என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லக்கிம்பூர் வன்முறை"

    • விவசாயிகளின் காயத்தில் உப்பை தேய்த்தது போன்று பாஜக செயல்பட்டு இருக்கிறது
    • கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக விவசாயிகளுக்கு எதிரானவர்கள்

    விவசாயிகள் மீது விபத்து ஏற்படுத்தி கொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தை அஜய் மிஸ்ராவை, மக்களவை தேர்தலுக்காக லக்கிம்பூர் கேரி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    "விவசாயிகளின் காயத்தில் உப்பை தேய்த்தது போன்று பாஜக செயல்பட்டு இருக்கிறது. இந்த மக்களவை தேர்தலில் அஜய் மிஸ்ராவையும், பாஜகவையும் நாங்கள் ஒருசேர எதிர்க்க போகிறோம். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக விவசாயிகளுக்கு எதிரானவர்கள். விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் விவசாயிகள் சங்க தலைவர் சர்வான்சிங் பாந்தர் அறிவித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர். அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில் மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர்.

    அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் மகன் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். மொத்தமாக இந்தச் சம்பவங்களில் 8 பேர் வரை உயிரிழந்தனர்.

    அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    இதனையொட்டி, அஜய் மிஸ்ரா தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாஜக விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அஜய் மிஸ்ராவுக்கு பாஜக வாய்ப்பளித்ததை கண்டு விவசாயிகள் கோபமடைந்துள்ளனர். தனது வேட்பு மனுவை அவர் வாபஸ் பெற வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஒரு பக்கம் பாரத ரத்னா விருது கொடுத்து விட்டு, இன்னொரு பக்கம் விவசாயிகளை கொன்றவரின் தந்தைக்கு எம்.பி சீட்டு கொடுக்கிறது பாஜக. இது பாஜகவின் பாசாங்குத்தனம் என்று விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மிட்டல் தெரிவித்துள்ளார்.

    லக்கிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
    புதுடெல்லி:

    உத்தரப்  பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதாலும், அதன்பின்னர் நடந்த வன்முறையாலும் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ரா உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    வன்முறையாளர்களால் எரிக்கப்பட்ட கார்

    இந்த சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேச காவல்துறையின் விசாரணை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

    மேலும், உத்தரப் பிரதேச காவல் துறையின் தற்போதைய விசாரணையை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்த பரிந்துரைத்தார். இதற்கான பதிலை உத்தரப் பிரதேச அரசு வரும் வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்வரை, விசாரணையை மேற்பார்வையிட பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான ராகேஷ் குமார் ஜெயின் அல்லது ரஞ்சித் சிங் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்றம்.

    இதற்கிடையே, வீடியோ ஆதாரம் தொடர்பான தடயவியல் அறிக்கைகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதையும் அது கவனத்தில் கொண்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    லக்கிம்பூர் கேரி:

    உத்தர  பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த மாதம் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதாலும், அதன்பின்னர் நடந்த வன்முறையாலும் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

    விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை லக்கிம்பூர் கேரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணைக்கு பிறகு அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    காயமடைந்த பாஜக தொண்டர் ஷியாம் சுந்தர் நிஷாத், காவல் நிலையத்தில் இருப்பதுபோன்ற புகைப்படம் தொடர்பாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் கோரி, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக அரசுத் தரப்பு நீதிபதி திரிபாதி கூறினார்.

    பின்னர், அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் மீது கார் மோதியதையடுத்து, அவர் போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த புகைப்பட உருவாக்கம் தொடர்பாக அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. புகைப்படத்தன் நம்பகத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

    சில தடயவியல் அறிக்கைகள் இன்னும் வராததால், அரசுத் தரப்பில் மேலும் 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ×