search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A tiger"

    • காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.
    • காளை மாட்டை புலி அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் ஊருக்குள் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் புலி நடமாட்டத்தை அறிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது. அதன் மூலம் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு தேவன் பகுதியில் கால்நடைகளை புலி கடித்துக் கொன்றது.

    தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு மேபீல்டு எஸ்டேட்ைட சேர்ந்தவர் ராஜூ. இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். பின்னர் அந்த மாடுகள் அனைத்தும் வீட்டிற்கு திரும்பி வந்தன. ஆனால் ஒரு காளை மாடு மட்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அவர் பல இடங்களில் தேடினார். அப் போது தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி காளை மாடு பலியாகி கிடந்தது.

    தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், மனோகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் வந்து இறந்து கிடந்த மாட்டை பார்வை யிட்டனர்.

    இந்த மாட்டை புலி அடித்துக் கொன்றது தெரிய வந்தது.இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காளை மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட ராஜூவுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே காளை மாட்டை புலி அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதோடு கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது.
    • புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாளாவடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. குறிப்பாக இந்த வனச்சரகத்தில் மான், யானை, புலி, காட்டெருமை, செந்நாய், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

    இந்த மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் நடமாடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது. இதை குளத்தின் மறுபக்கம் இருந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இந்நிலையில் புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×