என் மலர்
கோவில்கள்
இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்.
கோவில் பெயர் : அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர்
அம்மனின் பெயர் : மரகதாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் :காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்,
சுருட்டப்பள்ளி, சித்தூர்-517 589, ஆந்திரா. Ph: 08576-278 599.
கோவில் சிறப்பு :
* 1000-3000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்
* தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.
* பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.
சிவனின் பெயர் : பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர்
அம்மனின் பெயர் : மரகதாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் :காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்,
சுருட்டப்பள்ளி, சித்தூர்-517 589, ஆந்திரா. Ph: 08576-278 599.
கோவில் சிறப்பு :
* 1000-3000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்
* தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.
* பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.
அனுமன் இளைப்பாற, அவருக்கு இத்தல இறைவனான முருகப்பெருமான், தன்னுடைய வேல் கொண்டு ஒரு சுனையை உண்டாக்கி, அனுமனின் தாகம் தீர்த்ததாக தல வரலாறு சொல்கிறது.
கோயம்புத்தூர் அருகே அமைந்துள்ளது, அனுவாவி மலை. இதன் அடிவாரத்தில் முருகப்பெருமானுக்கு திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. வடக்கே குருவிருட்ச மலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட திருக்கோவில் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்டதாக இந்த ஆலயம் விளங்குகிறது.
தல வரலாறு
ராமாயண காலத்திலேயே முருகப்பெருமான் வழிபாடு இருந்ததை, இந்த ஆலயத்தின் தல புராணம் நமக்கு எடுத்துரைக்கிறது. இலங்கையை அரசாண்ட ராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போய் சிறைவைத்திருந்தான். தனது மனைவியை மீட்பதற்காக, ராவணனுடன் போர் புரிந்தார், ராமபிரான். அவருக்கு பக்க பலமாக வானரப் படைகள் இருந்தன. ராவணப் படையோடு போரிட்ட வேளையில், ராவணனின் மகனால் விடப்பட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப் போனான். அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றால், சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகைகள் தேவைப்பட்டது. அதைக் கொண்டு வருவதற்காக, ஜாம்பவானால் அனுப்பிவைக்கப்பட்டார், அனுமன்.
மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால், மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார் அனுமன். வழியில் அவருக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது இங்கே அனுமன் இளைப்பாற, அவருக்கு இத்தல இறைவனான முருகப்பெருமான், தன்னுடைய வேல் கொண்டு ஒரு சுனையை உண்டாக்கி, அனுமனின் தாகம் தீர்த்ததாக தல வரலாறு சொல்கிறது. அனுமன் தாகம் தீர்க்கப்பட்ட தீர்த்தம் என்பதால், இது ‘அனுமக்குமரர் தீர்த்தம் என்றும், இந்த இடத்திற்கு ‘அனுமார்வாவி’ என்றும் பெயர் வந்தது. அனுமார்வாவி என்பதுதான், நாளடைவில் மருவி ‘அனுவாவி’ என்றானதாக சொல்கிறார்கள்.
அந்தக் காலத்தில் இம்மலையடிவாரத்தில் இருந்த தாமரைத் தடாகம் என்ற ஊரில் இருந்த ஜமீன்தார் ஒருவர், மலைப்பாதை அமைத்து இந்தக் கோவிலுக்கு உற்சவ மூர்த்திகளை செய்து கொடுத்தார். இத்தலத்துக்கு கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரில் அமைந்த விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து, ஒரு மரத்தின் வேர் இரு கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும், மற்றொன்றில் இருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அந்த வேரானது, அனுவாவியில் இருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர் என்பதையும் கண்டறிந்தார். ‘விண்ணாவரங் கொடி’, ‘விண்ணாடும் கொடி’ என்று பெயர் பெற்ற அக்கொடி, அனுவாவி தல விருட்சமான மாமரத்தில் படர்ந்திருப்பதை இன்றும் பார்க்க முடியும்.
1957-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில், இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்த இறைவனும், சில மரங்களும் காணாமல் போயின. வெள்ளத்தின் உக்கிரத்தை வென்று நின்றது, தற்போதைய தலவிருட்சமான மாமரம் மட்டுமே. பின்னர் இறைவன் திருவருளால், தெய்வ உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் பின் புதிய கோவில் அமைக்கப்பட்டு 1969-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தக் கோவிலை அடைய 500 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் மலை ஏறினால் முருகன் அருள்பாலிக்கும் ஆலயத்தை அடையலாம்.
