search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avudaiyanoor"

    • சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
    • 5-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுரில் இருந்து மருதடியூர்,சாலடியூர், மகிழ்வண்ணநாதபுரம் வரை செல்லும் சாலையானது மேடு பள்ளமாக காட்சியளித்து வருகிறது. இச்சாலை யானது அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில் சாலையின் ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகிறது.

    சுமார் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாவூர்சத்திரம் சந்தைக்கு தங்கள் பகுதியில் விளையும் காய்கறிகள், விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சைக்கிள்களில் அதிகளவில் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

    எனவே சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையானூரை சேர்ந்த ஜல்லிக்கட்டு ராம்குமார் என்னும் இளைஞர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கப்பட்டது.
    • ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர்,ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் வீடுகள் தோறும் தேசிய கொடிகளை வழங்கினர்

    தென்காசி:

    கீழப்பாவூர் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி யில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி, துணைத்தலைவர் மகேஷ்வரி மற்றும் ஊராட்சி செயலர் சவுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஊராட்சி பணியாளர்களுடன் இணைந்து வீடுகள் தோறும் தேசிய கொடிகளை வழங்கி னர். இதில் ஆவுடையானூர் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

    ×