search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assets tax"

    சென்னை மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #ChennaiCorporation
    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு சொத்து வரி கடந்த மாதம் உயர்த்தி அறிக்கையில் கூறப்பட்டது. வீடுகளுக்கும், வணிக கட்டிடங்களுக்கும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 12 லட்சத்து 14 ஆயிரம் பேர் சொத்து வரியினை செலுத்தி வருகிறார்கள்.

    ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் அரையாண்டும், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இரண்டாம் அரையாண்டும் என்ற அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

    சொத்து வரி உயர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. முதல் அரையாண்டு இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி எவ்வளவு என்பது இன்னும் தெரியவில்லை.

    மாநகராட்சி சார்பில் சொத்து விளக்க அறிக்கை படிவம் கொடுக்கப்பட்டு விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. நீட்டிக்கப்பட்ட இந்த கால அவகாசம் வருகின்ற 16-ந்தேதியுடன் முடிகிறது. அதற்குள்ளாக சொத்து வரி செலுத்துக் கூடியவர்கள் அந்த படிவத்தினை பூர்த்தி செய்து மாநகராட்சி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே சொத்து வரி அதிகமாக வசூலிப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தன.

    அதனால் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு விகிதத்தை குறைக்கவும், ஏற்கனவே உள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய 7 மண்டலங்களில் சொத்து வரி குறைவாக இருப்பதால் அதிகமாக்கவும் மாநகராட்சி பரிசீலனை செய்து வருகிறது.

    இந்த நிலையில் உயர்த்தப்பட்ட சொத்து வரி எப்போது வசூலிக்கப்படும் என்ற கேள்வி பொது மக்களிடம் எழுந்துள்ளது. இந்த ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்துவரி செலுத்தி இருந்தாலும் கூட உயர்த்தப்பட்ட சொத்துவரி வித்தியாச தொகையினை மாநகராட்சி செலுத்த வேண்டும் என்று துணை கமி‌ஷனர் (வருவாய்) லலிதா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

    சொத்துவரி விவர அறிக்கை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. வருகிற 16-ந்தேதி வரை அதனை பெறுவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டல வாரியாக புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு சொத்துவரி செலுத்துபவர்கள் விவரங்கள் தொகை, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி விவர அறிக்கை பெற்றதில் இருந்து ஒரு வாரத்திற்குள் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற ‘டிமாண்ட்’ வெளியிடப்படும். அதனை பார்த்து பொதுமக்கள் சொத்துவரியினை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation
    திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் திண்டுக்கல் உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் சொத்து வரி 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் வாடகை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. ஏழைகளின் மீது திணிக்கப்படும் இந்த வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 நாட்கள் நடைபயணம் தொடங்கியது.

    திண்டுக்கல் மரியநாதபுரத்தில் தொடங்கிய இந்த நடை பயண பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலக் குழு நிர்வாகி பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் ஆசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மரியநாதபுரத்தில் தொடங்கி குள்ளனம்பட்டி, ராஜலெட்சுமிநகர், நாகல்நகர் சந்தை, ஆர்.வி.நகர், முகமதியாபுரம், பேகம்பூர் சவேரியார்பாளையத்தில் இன்றைய பிரசாரம் நிறைவடைகிறது. நாளை திருமலைசாமிபுரத்தில் தொடங்கி ரவுண்டு ரோடு, அபிராமி நகர், கோபால்நகர், ஒய்.எம்.ஆர்.பட்டி பஸ்நிலையம், மணிக்கூண்டு, நந்தவனம் ரோடு, நாராயணபிள்ளை தோட்டம் வழியாக காமராஜர்புரத்தில் நிறைவடைகிறது.
    சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilMaanilaCongress
    கோவை:

    த.மா.கா கட்சியின் ஒருங்கிணைந்த கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் சார்பில் கோவை மாநகர் சிங்காநல்லூர் தியாகி என்.ஜி.ஆர். திடலில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 19-ந் தேதி மூப்பனார் பிறந்த தின பொதுக்கூட்டம், விவசாயிகள் தினமாக நடத்தப்படுகிறது. த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார்.

    இப்பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் கவுண்டம்பாளையம் ராமசாமி மண்டபத்தில் நடந்தது. மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை தங்கம் சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், தமிழக மக்கள் மீது சொத்து வரி 100 சதவீதம் திணிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையேல், த.மா.கா.சார்பில் மக்களை திரட்டி தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் வி.வி.வாசன், மாநில துணை தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், மாநில செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், ராஜ்குமார், செல்வராஜ், மாநில இளைஞர் அணி துணை தலைவர் அருண்பிரகாஷ், மாநில தொழிற்சங்க செயலாளர் துரைசாமி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராஜன், மாவட்ட நிர்வாகிகள் சி.ஆர்.ரவிச்சந்திரன், கோவை விஷ்ணு, மதிபாலா குமார், சுகுமார், கண்ணன், உதயகுமார், மன்னன் முருகேசன், செந்தில், சரத் விக்னேஷ், லோகநாதன், குனிசை ரவிச்சந்திரன், முரளி, சதீஷ்வரன், மோகன்ராஜ், மோகமத் நவாப், கார்த்திக், ஜனா, லோகநாதன், சங்கர், சர்தார் இப்ராகீம், ரபீக், மாயாண்டி, பழனிசாமி, வீரபத்திரன், கார்த்திக், சாந்தி, லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். #TamilMaanilaCongress
    ×