என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 2022 டி.வி.எஸ். ஐகியூப்
நீங்கள் தேடியது "2022ம் ஆண்டு"
இந்திய பொருளாதாரம் 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக, 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயரும் என பிரதமர் மோடி கூறினார். #IndianEconomy #NarendraModi #IICC #Delhi
புதுடெல்லி:
டெல்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்திய பொருளாதாரம் 8 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி அடையும். இதனால் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லரை விற்பனை துறையில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பெரும்பொருளாதார அடிப்படை, நல்ல வலுவாக உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “2022-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக, 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயரும். இதில் உற்பத்தித்துறையும், விவசாயத்துறையும் தலா 1 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டும்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து ஊக்குவித்ததின் காரணமாக இப்போது நாட்டில் உபயோகத்தில் உள்ள 80 சதவீத செல்போன்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக அமைந்துள்ளன.
இது ரூ.3 லட்சம் கோடி அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த உதவியாக அமைந்தது. மத்திய அரசு, தைரியமான முடிவுகளை எடுக்கிற துணிச்சலைக் கொண்டுள்ளது” எனவும் மோடி கூறினார்.
இந்த விழாவில் மோடி பேசும்போது, நாட்டின் 3-வது பெரிய வங்கியாக உருவாகிற வகையில் தேனா வங்கி, விஜயா வங்கி, பரோடா வங்கி ஆகிய 3 வங்கிகளை ஒரே வங்கியாக இணைக்கிற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருப்பதை சுட்டிக்காட்டினார். சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தவுலா குவான் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகேயுள்ள துவாரகாவுக்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். 14 நிமிட பயணத்துக்கு பின்னர் அவர் துவாரகா சென்றடைந்தார். விழா முடிந்த பின்னரும் அவர் மெட்ரோ ரெயிலில் திரும்பினார்.
பிரதமர் மோடி, டெல்லியில் மெட்ரோ ரெயில் பயணம் மேற்கொள்வது ஒன்றும் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. #IndianEconomy #NarendraModi #IICC #Delhi
டெல்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்திய பொருளாதாரம் 8 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி அடையும். இதனால் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லரை விற்பனை துறையில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பெரும்பொருளாதார அடிப்படை, நல்ல வலுவாக உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “2022-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக, 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயரும். இதில் உற்பத்தித்துறையும், விவசாயத்துறையும் தலா 1 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டும்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து ஊக்குவித்ததின் காரணமாக இப்போது நாட்டில் உபயோகத்தில் உள்ள 80 சதவீத செல்போன்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக அமைந்துள்ளன.
இது ரூ.3 லட்சம் கோடி அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த உதவியாக அமைந்தது. மத்திய அரசு, தைரியமான முடிவுகளை எடுக்கிற துணிச்சலைக் கொண்டுள்ளது” எனவும் மோடி கூறினார்.
இந்த விழாவில் மோடி பேசும்போது, நாட்டின் 3-வது பெரிய வங்கியாக உருவாகிற வகையில் தேனா வங்கி, விஜயா வங்கி, பரோடா வங்கி ஆகிய 3 வங்கிகளை ஒரே வங்கியாக இணைக்கிற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருப்பதை சுட்டிக்காட்டினார். சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தவுலா குவான் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகேயுள்ள துவாரகாவுக்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். 14 நிமிட பயணத்துக்கு பின்னர் அவர் துவாரகா சென்றடைந்தார். விழா முடிந்த பின்னரும் அவர் மெட்ரோ ரெயிலில் திரும்பினார்.
பிரதமர் மோடி, டெல்லியில் மெட்ரோ ரெயில் பயணம் மேற்கொள்வது ஒன்றும் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. #IndianEconomy #NarendraModi #IICC #Delhi
2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறினார். #Modi #House
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ (‘பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு’) திட்டத்தின் பயனாளிகளுடன் ‘நமோ ஆப்’ வழியாக நேற்று கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வீட்டு வசதித்துறைக்கு பாரதீய ஜனதா கூட்டணி அரசு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடுகிற 2022-ம் ஆண்டுக்குள், ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும்வகையில் செயல்பட்டு வருகிறோம்.
ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் சொந்த வீடு என்பது ஆசையாக உள்ளது. அப்படி ஒரு வீடு சொந்தமாக அமைகிறபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்.
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் என்பது வெறும் செங்கற்களும், சிமெண்டு கலவையும் அல்ல. அது மிகச்சிறப்பான வாழ்க்கை தரத்தையும், கனவுகளையும் நனவாக்குவதுதான்.
அனைவருக்கும் வீடு திட்டமானது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மலைவாழ் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம், மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.
இடைத்தரகர்களிடம் இருந்தும், ஊழல்வாதிகளிடம் இருந்தும் வீட்டு வசதித்துறையானது விடுபட வேண்டும் என்பதற்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். பயனாளிகள் எந்த தொந்தரவும் இன்றி வீடு கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய உழைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ (‘பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு’) திட்டத்தின் பயனாளிகளுடன் ‘நமோ ஆப்’ வழியாக நேற்று கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வீட்டு வசதித்துறைக்கு பாரதீய ஜனதா கூட்டணி அரசு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடுகிற 2022-ம் ஆண்டுக்குள், ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும்வகையில் செயல்பட்டு வருகிறோம்.
ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் சொந்த வீடு என்பது ஆசையாக உள்ளது. அப்படி ஒரு வீடு சொந்தமாக அமைகிறபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்.
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் என்பது வெறும் செங்கற்களும், சிமெண்டு கலவையும் அல்ல. அது மிகச்சிறப்பான வாழ்க்கை தரத்தையும், கனவுகளையும் நனவாக்குவதுதான்.
அனைவருக்கும் வீடு திட்டமானது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மலைவாழ் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம், மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.
இடைத்தரகர்களிடம் இருந்தும், ஊழல்வாதிகளிடம் இருந்தும் வீட்டு வசதித்துறையானது விடுபட வேண்டும் என்பதற்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். பயனாளிகள் எந்த தொந்தரவும் இன்றி வீடு கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய உழைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X