search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "105 வயது சிவகங்கை முதியவர்"

    இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 16-பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களித்தவர் என்ற பெருமை தமிழகத்தை சேர்ந்த 105 வயது தாத்தாவிற்கு கிடைத்துள்ளது. #LokSabhaElections2019
    திருச்சி:

    இந்தியாவில் அதிகமுறை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் என்ற பெருமை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மநாபனுக்கு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 16-பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களித்தவர் என்ற பெருமை தமிழகத்தை சேர்ந்த 105 வயது தாத்தாவிற்கு கிடைத்துள்ளது.

    தற்போது நடைபெற உள்ள தேர்தலோடு 17-வது பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர் என்ற பெருமையையும் பெறப்போகிறார் இந்த 105 வயது தாத்தா.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் அருகே ராயவரம் என்ற குக்கிராமம் உள்ளது. இங்குதான் வசிக்கிறார் 105 வயதான பழனியப்பா தாத்தா. 1914-ம் வருடம் டிசம்பர் 19-ந்தேதி பிறந்த பழனியப்பா தாத்தா அந்த பகுதியில் அனைவராலும் அய்யா என்றும், தாத்தா என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

    பழனியப்பா வருகிற ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்க தயாராகிறார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு சந்தித்த 16 பாராளுமன்ற பொதுத்தேர்தல்களிலும், தமிழ்நாட்டில் நடைபெற்ற 15 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் பழனியப்பா தாத்தா வாக்களித்துள்ளார்.



    இப்போது 17-வது பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப் போட தயாராகி வருகிறார் பழனியப்பா. இவர் வசிக்கும் ராயபுரம் கிராமம் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது. அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துள்ள பழனியப்பா, இளைஞர்களை தவறாமல் வாக்களிக்கும்படி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

    105 வயதிலும் தினமும் காலையில் எழுந்து வாக்கிங் செல்லும் பழனியப்பா வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்று வாக்களிக்கிறார். பழனியப்பா தான் இந்தியாவிலேயே மிக வயதான வாக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்தியாவில் நடைபெற்று வரும் அரசியல், சமூக நிகழ்வுகளை பார்த்து வரும் இவர் சுதந்திர இந்தியாவிற்கு பிறகு ஒரு தேர்தலில் கூட வாக்களிக்க தவறியதில்லை. இது குறித்து பழனியப்பாவின் பேரன் அருணாசலம் (60) கூறியதாவது:-

    எனது தாத்தா பழனியப்பனுக்கு 105 வயதாகிறது. தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை என்பதில் தாத்தா உறுதியாக இருப்பார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் நடந்து சென்றே வாக்களித்தார். இப்போதும் நடந்து சென்று தான் வாக்களிக்க உள்ளார்

    உடலை பராமரிப்பது, உணவு பழக்கம் கடைபிடிப்பது ஆகியவற்றில் இந்த பகுதி இளைஞர்களுக்கு தாத்தா பழனியப்பா முன்மாதிரியாக இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இந்த வயதிலும் தினமும் காலையில் எழுந்து நடைபயிற்சிக்கு செல்வார். அவரது வேலையை இப்போதும் அவரே செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு நூற்றாண்டை கடந்து விட்ட பழனியப்ப செட்டியாருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அதுவும் டோனி என்றால் டி.வி. முன்பு இருந்து நகர மாட்டார். தற்போது நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை தினமும் இரவு பார்த்துவிட்டு தான் தூங்குகிறார் பழனியப்ப தாத்தா.

    12-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிபெறும் என்று கூறும் பழனியப்பா 17-வது பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது மட்டும் ரகசியம் என்கிறார். முன்பு இருந்த வாக்குச்சீட்டு முறையைவிட எலக்ட்ரானிக் மெசின் வாக்குப்பதிவு செய்ய எளிதாக உள்ளது என்று நவீன முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    அனைவரும் வாக்களித்தால் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது தேர்வு செய்யப்படும் வேட்பாளர் தான் உண்மையிலேயே ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுதான் ஜனநாயகம். எனவே இளைஞர்கள் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். ஜனநாயக கடமையாற்றுங்கள் என தாத்தா பழனியப்ப செட்டியார் கூறுகிறார்.

