என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bangalore airport
நீங்கள் தேடியது "Bangalore airport"
- பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.
- தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக 4 பயணிகள் இருந்தனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தொப்பி, முழங்கால் மற்றும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் 4 பேரிடம் இருந்து 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.77 கோடி ஆகும். தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திவரும் பயணிகள் கையாளும் புதிய தந்திரம் என்ன? என்பது பெங்களூரு விமான நிலையத்தில் இன்று தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் தங்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்படும் சுங்கவரி அதிகமாக உள்ளதால் கள்ளத்தனமாக பல்வேறு வழிகளின் மூலம் தங்கம் கடத்தி வருபவர்களின் என்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
மிக்சிக்குள் தங்கம், காலணிகளுக்குள் தங்கம், கியாஸ் அடுப்புக்குள் தங்கம் போன்ற நூதன முறைகளில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுகிறது.
இந்நிலையில், தங்கம் கடத்திவரும் பயணிகள் கையாளும் புதிய தந்திரம் என்ன? என்பது பெங்களூரு விமான நிலையத்தில் இன்று தெரியவந்துள்ளது.
கர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் உள்ள குப்பைத்தொட்டிக்குள் கிடந்த ஒரு மர்மப் பொட்டலம் சுங்கத்துறை அதிகாரிகளின் பார்வையை உறுத்தியது.
வெளிநாடுகளில் இருந்து வழியில் நின்று செல்லும் விமானங்களில் வரும் பயணிகள், இடைவெளியில் காத்திருப்போர் பகுதிக்கு வரும்போது, தாங்கள் கடத்திவந்த பொருளை இப்படி குப்பைத்தொட்டியில் வீசி வருவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி வீசப்படும் பொருட்களை குப்பைத்தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, சில இடைத்தரகர்கள் மூலம் உரியவரிடம் சேர்க்கப்பட்டு, இதற்கான ‘சேவை கட்டணம்’ பெறப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சமீபத்தில் இதுபோல் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட தங்க செயின்களின் இந்திய மதிப்பு 87.69 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல், பல விமான நிலையங்களில் சோதனையில் சிக்காமல் கடத்தல் தங்கம் கைமாறி இருக்கலாம் என கருதும் அதிகாரிகள், இதுதொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். #smugglinggold #Bangaloreairport
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் தங்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்படும் சுங்கவரி அதிகமாக உள்ளதால் கள்ளத்தனமாக பல்வேறு வழிகளின் மூலம் தங்கம் கடத்தி வருபவர்களின் என்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
மிக்சிக்குள் தங்கம், காலணிகளுக்குள் தங்கம், கியாஸ் அடுப்புக்குள் தங்கம் போன்ற நூதன முறைகளில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுகிறது.
இந்நிலையில், தங்கம் கடத்திவரும் பயணிகள் கையாளும் புதிய தந்திரம் என்ன? என்பது பெங்களூரு விமான நிலையத்தில் இன்று தெரியவந்துள்ளது.
கர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் உள்ள குப்பைத்தொட்டிக்குள் கிடந்த ஒரு மர்மப் பொட்டலம் சுங்கத்துறை அதிகாரிகளின் பார்வையை உறுத்தியது.
கருப்பு நிற உறையில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பொட்டலத்தை பிரித்துப் பார்த்த அதிகாரிகள், அதனுள்ளே 2.8 கிலோ எடைகொண்ட தங்க செயின்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இப்படி வீசப்படும் பொருட்களை குப்பைத்தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, சில இடைத்தரகர்கள் மூலம் உரியவரிடம் சேர்க்கப்பட்டு, இதற்கான ‘சேவை கட்டணம்’ பெறப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சமீபத்தில் இதுபோல் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட தங்க செயின்களின் இந்திய மதிப்பு 87.69 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல், பல விமான நிலையங்களில் சோதனையில் சிக்காமல் கடத்தல் தங்கம் கைமாறி இருக்கலாம் என கருதும் அதிகாரிகள், இதுதொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். #smugglinggold #Bangaloreairport
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X