search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை  அருகே இன்று விபத்து:  ஆம்னி பஸ் -லாரி மோதல்-  2 டிரைவர்கள் பலி
    X

    ஆம்னி பஸ் மீது லாரி ேமாதிக்கொண்ட காட்சி.

    உளுந்தூர்பேட்டை அருகே இன்று விபத்து: ஆம்னி பஸ் -லாரி மோதல்- 2 டிரைவர்கள் பலி

    • உளுந்தூர்பேட்டை அருகே இன்று நடந்த விபத்தில் ஆம்னி பஸ் -லாரி மோதி 2 டிரைவர்கள் பலி ஆனார்கள்.
    • விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையில் இருந்து 20-க்கும் பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் ஒன்று தேனி மாவட்டம் போடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவாக போடி பகுதியை சேர்ந்த சுருளி முத்து என்பவர் உடன் வந்தார்.

    இந்த பஸ் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் பால் பண்ணை எதிரே வந்தது. அப்போது முன்னாள் இரும்புக் பட்டைகள் ஏற்றி சென்ற கனரக லாரி ஒன்று திடீரென பிரேக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் லாரியின் டிரெய்லர் மீது அதிவேகமாக மோதியது.இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சிவா, மாற்று டிரைவர் சுருளி முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே இரும்பு பட்டைகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து நடந்த ஒரு சில நொடிகளில் ஆம்னி பஸ்சின் பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று ஆம்னி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபதல் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான மீட்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சாலை விபத்தால் சென்னை- திருச்சிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×