search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booth agents"

    • கூட்டத்தில் சுரேஷ் மனோகரன் கலந்து கொண்டு பாகமுக வர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    • நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை உறுதி படுத்தும் வகையில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும்.

    திசையன்விளை:

    ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாகமுகவர்கள் ஆலோ சனை கூட்டம் திசையன் விளை வி.எஸ்.ஆர். மாலில் அமைந்துள்ள கெட்டி மேளம் மகாலில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக் குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரு மான சுரேஷ் மனோகரன் கலந்து கொண்டு பாகமுக வர்களுக்கு ஆலோசனை களை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசுகை யில், வருகிற பாராளு மன்ற தேர்தலில் தலைமை கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதே பாகமுகவர்களின் முக்கிய நோக்கமாக கருத்தில் கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி தி.மு.க. வெற்றி பெற பணி களை மேற்கோள்வதோடு நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை உறுதி படுத்தும் வகை யில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சியார, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட பொறியா ளர் அணி துணை அமைப்பா ளர் கோகுல், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமை ப்பாளர் நெல்சன், நவ்வலடி சரவணகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ராஜன், வேலப்பன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, அல்போன்ஸ், அந்தோணி, முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் பால்ராஜ், சொக்கலிங்கம், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங் கிணைப்பாளர் எஸ்தாக் கேனிஸ்டன், செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், பொற்கிழி நடராஜன், திராவிடமணி, ஜோசப், மாவட்ட நெசவா ளர் அணி துணை அமைப் பாளர் ஞானராஜ், ஹேர்மஸ், சார்லஸ், ரமேஷ், காந்தி, முத்து, எழில் ஜோசப், புளியடி குமார், முத்து, ராஜா, சாகுல் ஹமீது, முத்தையா, வடிவேல், பாகா முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் தி.மு.க. பூத் ஏஜெண்டுகளுக்கு செல்போன்களை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் தேர்தல் நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய 323 பாகமுகவர்களுக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளைமுன்னிட்டு மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தனது பரிசாக செல்போன் வழங்கினார். மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதியில் உள்ள ஒன்றியசெயலாளர்கள், நகரசெயலாளர்கள் ஆகியோருக்கும் செல்போன் வழங்கினார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் சேகரிக்கும், பாகமுகவர்கள் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ரொக்கபரிசு வழங்கபடும் என்று தமிழரசி எம்.எல்.ஏ. தெரிவித்தார். இந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர்சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ.-இளையான்குடி ஒன்றிய செயலாளர் சுபமதியரசன், மானாமதுரை ஒன்றியசெயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகர் செயலாளர் பொன்னுசாமி, இளையான்குடி நகர செயலாளர்-பேரூராட்சி தலைவர் நஜீமுதின், மானாமதுரை ஒன்றியகுழு துணைத்தலைவர் முத்துசாமி, ராஜகம்பீரம், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்கள் முஜிப்ரகுமான், முருக வள்ளி தேசிங்கு ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ராதாசிவசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×