என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bala Vinayagar Temple"
- வருசாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் பால விநாயகர் கோவிலில் லட்சுமி பூஜை, யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
- கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை கணேசன் பட்டர், அய்யர் ஆறுமுகநயினார் தலைமையில் நடத்தி வைத்தார்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்புரம் அமைந்துள்ள பாலவிநாயகர் கோவில் கடந்த 2021-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு வருசாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை நடைபெற்ற வருசாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் பால விநாயகர் கோவிலில் வேத ஆகம விதி முறைப்படி மகா கணபதி பூஜை, லட்சுமி பூஜை, கும்ப பூஜை, யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை கணேசன் பட்டர், அய்யர் ஆறுமுகநயினார் தலைமையில் நடத்தி வைத்தார். பின்பு பாலவிநாயகருக்கு சிறப்பு அலங்காரத்தில் மதிய பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆணையாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரேமா, சத்துணவு மேலாளர் தனலட்சுமி, ஒன்றிய பொறியாளர் வெள்ளபாண்டியன், மேலாளர் மகேந்திரபிரபு, மகராஜன், ஆறுமுகநயினார், அருள்செல்வன், முருகபெருமாள், அழகப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், வரண்டியேல் ஊராட்சி துணை தலைவர் அருண், ஊராட்சி செயலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- செக்கடி பால விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சங்கடகர சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. செக்கடி பால விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. மாலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார். இதே போன்று வல்லம், இலஞ்சி,பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவ பிள்ளையார், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்