என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆவுடையானூர் அருகே பழுதான சாலையை சீரமைக்க கோரிக்கை
- சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
- 5-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுரில் இருந்து மருதடியூர்,சாலடியூர், மகிழ்வண்ணநாதபுரம் வரை செல்லும் சாலையானது மேடு பள்ளமாக காட்சியளித்து வருகிறது. இச்சாலை யானது அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில் சாலையின் ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகிறது.
சுமார் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாவூர்சத்திரம் சந்தைக்கு தங்கள் பகுதியில் விளையும் காய்கறிகள், விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சைக்கிள்களில் அதிகளவில் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
எனவே சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையானூரை சேர்ந்த ஜல்லிக்கட்டு ராம்குமார் என்னும் இளைஞர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்