மலைக்கோவிலுக்கு முன்பாக இடும்பன் சன்னிதி உள்ளது. கருவறையில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னிதியும் உள்ளது. அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமானும் அருள்புரிகிறார்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து வந்து இந்த ஆலயத்தில் உள்ள முருகனை வழிபடுகிறார்கள். இங்குள்ள தீர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக வந்து தொடர்ந்து சில நாட்கள் குளித்து வந்தால், மன நோய், தோல் நோய் அகலும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்.
அமைவிடம்
கோயம்புத்தூர் அருகே உள்ள உக்கடத்திற்கு அடுத்ததாக இந்த அனுவாவி கோவில் இருக்கிறது. ஆனைகட்டி செல்லும் வழி இதன் அருகில்தான் உள்ளது. அனுவாவி மலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் மருதமலை முருகன் கோவிலை அடையலாம்.
தல வரலாறு
ராமாயண காலத்திலேயே முருகப்பெருமான் வழிபாடு இருந்ததை, இந்த ஆலயத்தின் தல புராணம் நமக்கு எடுத்துரைக்கிறது. இலங்கையை அரசாண்ட ராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போய் சிறைவைத்திருந்தான். தனது மனைவியை மீட்பதற்காக, ராவணனுடன் போர் புரிந்தார், ராமபிரான். அவருக்கு பக்க பலமாக வானரப் படைகள் இருந்தன. ராவணப் படையோடு போரிட்ட வேளையில், ராவணனின் மகனால் விடப்பட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப் போனான். அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றால், சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகைகள் தேவைப்பட்டது. அதைக் கொண்டு வருவதற்காக, ஜாம்பவானால் அனுப்பிவைக்கப்பட்டார், அனுமன்.
மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால், மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார் அனுமன். வழியில் அவருக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது இங்கே அனுமன் இளைப்பாற, அவருக்கு இத்தல இறைவனான முருகப்பெருமான், தன்னுடைய வேல் கொண்டு ஒரு சுனையை உண்டாக்கி, அனுமனின் தாகம் தீர்த்ததாக தல வரலாறு சொல்கிறது. அனுமன் தாகம் தீர்க்கப்பட்ட தீர்த்தம் என்பதால், இது ‘அனுமக்குமரர் தீர்த்தம் என்றும், இந்த இடத்திற்கு ‘அனுமார்வாவி’ என்றும் பெயர் வந்தது. அனுமார்வாவி என்பதுதான், நாளடைவில் மருவி ‘அனுவாவி’ என்றானதாக சொல்கிறார்கள்.
அந்தக் காலத்தில் இம்மலையடிவாரத்தில் இருந்த தாமரைத் தடாகம் என்ற ஊரில் இருந்த ஜமீன்தார் ஒருவர், மலைப்பாதை அமைத்து இந்தக் கோவிலுக்கு உற்சவ மூர்த்திகளை செய்து கொடுத்தார். இத்தலத்துக்கு கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரில் அமைந்த விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து, ஒரு மரத்தின் வேர் இரு கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும், மற்றொன்றில் இருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அந்த வேரானது, அனுவாவியில் இருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர் என்பதையும் கண்டறிந்தார். ‘விண்ணாவரங் கொடி’, ‘விண்ணாடும் கொடி’ என்று பெயர் பெற்ற அக்கொடி, அனுவாவி தல விருட்சமான மாமரத்தில் படர்ந்திருப்பதை இன்றும் பார்க்க முடியும்.
1957-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில், இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்த இறைவனும், சில மரங்களும் காணாமல் போயின. வெள்ளத்தின் உக்கிரத்தை வென்று நின்றது, தற்போதைய தலவிருட்சமான மாமரம் மட்டுமே. பின்னர் இறைவன் திருவருளால், தெய்வ உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் பின் புதிய கோவில் அமைக்கப்பட்டு 1969-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தக் கோவிலை அடைய 500 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் மலை ஏறினால் முருகன் அருள்பாலிக்கும் ஆலயத்தை அடையலாம்.
