search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abstinence"

    • பூரண மதுவிலக்கிற்காக ச.ம.க. இறுதிவரை போராடும் என்று சரத்குமார் பேசினார்.
    • இந்தியாவின் இளை ஞர்களின் அறிவை முடக்கி வைப்பதில் வெளி நாட்டு சதி உள்ளது.

    மதுரை

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போதையால் இளைஞர்களின் அறிவு, ஆற்றல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.

    போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். போதை பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதனை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்தியாவின் இளை ஞர்களின் அறிவை முடக்கி வைப்பதில் வெளி நாட்டு சதி உள்ளது, போதை பொருள்கள் பல்வேறு ரூபங்களில் இந்தியாவில் ஊடுருவி வருகின்றது. மதுபான கடைகளுக்கு சென்று மதுபானங்கள் வாங்காமல் இருந்தால் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். அதன் மூலம் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்.

    மக்கள் நினைத்தால் மட்டுமே மதுவை முற்றிலுமாக ஒழிக்க முடியும். ரூ.40ஆயிரம் கோடி வருவாய்க்காக, மதுவை அரசு விற்க கூடாது, மதுபான வருவாய்க்கு மாற்றாக பிற வருவாய் என்ன கிடைக்கும் என தமிழக அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.

    அறிவு, ஆற்றல் இருந்தும் தமிழக இளைஞர்கள் மதுவால் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். பூரண மதுவிலக்கிற்காக சமத்துவ மக்கள் கட்சி இறுதி வரை போராடும். சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணி பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

    தமிழகத்தில் பணம் இல்லா அரசியல் நடைபெறவில்லை. தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல்கள் ராணுவ பாதுகாப்பில் நடைபெற வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் மக்களின் எண்ணங்கள் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்காக மாதந்தோறும் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் பொது க்கூட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார். மதுரை மாவட்ட செயலாளர்கள், புறாமோகன்(மத்தி), பாலமேடு கார்த்திக்(வடக்கு), மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கதிரேசன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சு, சிவாஜி, பூமிநாதன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர், முதன்மை துணை பொதுச்செயலாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட நிர்வாகிகள் விளக்க வுரையாற்றினர். முடிவில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரவி நன்றி கூறினார்.

    • மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்.
    • 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.

    சென்னை:

    மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராகவும், பூரண மது விலக்கை அமல்படுத்த கோரியும் சென்னை எழும்பூரில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு கட்சி தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார்.

    துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். தலைமை நிலைய துணை செயலாளர் அந்தோணி ராஜ் உறுதிமொழியை வாசித்தார்.

    ஆந்திர மாநில தென் மண்டல செயலாளர் லோகநாதன், மாணவர் அணி துணை செயலாளர் கிஷோர், வர்த்தகர் அணி செயலாளர் பெருமாள், இளைஞர் அணி செயலாளர் கிச்சா ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருவதாக கூறுகிறார்கள்.

    இதனை தடுக்க தற்போதுள்ள 1 லட்சம் போலீசார் போதாது. இதற்காக தனிப்படை அமைக்க வேண்டும். 36 ஆயிரம் கோடி வருவாய் மதுவால் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

    அதனை ஈடுகட்ட தொழில் வளத்தை மேம்படுத்தி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.

    அப்போது எப்படி சமாளித்தார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார்.

    ×