என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ணையாரும் பத்மினியும்"

    • நடிகை துளசி பண்ணையாரும், பத்மினியும் படத்தின்மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
    • ஷீரடி சாய்பாபாவுடன் நிம்மதியான பயணத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்

    பழம்பெரும் நடிகை துளசி திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ஷீரடி சாய்பாபாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகை சாவித்ரி மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீதாலட்சுமி, சங்கராபரணம் ஆகிய படங்களுக்காக தெலுங்கு திரையுலகின் நந்தி விருதை இருமுறை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் வலம்வருகிறார். 

    இவர் நடித்த படங்களில் டிஸ்கோ சிங், நல்லவனுக்கு நல்லவன், சகலகலா வல்லவன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். தற்போதையை தலைமுறையினருக்கு தெரியவேண்டுமானால் பண்ணையாரும் பத்மினியும் படத்தைக் கூறலாம். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகையாக இருக்கும் இவர் கன்னட நடிகர் சிவமணியை திருமணம் செய்துகொண்டார்.  கடந்த வாரம் வெளியான லவ் ஓடிபி படத்தில் நடித்துள்ளார். 

    ஓய்வு குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது; 

    "டிசம்பர் 31 ம் தேதி எனது ஷீரடி தரிசனத்தின் தொடர்ச்சியாக, ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாதாவுடன் நிம்மதியாக தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி சாய்ராம்" என தெரிவித்துள்ளார். 

    அருண் குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பு பரிசீலனையில் உள்ளது. #VijaySethupathi #Anjali
    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுங்கா' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி தற்போது `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படம், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படத்திலும், அருண்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

    அருண்குமார் இயக்கத்தில் 2015-ல் வெளியான படம் சேதுபதி. விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.



    அந்த படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருக்கிறது. விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது. சேதுபதி 2 என்று பெயரிடப்படலாம் என்று செய்தி வந்த நிலையில், இப்போது `திருடாதே' அல்லது `மலைக்கள்ளன்' என 2 தலைப்புகளும் பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள். இரண்டுமே எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களின் தலைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #VijaySethupathi #Anjali

    அருண் குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென் தமிழகத்தில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து செல்லவிருக்கிறது. #VijaySethupathi #Anjali
    தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி `96', `சூப்பர் டீலக்ஸ்', `ஜூங்கா', `செக்க சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார். இதில் `ஜூங்கா' வருகிற ஜூலை 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    விஜய் சேதுபதி தற்போது `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படம், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படத்திலும், அருண்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

    இதில் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாகி வந்தது. இந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து மற்றும் மலேசியா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 



    கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். `பண்ணையாரும் பத்மினியும்', `சேதுபதி' படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - அருண்குமார் இருவரும் இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இதற்கிடையே விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்துள்ள `96' படத்தின் டீசர் இன்று ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VijaySethupathi #Anjali

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து அருண் குமார், விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. #VijaySethupathi #Anjali
    `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் `96', `சூப்பர் டீலக்ஸ்', `ஜூங்கா', `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', `செக்க சிவந்த வானம்' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதுதவிர ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படம், மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

    இதில் அருண் குமார்  இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி அருகே இலஞ்சியில் பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. இறைவி படத்தை தொடர்ந்து இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 



    `பண்ணையாரும் பத்மினியும்', `சேதுபதி' படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - அருண்குமார் இருவரும் இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். 

    மலேசியா மற்றும் தென் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #VijaySethupathi #Anjali

    ×