மலைக்கோவிலுக்கு முன்பாக இடும்பன் சன்னிதி உள்ளது. கருவறையில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னிதியும் உள்ளது. அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமானும் அருள்புரிகிறார்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து வந்து இந்த ஆலயத்தில் உள்ள முருகனை வழிபடுகிறார்கள். இங்குள்ள தீர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக வந்து தொடர்ந்து சில நாட்கள் குளித்து வந்தால், மன நோய், தோல் நோய் அகலும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்.
அமைவிடம்
கோயம்புத்தூர் அருகே உள்ள உக்கடத்திற்கு அடுத்ததாக இந்த அனுவாவி கோவில் இருக்கிறது. ஆனைகட்டி செல்லும் வழி இதன் அருகில்தான் உள்ளது. அனுவாவி மலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் மருதமலை முருகன் கோவிலை அடையலாம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ‘அரை மலை’. இந்த மலை மீதுதான் குடவரைக் கோவில், ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே பாறையில் வெட்டப்பட்டதால், இது ‘வெட்டுவான் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
எல்லோராவில் உள்ள குகைச் சிற்பங்கள் சிறப்பு பெற்றவை. அதிலும் மலையின் மேல் பகுதியில் இருந்து கீழாக குடைந்து உருவாக்கப்பட்ட கயிலாசநாதர் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆலயம் சுமார் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கல்வெட்டு ஆதாரங்கள் சொல்கின்றன. இதே காலட்டத்தில், அதாவது 8-ம் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒரு குகைக் கோவில் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் எல்லோரா கயிலாசநாதர் கோவில் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை ‘தென்னகத்தின் எல்லோரோ’ என்று அழைக்கிறார்கள்.
அத்தகைய சிறப்புமிக்க திருத்தலமாக இருக்கிறது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ‘அரை மலை’. இந்த மலை மீதுதான் குடவரைக் கோவில், ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே பாறையில் வெட்டப்பட்டதால், இது ‘வெட்டுவான் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. நெடுஞ்சடைய வரகுண பாண்டியன் என்பவனின் ஆட்சி காலத்தில், கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்தக் கோவில் உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயமானது திராவிடக் கட்டுமான கலையமைப்பில் இருக்கிறது.
மலையின் மேல் பகுதியில் இருந்து கீழ் நோக்கி பாறையை செதுக்கி இந்தக் கோவிலை உருவாக்கி உள்ளனர். மலையில் கிடைமட்டத்தில் இருந்து 7.5 மீட்டர் ஆழத்தில் பாறையைச் செதுக்கி இருக்கிறார்கள். சிவபெருமானுக்காக இந்தக் கோவில் எழுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், இங்கு தற்போது விநாயகருக்குதான் வழிபாடு நடைபெறுகின்றன. இந்தக் கோவில் பணியானது, முழுமையாக நடைபெறவில்லை. இந்தக் கோவிலின் அடிப்பகுதி முற்றுபெறாமல் இருப்பதே இதற்குச் சான்றாக இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்தக் கோவிலில் சிவபெருமான் தவிர்த்து, பிரம்மா, திருமால், தேவ கன்னியர்கள், பூத கணங்களின் பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவில் முகப்பில் சிவபெருமானும், பார்வதியும் அரு கருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற அரிய காட்சி காண்பவர்களின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.
மேலும் மத்தளம் கொட்டும் தட்சிணாமூர்த்தி, விமானத்தை தாங்கும் பூத கணங்கள், விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மர், வடக்கில் பிரம்மன் இருக்கின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு கீழ் யாழி வரிசை உள்ளது. இந்தக் கோவிலுக்கு கருவறையும், அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன.
அரைமலையின் கிழக்கு பகுதியில்தான் இந்த வெட்டுவான் கோவில் இருக்கிறது. அதன் அருகில் தென் பகுதியில் சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நின்றசீர் நெடுமாறன் காலத்தில், இங்கு சமணர்கள் கழுவேற்றப்பட்ட காரணத்தால், இது ‘கழுமலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘கழுகுமலை’ என்று ஆகியிருக்கலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். சமணர்களின் முக்கியப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்தில் உள்ள மலையின் சரிவில், சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் சமணப் படுகைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு பல்வேறு சமணச் சிற்பங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் அதே எழிலுடன் காட்சியளிக்கின்றன. மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற பல தீர்த்தங்கரர்களின் சிற்பங்களால் இந்த மலை நிறைந்திருக்கிறது.
