என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Animal Welfare Board"

    • நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன.
    • மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    மரக்காணம்:

    மரக்காணம் அருகே காக்காபாளையம் கிராமம் மேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் சுதாகர் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன. இதில் இரவு வெகுநேரமாகியும் ஒரு மாடு வீடு திரும்பவில்லை.

    இதனால் சுதாகர் அவரது மாட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது அவரது பசு மாடு குடல் சரிந்த நிலையில் இருந்தது. மர்ம நபர் யாரோ மாட்டின் வயிற்றில் குத்தியதால் குடல் வெளியில் வந்திருக்கும் என்று சந்தேகம் அடைந்த சுதாகர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடு உயிரிழந்தது.

    இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மாடு வளர்ப்போரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • இந்த வழக்கு தொடர்பாக இந்திய நலவாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.

    வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்திருந்தார்

    அந்த மனுவில், உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி. தரப்பில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, தனி நபர்கள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சந்தேகத்துக்கு இடமான வகையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக இந்திய நலவாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.

    ஆதலால் இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக ஜூன் 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    அந்த நாளில் இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • குரல் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் அசோக் ராஜ்.
    • விலங்குகள் அவசர ஊர்தியை (ஆம்புலன்சு) அளித்து பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் விலங்குகளை பாதுகாக்கும் குரல் அற்றவர்களின் குரல் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் அசோக் ராஜ்.

    இவர் நோயால் பாதிக்கப்பட்ட, விபத்தில் சிக்கிய நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை எடுத்து சென்று சிகிச்சை அளித்து பராமரிப்பு செய்து வருகிறார்.

    இவரது சேவையை பற்றி அறிந்த நடிகர் பாலா தன்னை யார் என அறிமுகம் செய்து கொள்ளாமல் கடந்த 2 நாட்களாக அசோக்ராஜை போனில் அழைத்து சந்திக்க வேண்டும் என்றும் உங்களால் காப்பாற்றி பராமரிக்கபடும் விலங்குகளை பார்க்க வேண்டும், என கூறியுள்ளார்.

    இந்த நிலையில் திடீரென புதுச்சேரி வந்த பாலா அசோக்ராஜை சந்தித்துள்ளார். அப்போது பாலா, விலங்குகளுக்கு நீங்கள் அளிக்கும் சேவையை கேள்வி பட்டேன். பல இன்னல்கள், வேதனைகளுடன் பல வருடங்களாக உங்கள் வாழ்க்கையே தியாகம் செய்து வரும் உங்களுக்கு, சரியான அங்கீகாரம் இல்லை என்பதை அறிந்தேன் என கூறி விலங்குகள் அவசர ஊர்தியை (ஆம்புலன்சு) அளித்து பாராட்டினார்.

    ஒரு கனம் செய்வதறியாது திகைத்த அசோக்ராஜ் ஆம்புலன்ஸ் சாவியை பெற்று கொண்டார். பின்னர் அவர் கூறும்போது,

    பல வருடங்களாக விலங்குகளுக்கு உதவி செய்வதாகவும், புழு பிடித்த, நாற்றம் வரும் நாய்களை 2 சக்கர வாகனத்தில் மருத்துவ உதவிக்கு எடுத்து சென்றதாகவும் புதுச்சேரியில் சிகிச்சை பெற முடியாத நாய்களை, சென்னைக்கு, வாடகை வண்டியில் எடுத்து சென்றேன்.

    தற்போது நடிகர் பாலா மூலமாக தனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×