search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "broad daylight"

    • வீட்டின் முன்புற கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
    • வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை மின்சாரவாரிய குடியிருப்பு அருகில் வேட்டையப்ப கவுண்டர் (73). அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் வசித்து வருகின்றனர். வேட்டை யப்பகவுண்டருக்கு உடல்நிலை சரியில்லாததால் சம்பவத்தன்று காலை மனைவியுடன் அந்தியூர் மருத்துவமனைக்கு சென்றார்.

    பின்னர் மதியம் 1.30 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன்புற கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து பொருட்கள் சிதறி கிடந்தது.வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதேபோல் அதேபகுதியில் குடியிருந்து வரும் வேலுசாமி (78). அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் காலை அந்தியூரில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    பின்னர் வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்புற இரும்பு கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து வேலுசாமி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவயி டம் வந்து விசாரணை செய்தனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து வீட்டில் இருந்து காவிரி ஆற்று வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    பட்டப்பகலில் அடுத்தடுத்து வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • சிறுத்தை திடீரென காரின் முன்பு பாய்ந்து சென்றது.
    • வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் சிறுத்தையை படம் பிடிக்க ஆரம்பித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்ச ரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை. சிறுத்தை, மான், கரடி உள் பட பல்வேறு வன விலங்கு கள் வசித்து வருகிறது.

    மைசூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த வனப்பகுதி ரோட்டில் தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி வருகிறது. ரோட்டில் உலா வரும் யானைகள் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவங்களும் நடக்கிறது.

    மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சிறுத்தைகளும் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் சுற்று கிறது. அதே போல் அந்த பகுதி ரோட்டில் மேடான பகுதிகளில் அமர்ந்து கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த ரோட்டில் பண்ணாரி சோதனை சாவடியும், பிரசித்தி பெற்ற பண்ணாரி கோவிலும் உள்ளதால் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச்சரக த்துக்கு உட்பட்ட பண்ணாரி கோவில் அருகே உள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை பட்டப்பகலில் சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது.

    அப்போது சத்தியமங்கல த்தில் இருந்து தாளவாடிக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிறுத்தை திடீரென காரின் முன்பு பாய்ந்து சென்றது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காரில் வந்தவர்கள் உடனே காரை நிறுத்தினர். அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் சிறுத்தையை படம் பிடிக்க ஆரம்பித்தனர்.

    இதை ெதாடர்ந்து சிறுத்தை அங்கேயே நின்று கொண்டு இருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. பட்ட பகலில் சிறுத்தை நட மாட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்ச த்துடன் சென்று வருகின்ற னர்.

    ஐதராபாத் நகரில் உள்ள அட்டபூர் பகுதியில் வாலிபர் ஒருவரை, 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Hyderabad #MurderAccused #Murder
    ஐதராபாத்:

    ஐதராபாத் நகரில் உள்ள அட்டபூர் பகுதியில் நேற்று பகல் 11.30 மணி அளவில் வாலிபர் ஒருவரை, 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். அப்போது அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீஸ்காரரும் மற்றும் பொதுமக்களும் அந்த நபரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பலன் இல்லாமல் போய் விட்டது. கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் கொல்லப்பட்ட வாலிபரின் பெயர் ரமேஷ் (வயது 28) என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகேஷ் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த படுகொலை சம்பவம் நடந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. மகேஷ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ரமேஷ் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த போதுதான் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

    கொலை நடந்த போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் இந்த காட்சியை தங்கள் செல்போனில் வீடியோ படம் எடுத்தனர். அந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.   #Hyderabad #MurderAccused #Murder
    ×