கனரக லாரி ஒன்று திடீரென பிரேக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் லாரியின் டிரெய்லர் மீது அதிவேகமாக மோதியது.இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சிவா, மாற்று டிரைவர் சுருளி முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே இரும்பு பட்டைகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து நடந்த ஒரு சில நொடிகளில் ஆம்னி பஸ்சின் பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று ஆம்னி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபதல் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான மீட்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சாலை விபத்தால் சென்னை- திருச்சிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    ×