search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டப் பகலில் காரின் முன்பு பாய்ந்து சென்ற சிறுத்தை
    X

    பட்டப் பகலில் காரின் முன்பு பாய்ந்து சென்ற சிறுத்தை

    • சிறுத்தை திடீரென காரின் முன்பு பாய்ந்து சென்றது.
    • வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் சிறுத்தையை படம் பிடிக்க ஆரம்பித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்ச ரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை. சிறுத்தை, மான், கரடி உள் பட பல்வேறு வன விலங்கு கள் வசித்து வருகிறது.

    மைசூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த வனப்பகுதி ரோட்டில் தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி வருகிறது. ரோட்டில் உலா வரும் யானைகள் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவங்களும் நடக்கிறது.

    மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சிறுத்தைகளும் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் சுற்று கிறது. அதே போல் அந்த பகுதி ரோட்டில் மேடான பகுதிகளில் அமர்ந்து கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த ரோட்டில் பண்ணாரி சோதனை சாவடியும், பிரசித்தி பெற்ற பண்ணாரி கோவிலும் உள்ளதால் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச்சரக த்துக்கு உட்பட்ட பண்ணாரி கோவில் அருகே உள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை பட்டப்பகலில் சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது.

    அப்போது சத்தியமங்கல த்தில் இருந்து தாளவாடிக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிறுத்தை திடீரென காரின் முன்பு பாய்ந்து சென்றது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காரில் வந்தவர்கள் உடனே காரை நிறுத்தினர். அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் சிறுத்தையை படம் பிடிக்க ஆரம்பித்தனர்.

    இதை ெதாடர்ந்து சிறுத்தை அங்கேயே நின்று கொண்டு இருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. பட்ட பகலில் சிறுத்தை நட மாட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்ச த்துடன் சென்று வருகின்ற னர்.

    Next Story
    ×