search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after 30 years"

    • மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1991-1992-ம் ஆண்டில் 10- ம் வகுப்பு படித்த மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் மாணவ- மாணவியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1991-1992-ம் ஆண்டில் 10- ம் வகுப்பு படித்த மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் எம். செந்தில்குமார் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சரவணன்காந்தன், சரவணகுமார், ராஜூ, வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் பழனிச்சாமி, ராமலிங்கம், ஆறுமுகம், கல்யாணி, உஷாராணி, ருத்ரமூர்த்தி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் 30 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட மாணவ-மாணவியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய பள்ளி பருவ நிகழ்வுகளையும் தற்போதைய குடும்ப நிகழ்வுகளையும் மகிழ்ச்சியையும் சந்தோஷமாக வெளிப்படுத்திக் கொண்டனர்.

    ஆசிரியர்கள் அப்பொழுது பள்ளி பருவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பேசினர்.

    பள்ளியில் படித்த நினைவாக மாணவி விஜயஸ்ரீ நினைவுப்பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் மோகன், முன்னாள் மாணவர்கள் வேலுச்சாமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவசாமி மற்றும் முன்னாள் மாணவ- மாணவியர்கள் 85 பேர் கலந்துகொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    மேலும் முன்னாள் மாணவ- மாணவியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    ×