search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Water Opening"

    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பெரும்பாலான அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ப்படும் என அறிவிக்க ப்பட்டது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்டபோதிலும் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. வரத்து 1083 கன அடி. திறப்பு 1050 கன அடி. இருப்பு 5960 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.70 அடியாக உள்ளது. வரத்து 1053 கன அடி.திறப்பு 105 கன அடி. இருப்பு 4861 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடி. வரத்து 193 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 423 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 156 கன அடி. திறப்பு 156 கன அடி. நீர் இருப்பு 100 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று 11-வது நாளாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் 8 மி.மீ. மழையும், சோத்துப்பாறை அணையில் 6 மி.மீ. மழையும், மஞ்சளாறு அணை பகுதியில் 45 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
    கூடலூர்:

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் முல்லை பெரியாறு அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் அணை நீர்மட்டம் இந்த ஆண்டு 142 அடிவரை எட்டியது. எனவே கூடுதலாக தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையும் நிரம்பியது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருந்ததால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று 2,050 கனஅடி நீர் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 3,490 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் இன்று 67.21 அடியாக உள்ளது.

    பெரியாறு அணை நீர்மட்டம் 131.70 அடியாக உள்ளது. அணைக்கு 377 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து 1,867 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 115.29 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. திறப்பும் இல்லை.

    வைகை அணையில் 8 மி.மீ. மழையும், சோத்துப்பாறை அணையில் 6 மி.மீ. மழையும், மஞ்சளாறு அணை பகுதியில் 45 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #Veeranamlake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை யில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.



    தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய விட 774 கனஅடி அதிகமாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவான 45.50 அடியாக உள்ளது.

    தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதையொட்டி பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக குறைக்கப்பட்டது. இன்றும் அதேபோல் தொடர்ந்து 45.50 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் திறப்பு

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு நேற்று 676 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சேத்தியாதோப்பு அணைகட்டுக்கு இன்று 1100 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய விட 424 கன அடி அதிகமாகும்.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. #Veeranamlake


    ×