search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை  பால விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பால விநாயகர்.


    செங்கோட்டை பால விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

    • செக்கடி பால விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சங்கடகர சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. செக்கடி பால விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. மாலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார். இதே போன்று வல்லம், இலஞ்சி,பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவ பிள்ளையார், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    Next Story
    ×