search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coffee tea"

    • 'பட்டர் காபி' என்று அழைக்கப்படும் 'புல்லட் புரூப் காபி', அதிக கலோரிகள் கொண்ட பானமாகும்.
    • பிரபலமாகப் பேசப்படும் 'புல்லட் புரூப் காபி' செய்முறை இதோ…

    'பட்டர் காபி' என்று அழைக்கப்படும் 'புல்லட் புரூப் காபி', அதிக கலோரிகள் கொண்ட பானமாகும். இதில் கூடுதல் கொழுப்புச்சத்து சேர்க்கப்படுகிறது. இதனால் அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றல் எளிதாகக் கிடைக்கும். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் எழுத்தாளருமான டேவ் ஆஸ்ப்ரே இந்த காபியை முதலில் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.

    கீட்டோ உணவு முறை மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்புபவர்களின் முதல் தேர்வு புல்லட் புரூப் காபி. இதில் முக்கிய மூலப் பொருளாக எம்.சி.டி (மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள்) எண்ணெய் எனப்படும் நடுத்தர சங்கிலி கொழுப்புத் தொடர்கள் கொண்ட எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதை தேங்காய் எண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கின்றனர். இதில் 50 சதவீதம் மட்டுமே கொழுப்புச்சத்து இருக்கும். சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பேசப்படும் 'புல்லட் புரூப் காபி' செய்முறை இதோ…

    தேவையான பொருட்கள்:

    விருப்பமான இன்ஸ்டன்ட் காபித்தூள் - 1½ டீஸ்பூன்

    சூடான தண்ணீர் - 1 கப்

    எம்.டி.சி எண்ணெய் அல்லது விர்ஜின் தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

    பசு நெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    சூடான தண்ணீரில் காபித்தூளைக் கொட்டி 2 முதல் 3 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.

    பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும்.

    இந்தக் கலவையை மிக்சி அல்லது பிளெண்டர் மூலம் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.

    விருப்பத்துக்கேற்ப இதில் பட்டைப்பொடி மற்றும் இந்துப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

    இதை ஒரு கோப்பையில் ஊற்றி சூடாகப் பருகலாம்.

    புல்லட் ப்ரூப் காபியை சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது. இதில் இருந்து உங்களுக்குத் தேவையான நல்ல கொழுப்பு மற்றும் கனிம சத்துக்கள் கிடைக்கும்.

    குறிப்பு: தண்ணீர் சூடாக இருப்பது அவசியம். அப்போதுதான் எண்ணெய் மற்றும் நெய் நன்றாக உருகி தண்ணீரில் கலக்கும்.

    • காபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் தடுக்கும்.
    • பட்டர் காபி குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது.

    தேவையான பொருட்கள்:

    தண்ணீர் - 1 கப்

    பால் - 1 கப்

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்

    காபி தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - சிறிதளவு

    செய்முறை:

    * தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த தண்ணீரில் காபித்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * பின்னர் அதில் நன்றாக கொதிக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.

    * அடுத்து உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அல்லது மிக்சியில் போட்டு இந்த கலவை மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் கலக்க வேண்டும்.

    * காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் வரும் போது எடுத்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.

    * அவ்வளவுதான் உங்கள் பட்டர் காபியை 10 நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.

    * பால் விரும்பாதவர்கள் பால் சேர்க்காமலும் செய்யலாம்.

    • இந்த காபி பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
    • சளி, இருமல் தொல்லை உள்ளவர்கள் இந்த காபியை அருந்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்,

    மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,

    சுக்கு - ஒரு துண்டு,

    கருப்பட்டி - தேவையான அளவு,

    துளசி - கைப்பிடி.

    செய்முறை :

    துளசி, கருப்பட்டி, காபிதூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும்.

    தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்றாக கொதி வந்ததும் 1 ஸ்பூன் இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்த்து இறக்கவும்.

    இறக்கி பிறகு, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.

    பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தினால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.

    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது.
    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. தினமும் இரண்டு கப் காபி பருகுவதன் மூலம் கல்லீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக 63 ஆயிரம் காபி பிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 45 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 ஆண்டுகளாக அவர்கள் பருகும் காபியின் அளவு பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதில் 114 பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்கள்.

    இதையடுத்து காபி அதிக அளவிலும், குறைந்த அளவிலும் பருகுபவர்களை தரம் பிரித்து சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இறுதியில் தினமும் இரண்டு கப் காபி பருகுவதுதான் உடல்நலத்திற்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

    அதேவேளையில் டீ, பழ ஜூஸ் போன்ற பானங்கள் பருகுவதற்கும் கல்லீரல் அழற்சி நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதுதான் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் அமெரிக்கர்கள்தான் கல்லீரல் அழற்சி நோயால் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். ஆனால் அடிக்கடி காபியை குடிப்பவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.
    சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் முடிந்தால் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது.

    காபி, டீ, கோகோ இவைகளில் காபின் என்ற பொருள் உள்ளது. இது சக்தியினை தூண்டி விடும் பொருள். காபியினை நிதான அளவில் குடிப்பவர்களுக்கு நடுக்குவாதம் எனப்படும் parkinsons நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

    அதே போல் அளவான காபி அருந்துபவர்களுக்கு மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் காபின் மூளை வீக்கத்தினைக் கூட தவிர்க்கின்றது என்று கூறியுள்ளன. வீக்கமே பல நோய்களுக்கு காரணம் எனப்படும் நிலையில் காபீனில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கங்களை குறைக்க உதவுவதாகவே சமீபத்திய ஆய்வு கூட கூறுகின்றது.

    நிதான அளவில் காபி குடிப்பவர்களுக்கு மனஉளைச்சல் குறைகின்றது. சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு குறைகின்றது. ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கூடுகின்றது.

    நிதான அளவு காபி இருதய பாதிப்பினால் ஏற்படும் இருதய அபாயத்தினைக் குறைக்கின்றது. சில குறிப்பிட்ட வகை புற்று நோய்களையும் 27 சதவீதம் வரை குறைக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    அப்படியென்றால் காபி நல்லதா? என்றால் நல்லது என்பதற்கு ஒரு அளவு கோல் இருக்கின்றது. இந்த, ஆய்வுகள் வெளி நாடுகளில் நடப்பவை. ‘சிக்கரி’ கலப்பு இல்லாதவை. காபி டிகாஷனும் அடர்த்தியாக இராது மெல்லியதாக இருக்கும். அவர்கள் குடிக்கும் காபியில் பால் கூட இராது. நம்ம ஊர் பழக்கம் அப்படி அல்ல.
    அடர்த்தியான டிகாஷன், தண்ணி கலக்காத அடர்த்தியான பால். காபி பொடி சிக்கரி கலந்தது. பல இடங்களில் காபி பொடியில் கலப்படங்கள் வேறு உள்ளன.

    டிகிரி காபி என்ற பெயரில் காபியினை கூழ் போல் ஒரு பெரிய டம்ளரில் குடிக்கின்றோம். அதுவும் ஒருமுறை அல்ல. அடிக்கடி குடிக்கின்றோம். இரவில் கூட காபி அருந்துபவர்கள் அநேகர் உண்டு. காலையிலும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக திராவகம் போல் இதனை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை இவ்வாறு செய்வதால் பின்பு தீமைகள் விளைகின்றன.

    காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள். பகல் 12 மணிக்கு மேல் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 மாரி பிஸ்கட்டுடனோ அருந்துங்கள். டிகிரி காபி உங்கள் வயிற்றை புண்ணாக்கி விடும் என்பதனை உணருங்கள்.  
    ×