என் மலர்
நீங்கள் தேடியது "ஒருவர் சாவு"
- சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்ப வருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.
- அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகள் மற்றும் சரவெடிகள், வாண வெடிகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வந்தது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வெள்ளாளபுரம் ஊராட்சி, முனியம் பட்டியைஅடுத்த சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்ப வருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.
அரசு அனுமதியுடன் செயல்பட்டு வந்த இந்த ஆலையில், விழா காலங்களில் பயன்படுத்துவ தற்கான அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகள் மற்றும் சரவெடிகள், வாண வெடிகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த
22-ந் தேதி மாலை இந்த ஆலையில் இருந்த பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த சன்னியாசிக் கடை பகுதியை சேர்ந்த அமுதா (45) என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த தீக்காயங்க ளுடன் மீட்கப்பட்ட, வெள்ளாள புரம் வாண கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) என்பவர், சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த வேடப்பன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.
போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, விபத்து ஏற்படும் வகையில் அஜாக்கி ரதையாக செயல்பட்டதாக, சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் குமார் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- விருதுநகர் அருகே நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன்(58). இவர் திருச்செந்தூர் செல்வதற்காக கரூரில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் சென்றார். அந்த பேருந்து கல்குறிச்சி அருகே சென்றபோது பஸ்சின் முன் பக்க டயர் வெடித்தது.
இதனால் பஸ்சை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த டிரைவர் பண்டாரம் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு அருப்புக்கோட்டை பணிமனைக்கு தகவல் கொடுக்க சென்றார். பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சாலையோரத்திலும், பஸ்சின் முன்னாலும் நின்றிருந்தனர். பஸ்சின் கண்டக்டர் ஏகாம்பரம் பழுதடைந்த டயரை கழட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி நின்றிருந்த பஸ்சின் பின் பக்கத்தில் மோதியது. இதில் பஸ் முன் பக்கம் நகர்ந்து நின்றுகொண்டிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் ஈரோடு மாவட்டம் பாசூரை சேர்ந்த பழனிசாமி என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் முருகேசன், பரமத்திவேலூரை சேர்ந்த லோகநாதன், போத்தனூர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து முருகேசன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விளாத்திக்குளத்தை சேர்ந்த பாக்கியராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






