search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "and interrogated"

    • காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
    • 2 பேரையும் சென்னிமலை போலீசார் நேற்று விசாரணை நடப்பதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணி புரியும் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் நிறுவனத்திற்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ண ங்குடியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தற்போது இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் கன்னங்குடியை சேர்ந்த செல்வா என்கிற செல்வம் (வயது 27), விக்கி என்கிற விக்னேஷ் (வயது 24) ஆகி யோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து இவர்கள் 2 பேரையும் சென்னிமலை போலீசார் நேற்று விசாரணை நடப்பதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து விசாரி ப்பதற்காக பலத்த பாது காப்புடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவர்க ளது சொந்த ஊருக்கு போலீ சார் அழைத்து சென்றனர்.

    ×