search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people who"

    • காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
    • 2 பேரையும் சென்னிமலை போலீசார் நேற்று விசாரணை நடப்பதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணி புரியும் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் நிறுவனத்திற்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ண ங்குடியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தற்போது இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் கன்னங்குடியை சேர்ந்த செல்வா என்கிற செல்வம் (வயது 27), விக்கி என்கிற விக்னேஷ் (வயது 24) ஆகி யோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து இவர்கள் 2 பேரையும் சென்னிமலை போலீசார் நேற்று விசாரணை நடப்பதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து விசாரி ப்பதற்காக பலத்த பாது காப்புடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவர்க ளது சொந்த ஊருக்கு போலீ சார் அழைத்து சென்றனர்.

    • கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • போலீசார் பூபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராஜாஜிபுரம் சுப்பையா தெரு அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்த போலீசார் அங்கு சென்ற போது கருங்கல்பாளையம் கே.என்.கே ரோடு பகுதியை சேர்ந்த பூபதி (46) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு நம்பரை வெள்ளை தாளில் எழுதி பரிசு விழும் என்று கூறி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் இருந்து 9 கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்பேத்கார் நகர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்றபோது ஆர்.என்.புதூர் அமராவதி நகரை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளைத்தாளில் எழுதி பரிசு பெறும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 2 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சித்தோடு போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×