search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர்சோலை அருகே மாட்டை அடித்துக்கொன்ற புலி
    X

    தேவர்சோலை அருகே மாட்டை அடித்துக்கொன்ற புலி

    • காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.
    • காளை மாட்டை புலி அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் ஊருக்குள் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் புலி நடமாட்டத்தை அறிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது. அதன் மூலம் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு தேவன் பகுதியில் கால்நடைகளை புலி கடித்துக் கொன்றது.

    தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு மேபீல்டு எஸ்டேட்ைட சேர்ந்தவர் ராஜூ. இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். பின்னர் அந்த மாடுகள் அனைத்தும் வீட்டிற்கு திரும்பி வந்தன. ஆனால் ஒரு காளை மாடு மட்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அவர் பல இடங்களில் தேடினார். அப் போது தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி காளை மாடு பலியாகி கிடந்தது.

    தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், மனோகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் வந்து இறந்து கிடந்த மாட்டை பார்வை யிட்டனர்.

    இந்த மாட்டை புலி அடித்துக் கொன்றது தெரிய வந்தது.இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காளை மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட ராஜூவுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே காளை மாட்டை புலி அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதோடு கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×