search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "asian cup football"

    • இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • முக்கிய நடுகள வீரர்களான ஜிக்சன் சிங், கிளான் மார்டின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

    புதுடெல்லி:

    ஆசியான் கோப்பை கால்பந்து போட்டி ஜனவரி 12-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை கத்தாரில் நடக்கிறது.

    இதில் 24 நாடுகள் பங்கேற்கிறார்கள். அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.

    'ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் கத்தார், சீனா, தஜிகிஸ்தான், லெபனான் அணிகளும், 'சி' பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு எமி ரேட்ஸ், ஆங்காங், பாலஸ் தீன், 'டி' பிரிவில் ஜப்பான், இந்தோனேசியா, ஈராக், வியட்னாம், 'இ' பிரிவில் தென்கொரியா, மலேசியா, ஜோர்டான், பக்ரைன், 'எப்' பிரிவில் சவுதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறும். கத்தாரில் உள்ள 5 நகரங்களில் 9 மைதானங்களில் இந்த போட்டி நடை பெறுகிறது.

    ஆசியான் கோப்பை கால் பந்து போட்டிகான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நடுகள வீரர்களான ஜிக்சன் சிங், கிளான் மார்டின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

    அதேநேரத்தில் காயத்தில் இருந்து மீண்டுள்ள சஹல் அப்துல் சமத் அணியோடு இணைந்து உள்ளார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    அமரிந்தர் சிங், குர்பிரீத் சிங் சாந்து, விஷால் சைத் (கோல் கீப்பர்கள்), ஆகாஸ் மிஸ்ரா, லால் சுங்னுங்கா, மெஹதாப் சிங், நிதில் புஜாரி, பிரித்தம் கோட்டல், ராகுல் பெகே, சந்தேஷ்ஜிங் கன், சுபாஷிஸ் போஸ் (பின்களம்), அணிருத் தாபா, பிராண் டன் பெர்னாண்டஸ், தீபக் தாங்ரி, லாலெங் மாவியா ரால்டே, லிஸ்டன் கொலாகோ, நாவ்ரெம் மகேஷ் சிங், சஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங், உதாந்த் சிங் (நடுகளம்), இஷான் பண்டிதா சாங்கே, மன்வீர் சிங், ராகுல் கனோலி பிரவீன், சுனில் சேத்ரி, விக்ரம் பிரதாப்சிங் (முன் களம்).

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 13-ந்தேதி எதிர் கொள்கிறது. உஸ்பெகிஸ்தானுடன் 18-ந்தேதியும், சிரியாவுடன் 23-ந்தேதியும் மோதுகிறது.

    • டி-பிரிவில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது.
    • ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்தியா தகுதி பெற்றது.

    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்  டி பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    இந்த தகுதி சுற்று போட்டியின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2 வது நிமிடத்தில் இந்திய அணியின் அன்வர் அலி ஒரு கோல் அடித்தார்.

    தொடர்ந்து 45 வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியின் 85வது நிமிடத்தில் மண்விர் சிங்கும், 93வது நிமிடத்தில் இஷான் பண்டிதாவும் கோல் அடித்தனர்.

    ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 29 ஆண்டுகள் கழித்து கால்பந்து போட்டியில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் டி-பிரிவு அணிகளில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்ததுடன் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது. 

    ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் யுஏஇ, பக்ரைன் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. #AsianCupfootball
    சார்ஜா

    4 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது. 

    இந்த நிலையில் தரவரிசையில் 97-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் 113-ம் நிலை அணியான பக்ரைன் அணியுடன் நேற்று மோதியது. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், பக்ரைன் அணி கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் இந்தியாவின் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை.

    கூடுதல் நேரத்தில் பக்ரைன் வீரர் ஜமார் ரஷீத் அடித்த ஒரு கோல் வெற்றி கோலாக மாறியது. இந்திய அணி வெறும் 3 புள்ளிகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. யுஏஇ, பக்ரைன் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. #AsianCupfootball
    ×