என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சி கடன் வழங்கல்
- ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சி கடன் வழங்கப்பட்டது
- மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு
பெரம்பலூர்:
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சிக்கு கடன் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 265 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கணபதி, கலால் உதவி ஆணையர் ஷோபா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சரவணன் உட்பட அரசுத்துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பிர்களில் பண்ணை சாரா தொழில் புரிவோரை (டீக்கடை, மளிகை கடை, துணிக்கடை) மேம்படுத்தும் வகையில் முதல் கட்டமாக ஆலத்தூர் வட்டத்தில் 12 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சிக் கடனுக்கான காசோலைகளை கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வழங்கினார்.
குறதைீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்த பள்ளிகளில் புகையிலை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
புகையிலை மற்றும் போைத பொருட்களை விற்பதால் ஏற்படும் விளைவுகள் மக்களுக்கு நேரிடும் பாதிப்புகள் ஆகியன குறித்து கிராமங்கள், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்