என் மலர்
நீங்கள் தேடியது "வாகா எல்லை"
- மே 1ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
- விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைதொடர்ந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார்.
இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானுடனான வாகா எல்லையை உடனடியாக மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மே 1ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
மேலும், விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது.
சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வீடு, கோவில், முக்கியமான இடங்களில் தீபம் ஏற்றியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வரும் நிலையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களும் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகயை கொண்டாடி வருகிறார்கள். நாட்டு மக்களுக்கு தங்களுடைய தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அட்டாரி-வாகா எல்லையில் எல்லை பாதுகாப்புப்படை பெண் வீரர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.
வீரர் பூனம் சந்த் "நான் பி.எஸ்.எஃப். குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி வருகிறேன். எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்கள் பாட்டு பாடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.






