search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alumni meeting"

    • வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவ -மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
    • 33 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் படித்தபோது நடந்த நிகழ்வுகளை பரிமாறி கொண்டனர்.

    பணகுடி:

    வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப்பள்ளியில் 1989-90-ம் ஆண்டு பிளஸ்- 2 வகுப்பில் பயின்ற மாணவ-மாணவிகளின் 33 ஆண்டுகளை கடந்த சந்திப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவ -மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 33 ஆண்டு களுக்கு பிறகு பள்ளியில் படித்த போது நடந்த நிகழ்வுகளை பரிமாறி கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பாடல் பாடியும், முன்னாள் மாணவியின் மகள் பரத நாட்டி யம் ஆடியும் சந்திப்பு நிகழ்ச்சியை வெகுவாக கவர்ந்தனர்.

    • மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1991-1992-ம் ஆண்டில் 10- ம் வகுப்பு படித்த மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் மாணவ- மாணவியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1991-1992-ம் ஆண்டில் 10- ம் வகுப்பு படித்த மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் எம். செந்தில்குமார் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சரவணன்காந்தன், சரவணகுமார், ராஜூ, வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் பழனிச்சாமி, ராமலிங்கம், ஆறுமுகம், கல்யாணி, உஷாராணி, ருத்ரமூர்த்தி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் 30 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட மாணவ-மாணவியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய பள்ளி பருவ நிகழ்வுகளையும் தற்போதைய குடும்ப நிகழ்வுகளையும் மகிழ்ச்சியையும் சந்தோஷமாக வெளிப்படுத்திக் கொண்டனர்.

    ஆசிரியர்கள் அப்பொழுது பள்ளி பருவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பேசினர்.

    பள்ளியில் படித்த நினைவாக மாணவி விஜயஸ்ரீ நினைவுப்பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் மோகன், முன்னாள் மாணவர்கள் வேலுச்சாமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவசாமி மற்றும் முன்னாள் மாணவ- மாணவியர்கள் 85 பேர் கலந்துகொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    மேலும் முன்னாள் மாணவ- மாணவியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    ×