என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "OnePlus"
- ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என தகவல்.
- ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது 10-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் இதே நாளில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 12 தவிர ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12R என்ற பெயரில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தை பீட் லௌ மற்றும் கார்ல் பெய் இணைந்து டிசம்பர் 16, 2013-ம் ஆண்டு துவங்கினர். கடந்த ஆண்டுகளில் ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்து, சந்தையில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் பத்து ஆண்டுகளை கொண்டாட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் தனது வெய்போ அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. அதன்படி கொண்டாட்ட நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
ஒன்பிளஸ் 12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12 மாடலில் 6.82 இன்ச் LTPO AMOLED பேனல், 2K ப்ரோ எக்ஸ்.டி.ஆர். ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ GPU வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு சென்சார், 64MP 3x டெலிஃபோட்டோ ஜூம், OIS வழங்கப்படும் என்று தெரிகிறது.
- ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 6.3 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 7.82 இன்ச் மடிக்கக்கூடிய 2K OLED ஸ்கிரீன், 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.3 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் கோபால்ட் மோலிடெனம் அலாய் மற்றும் டைட்டானியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஹின்ஜ் சிர்கோனியம் சார்ந்த அமார்ஃபியஸ் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் ஓபன் அம்சங்கள்:
7.82 இன்ச் 2440x2268 பிக்சல் 2K AMOLED டிஸ்ப்ளே
6.31 இன்ச் 2484x1116 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
16 ஜி.பி. LPDDR5X ரேம், 512 ஜி.பி. UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13.2
டூயல் சிம் ஸ்லாட்
48MP பிரைமரி கேமரா, OIS
48MP அல்ட்ரா வைடு கேமரா
64MP டெலிஃபோட்டோ கேமரா
32MP கவர் ஸ்கிரீன் கேமரா
20MP செல்ஃபி கேமரா
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.3
4085 எம்.ஏ.ஹெச். பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
- இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் எனும் பெயரில் நாளை (அக்டோபர் 19) நடைபெற இருக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒப்போ ஃபைண்ட் N3 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனும் அக்டோபர் 19-ம் தேதியே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த மடிக்கக்கூடிய சாதனத்தின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் இது எமரால்டு டஸ்க் என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதன் முன்புறத்தில் 32MP மற்றும் 20MP செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 13.1 வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஓபன் மாடல் 4805 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடல் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை 1699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 405 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.
- மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
- ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 19-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிமுக நிகழ்வு மும்பையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனின் பெயரில் ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துவதோடு, ஒன்பிளஸ் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் கொண்டிருக்கும் விருப்பத்தை குறிக்கும் வகையில் அமைந்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதற்காக ஒன்பிளஸ் சூட்டி இருக்கும், "Open for Everything" என்ற வாக்கியத்தின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சாத்தியக்கூறுகள் அனைத்தையும் முயற்சிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.
ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 31 பாகங்கள் குறைவாக இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கும் என்றும் இது ஒப்போ ஃபைண்ட் N2 மாடலை விட 37 சதவீம் சிறியதாக இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஒப்போ ஃபைண்ட் N3 மற்றும் ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது.
- ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி இருக்கின்றன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் CAD ரெண்டர்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த மாதமே அறிமுகமாகும் என்று கூறப்படும் நிலையில், ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிரஸ் ரெண்டர்கள் வெளியாகி உள்ளன.
ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 31 பாகங்கள் குறைவாக இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கும் என்றும் இது ஒப்போ ஃபைண்ட் N2 மாடலை விட 37 சதவீம் சிறியதாக இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனரும் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஒப்போ ஃபைண்ட் N3 மற்றும் ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடல் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை 1699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 405 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.
Photo Courtesy: winfuture
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
- புதிய ஒன்பிளஸ் டேப்லெட் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் கோ விலை பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் பேட் கோ வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
புதிய டேப்லெட் பற்றி அந்நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டேப்லெட்-இன் படமும் "What's work without a little play" மற்றும் "Take a Guess" என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளியீட்டை உணர்த்துவதாகவே தெரிகிறது. வரும் நாட்களில் இந்த சாதனம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
What's work without a little play!Take a guess.#AllPlayAllDay pic.twitter.com/FrX0Lct3Zh
— OnePlus India (@OnePlus_IN) September 14, 2023
டிப்ஸ்டரான இஷான் அகர்வால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையின் பட்ஜெட் ரக டேப்லெட் மாடல்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாகவும், இந்த பிரிவில் முதல் டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய டேப்லெட் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் கோ மாடலை இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த மாடல் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்த மாடல்களின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
- புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.
- ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளது.
அதன்படி புதிய ஒன்பிளஸ் டேப்லெட் OPD2304 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் ஒன்பிளஸ் ஃபோரமிலும் இடம்பெற்று, பிறகு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவைதவிர இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டான்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) தளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இவை இந்த டேப்லெட் நிச்சயம் வெளியிடப்படும் என்பதை உணர்த்துகிறது.

இத்துடன் புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OP2304 மற்றும் OP2305 என இரண்டு மாடல் நம்பர்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த டேப்லெட் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவை வை-ஃபை மற்றும் செல்லுலார் வேரியண்ட்களை குறிக்கலாம்.
பி.ஐ.எஸ். தளத்தில் இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த சாதனம் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இத்துடன் 11.61 இன்ச் IPS LCD ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. UFS 3.1 மெமரி, 9510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வைத்திருப்போர் இதில் பயன்பெற முடியும்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்கள் தொர்ச்சியாக தெரிவித்துவந்த "கிரீன் லைன்" (Green Line) பிரச்சினைக்கு பதில் அளித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட இந்திய பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் பயனர்களுக்கு வாழ்நாள் முழுக்க ஸ்கிரீன் வாரண்டி வழங்கப்படுகிறது.
பல்வேறு ஒன்பிளஸ் பயனர்கள் AMOLED பேனல் கொண்ட தங்களது பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் "கிரீன் லைன்" பிரச்சினை இருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதே பிரச்சினை பல்வேறு சாதனங்களில் ஏற்பட்டு இருப்பதை அடுத்து, ஒன்பிளஸ் நிறுவனம் இதனை சரிசெய்வதற்காக வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டியை வழங்குகிறது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9R ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், அவற்றில் "கிரீன் லைன்" ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்தற்கான கட்டணம் வாரண்டியில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும்.
வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்பிளஸ் எக்ஸ்-க்ளூசிவ் சர்வீஸ் சென்டர்களில் ஒட்டப்பட்டு இருக்கும் நோட்டீஸ்களில், "கிரீன் லைன்" பிரச்சினை கொண்ட பயனர்கள் தங்களது சாதனத்திற்கு அப்கிரேடு முறையில் தள்ளுபடி பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் பாதிக்கப்பட்ட சாதனங்களை கொடுத்து புதிய ஒன்பிளஸ் மாடல்களை வாங்கிக் கொள்ள முடியும்.
இதற்கு பயனர்கள் சாதனத்தை ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் வாங்க வேண்டும். இந்த அறிவிப்பின் படி ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் வாங்கும் போது, ரூ. 4 ஆயிரத்து 500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Photo Coutersy: OnePlus Community
- ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் நார்டு CE 3 5ஜி 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு CE 3 5ஜி மற்றும் நார்டு 3 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை 15-ம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நார்டு CE 3 5ஜி மாடல் விற்பனை இதுவரை துவங்கப்படவில்லை.
இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலின் இந்திய விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி துவங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலின் விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 26 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வங்கி சலுகைகள், எக்சேன்ஜ் தள்ளுபடி உள்ளிட்டவைகளை சேர்த்து ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலை ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி அம்சங்கள்:
6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2412x1080 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட்
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
ஸ்னாப்டிராகன் 782ஜி பிராசஸர்
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
அதிகபட்சம் 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ லென்ஸ்
16MP செல்பி கேமரா
ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 13.1
டூயல் சிம்
5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு வெளியாகி உள்ளது.
- புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இது ஒன்பிளஸ் போல்டு அல்லது ஒன்பிளஸ் V போல்டு போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
எனினும், சமீபத்திய தகவல்களில் இந்த மாடல் ஒன்பிளஸ் ஒபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஒபன் தான் அந்நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனின் பெயராக இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் "We OPEN when others FOLD" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் இந்த பதிவை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் பெயரில் அறிமுகமாகும் என்று உறுதியாகி இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு CE 3 மற்றும் ஏஸ் 2 ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.