search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 lakh"

    • திருப்பணி நடந்து, இறுதிக்கட்ட நிலையில் உள்ளன. தற்போது தரைத்தள சீரமைப்பு, யாக சாலை பணி நடக்கிறது.
    • அனைத்து பணியும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்கும்’ என்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனு டன் அருள்பாலிக்கிறார். சேலம், சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, திருப்பணி நடந்து, இறுதிக்கட்ட நிலையில் உள்ளன. தற்போது தரைத்தள சீரமைப்பு, யாக சாலை பணி நடக்கிறது. இதை தொடர்ந்து, வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

    இதற்கான யாகசாலை பூஜைகள் 1-ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, கணபதி ஹோமம், யாகசாலை நிர்மானம், யாக பூஜை, சாமிக்கு அஷ்டபந்தனம் உள்ளிட்டவை நடக்க உள்ளது. 7-ந்தேதி காலை, 6.30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு அனைத்து விமா னங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சாமி, அம்மன், விநாயகர், சுப்ரமணியர் கலசங்கள் புறப்பாடு நடக்க உள்ளது. 10.50 மணிக்கு விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், 11.15 மணிக்கு சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. தொடர்ந்து, அபிஷேகம், தீபாராதனை, திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடக்கும்.

    இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''சுகவனேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்கு, ரூ.98.50 லட்சம், சுற்றுச்சுவர் கட்ட ரூ.7.90 லட்சம் என, ஒரு கோடியே, 6 லட்சத்து, 40 ஆயிரம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 90 சதவீத பணி முடிந்துள்ளது. சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை, விநாயகர், சுப்ரமணியர், நடராஜர், பரிவாரங்களுக்கு, 54 குண்டங்கள் அமைத்து யாகம் நடக்க உள்ளது. 7-ந்தேதிக்குள் அனைத்து பணியும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்கும்' என்றனர்.

    • ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சி கடன் வழங்கப்பட்டது
    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு

    பெரம்பலூர்:

    மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சிக்கு கடன் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 265 மனுக்கள் பெறப்பட்டன.

    மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கணபதி, கலால் உதவி ஆணையர் ஷோபா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சரவணன் உட்பட அரசுத்துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பிர்களில் பண்ணை சாரா தொழில் புரிவோரை (டீக்கடை, மளிகை கடை, துணிக்கடை) மேம்படுத்தும் வகையில் முதல் கட்டமாக ஆலத்தூர் வட்டத்தில் 12 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சிக் கடனுக்கான காசோலைகளை கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வழங்கினார்.

    குறதைீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்த பள்ளிகளில் புகையிலை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    புகையிலை மற்றும் போைத பொருட்களை விற்பதால் ஏற்படும் விளைவுகள் மக்களுக்கு நேரிடும் பாதிப்புகள் ஆகியன குறித்து கிராமங்கள், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    • தமிழகம் முழுவதும் 6 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
    • பெற்றோர்கள் மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி நடந்தது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் கனவில் உதித்த "கல்லூரி கனவு" திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமாகும். கல்விக்காக இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. உயர்கல்வியில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது.

    10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் முறையே 5, 7 மற்றும் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டம் என்று அழைப்பதற்கு மாறாக முன்னேறி வரும் மாவட்டம் என்று அழைப்பதே சிறந்தது.

    பெற்றோர்கள் மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் கல்வியறிவை பெற அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்பு தரும் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு கல்வி கற்று முன்னேற வேண்டும்.

    உன்னால் முடியும் தம்பி என்று அண்ணா கூறியது போல் மாணவர்களால் முடியாதது எதுவும் இல்லை. பெண்களிடம் வரவேற்பை பெற்ற இலவச பஸ் பயணம் மூலம் நாள்தோறும் 62 சதவிகிதம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர்.தொழில் துறையில் தமிழகம் 17-வது இடத்தில் இருந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.

    அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் உள்ளாட்சி தேர்தலில் 98 சதவிகிதம் திராவிட மாடல் அரசு வெற்றி பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×