என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு"

    • இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
    • இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். பின்னர் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

    இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டியதால் டிரம்ப் பணிந்தார். இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக தெரிவித்தார்.

    இந்தநிலையில் இந்தியா மீதான 50 சதவீத வரிக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையை உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, டெபோரா ராஸ், மார்க் வீசே ஆகியோர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.

    அதில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்த அதிபர் டிரம்பின் தேசிய அவசர கால அறிவிப்பை முடி வுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக் கைகள் சட்டவிரோத மானவை மற்றும் அமெ ரிக்கத் தொழிலாளர்கள், நுகர்வோர், இருதரப்பு உறவுகளுக்குத் தீங்கு விளைவிப்பவை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் டெபோரா ராஸ் எம்.பி கூறும்போது, வட கரோலினாவின் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு ஆகியவை ஒரு இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.

    இந்திய நிறுவனங்கள் இந்த மாகாணத்தில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்து, உயிரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான வேலை களை உருவாக்கியுள்ளன.

    அதேபோல் வட கரோ லினா உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்றார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, இந்த வரிகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து அமெரிக்கத் தொழிலாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.

    மேலும் நுகர்வோருக்கான செலவுகளை அதிகரிக்கின்றன. இந்த வரி விதிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்கா- இந்தியா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என்றார். இந்த தீர்மானத்தில் பிரேசில் மீதான வரியையும் ரத்து செய்ய முன்மொழியப்பட்டு உள்ளது.

    • அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் என தெரிவித்தது.
    • ரஷியா மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக உள்ளது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது.

    எண்ணையை இந்தியா வாங்குதன் மூலம் அந்த நிதியை உன்ரைன் போரில் ரஷிய அதிபர் புதின் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை கூறி இந்த கூடுதல் வரியை விதித்துள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் முதலில் விதித்த 25 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் கடந்த மாத இறுதியில் கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பும் அமலுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் என தெரிவித்தது.

    இந்தநிலையில் இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியதாவது:-

    அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்கும் நாடுகளுக்கு மேலும் வரிகளை விதித்தால் ரஷிய பொருளாதாரம் சரிந்துவிடும். அதிபர் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்சும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உச்சுலா வானுடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    உச்சுலா என்னையும் தொடர்பு கொண்டு ரஷியா மீது அழுத்தம் கொடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்தார். ரஷியா மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

    உக்ரைன் ராணுவம் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? ரஷிய பொருளாதாரம் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? என்ற போட்டிதான் இப்போது இருக்கிறது. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். குறிப்பாக ரஷிய கச்சா எண்ணை வாங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க வேண்டும். அப்படி வரிகள் விதிக்கும்போது ரஷிய பொருளாதாரம் முற்றிலும் சரிந்துவிடும். அதுதான் ரஷிய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசென்டின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் இந்தியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் ரஷியாவிடம் இருந்து தற்போது இந்தியாவும், சீனாவும் தான் அதிகளவில் கச்சா எண்ணை வாங்கி வருகிறது.

    ஒரு வேளை அமெரிக்கா மேலும் கூடுதல் வரி விதித்தால் அது இந்தியாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைனுடான போர் தொடர்பாக அமெரிக்கா சமரச பேச்சு வார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது நேற்று ரஷியா நடத்திய கடும் வான்வழி தாக்குதல் அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தி உள்ளது. இதனால் ரஷியா மீது 2-ம் கட்டமாக பொருளாதார தடை தயாராக இருப்பதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்து இருக்கிறார். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க சீனா தயாராகி வருகிறது. #USTarriffs #ChinaGoods #ChinaUSTrade
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் தொடர்வதால் வர்த்தக உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. ஜனவரியில் இருந்து வரிவிதிப்பு 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.



    இந்த வரிவிதிப்புக்கு பதிலடி கொடுப்பதற்கு சீனாவும் தயாராகி வருகிறது. இது தொடர்பாக துணை பிரதமர் லியு ஹி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியானது அமெரிக்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், சீனாவிடம் போதிய நிதி மற்றும் நிதிக்கொள்கை திட்டங்கள் இருப்பதால் சீனாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் சீனா செக்யூரிட்டீஸ் ரெகுலேட்டரி கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த வர்த்தக மோதலை தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.

    வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதிக்குமேயானால், மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு வரியை கூட்டுவோம் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #USTarriffs #ChinaGoods #ChinaUSTrade
    ×