    வாக்களிப்பது மட்டுமல்ல சமூகப்பணியாற்றுவதும் ஒவ்வொரு இளைஞனின் கடமை என்று கூறும் பழனியப்ப செட்டியார். ஏலக்காய், தேயிலைத்தோட்டம் வைத்துள்ளார். பழைய மாணவர் சங்கம், பள்ளி பாலிடெக்னிக் கல்லூரி, திருக்கோவில் நிர்வாகத்தலைவர் என பல பொறுப்புகளை 105 வயதிலும் சுமக்கிறார். ரூ.2 கோடியில் பள்ளிக்கு சொந்த நிதியில் கட்டிடம் கட்டி கொடுத்தது, திருமயம் பஸ் நிலையத்தில் ரூ.2.05 லட்சம் செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது என தன் வாழ்நாளில் உதவும் எண்ணத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். #LokSabhaElections2019
    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    சென்னை:

    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு முதல்நிலை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடி, 105 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் கிடைக்காததால் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.



    குறிப்பாக சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையை தொடர்ந்தனர்.

    கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வருமான வரித்துறையினர் சோதனையின்போது, செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    செய்யாத்துரை கணக்கு வைத்துள்ள வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்துள்ள பணபரிமாற்ற விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வங்கிகளில் இருந்து பெற்றுள்ளனர். அத்துடன் செய்யாத்துரை, அவரது மகன்கள் மற்றும் துணை நிறுவன நிர்வாகிகளின் வங்கி லாக்கர்களையும் திறந்து சோதனையிட வங்கி அதிகாரிகளிடம் முறையான அனுமதியை பெற்று வருகின்றனர்.

    இதுதவிர சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் செய்யாத்துரை தொடர்பான ஆவணங்களை தேடியபோது, ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணம் செய்யாத்துரைக்கு சொந்தமானதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

    அத்துடன் செய்யாத்துரை, அவருடைய மகன் நாகராஜ் மற்றும் அவர்களது நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், இயக்குனர்களிடம் நேரில் விசாரணை நடத்த வருமான வரித்துறை எண்ணியுள்ளது. இதற்காக செய்யாத்துரை உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வருமான வரித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த விசாரணையின்போது மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    செய்யாத்துரை மற்றும் அவரது நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கத்தை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பினாமி சொத்துகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    செய்யாத்துரை, நாகராஜிக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட 3 நிறுவனங்களும் தலா ரூ.10 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்த 3 நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.54 கோடியே 70 லட்சமாகும். இப்படி இருக்க தற்போது வரை எப்படி ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் இவர்களுக்கு வந்தது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

    செய்யாத்துரை மற்றும் நாகராஜிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சில தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இவர்களை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அத்துடன் செய்யாத்துரைக்கு தொழில் ரீதியாக மிக நெருக்கமாக இருப்பவர்களின் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதால், அவர்களையும் விசாரணைக்கு அழைப்பதற்காக அனைவருக்கும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணி ஓரிரு நாட்களில் நடைபெறும். இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் டி.வி.எச். நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது தீபக் என்பவருக்கு சொந்தமான கோவிலாம்பாக்கத்தில் உள்ள எவால்வு குளோத்திங் கம்பெனியிலும் வருமான வரி சோதனை நடந்ததாக தவறாக செய்தி வெளியானது. எவால்வு குளோத்திங் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் இல்லை என்றும், எவால்வு குளோத்திங் நிறுவனத்துக்கும், எஸ்.பி.கே. அல்லது டி.வி.எச். நிறுவனங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும் எவால்வு குளோத்திங் நிறுவன வக்கீல் டி.மோகன் தெரிவித்து உள்ளார்.

    மயிலாப்பூர் வீரபெருமாள் கோவில் தெருவில் உள்ள நாகராஜின் உதவியாளர் பூமிநாதன் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களையும், பணத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    அவருடைய பெற்றோரிடம் விசாரித்ததில், தனது மகன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது பைகளை எடுத்து வருவார். கம்பெனிக்கு சொந்தமான பொருட்கள் என்பதால் அவற்றை நாங்கள் என்ன ஏது என்று கேட்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டுவந்தார். அதில் என்ன இருக்கிறது என்று நாங்கள் கேட்கவில்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அந்த தெருவில் வசிப்பவர்களும் பூமிநாதன் பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டு வந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர்.

    மயிலாப்பூர், பங்கார அம்மாள் கோவில் தெருவில் வசித்து வரும் காரைக்குடியை சேர்ந்த நகை ஆசாரி முத்தையா என்பவர், பிரபல நகை கடைகளுக்கும், வெளிமாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கும் நகைகளை செய்து கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருடைய வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இங்கிருந்து ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    ×