இது தவிர மலையின் அடிவாரப் பகுதியில் கழுகுமலை முருகன் கோவிலும் அமைந்திருக்கிறது. இதுவும் குடவரைக் கோவில்தான்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகுமலை. இங்கிருந்து வடக்கு நோக்கி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் ‘அரைமலை’யில் உள்ள வெட்டுவான் கோவிலை அடையலாம்.
அத்தகைய சிறப்புமிக்க திருத்தலமாக இருக்கிறது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ‘அரை மலை’. இந்த மலை மீதுதான் குடவரைக் கோவில், ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே பாறையில் வெட்டப்பட்டதால், இது ‘வெட்டுவான் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. நெடுஞ்சடைய வரகுண பாண்டியன் என்பவனின் ஆட்சி காலத்தில், கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்தக் கோவில் உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயமானது திராவிடக் கட்டுமான கலையமைப்பில் இருக்கிறது.
மலையின் மேல் பகுதியில் இருந்து கீழ் நோக்கி பாறையை செதுக்கி இந்தக் கோவிலை உருவாக்கி உள்ளனர். மலையில் கிடைமட்டத்தில் இருந்து 7.5 மீட்டர் ஆழத்தில் பாறையைச் செதுக்கி இருக்கிறார்கள். சிவபெருமானுக்காக இந்தக் கோவில் எழுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், இங்கு தற்போது விநாயகருக்குதான் வழிபாடு நடைபெறுகின்றன. இந்தக் கோவில் பணியானது, முழுமையாக நடைபெறவில்லை. இந்தக் கோவிலின் அடிப்பகுதி முற்றுபெறாமல் இருப்பதே இதற்குச் சான்றாக இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்தக் கோவிலில் சிவபெருமான் தவிர்த்து, பிரம்மா, திருமால், தேவ கன்னியர்கள், பூத கணங்களின் பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவில் முகப்பில் சிவபெருமானும், பார்வதியும் அரு கருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற அரிய காட்சி காண்பவர்களின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.
மேலும் மத்தளம் கொட்டும் தட்சிணாமூர்த்தி, விமானத்தை தாங்கும் பூத கணங்கள், விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மர், வடக்கில் பிரம்மன் இருக்கின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு கீழ் யாழி வரிசை உள்ளது. இந்தக் கோவிலுக்கு கருவறையும், அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன.
அரைமலையின் கிழக்கு பகுதியில்தான் இந்த வெட்டுவான் கோவில் இருக்கிறது. அதன் அருகில் தென் பகுதியில் சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நின்றசீர் நெடுமாறன் காலத்தில், இங்கு சமணர்கள் கழுவேற்றப்பட்ட காரணத்தால், இது ‘கழுமலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘கழுகுமலை’ என்று ஆகியிருக்கலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். சமணர்களின் முக்கியப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்தில் உள்ள மலையின் சரிவில், சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் சமணப் படுகைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு பல்வேறு சமணச் சிற்பங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் அதே எழிலுடன் காட்சியளிக்கின்றன. மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற பல தீர்த்தங்கரர்களின் சிற்பங்களால் இந்த மலை நிறைந்திருக்கிறது.
இது தவிர மலையின் அடிவாரப் பகுதியில் கழுகுமலை முருகன் கோவிலும் அமைந்திருக்கிறது. இதுவும் குடவரைக் கோவில்தான்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகுமலை. இங்கிருந்து வடக்கு நோக்கி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் ‘அரைமலை’யில் உள்ள வெட்டுவான் கோவிலை அடையலாம்.
இந்த கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோவிலில் உள்ள கோமதேஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகம் நடத்தப்படும்.
புகழ்பெற்ற கோமதேஸ்வரர் ஆலயம், கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் ஆன 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலை பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள சிலையின் வடிவமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை. வித்யகிரி என்று அழைக்கப்படும் குன்றின் மீது இந்த பிரமாண்டமான கோமதேஸ் வரர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இந்த கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோவிலில் உள்ள கோமதேஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகம் நடத்தப்படும். அப்போது கோமதேஸ்வரர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்.
இந்த திருவிழா 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கோமதேஸ்வரரை வழிபடுகிறார்கள். இங்குள்ள கோமதேஸ்வரரின் சிலையின் கலைநயம் உலகில் வேறு எங்குமில்லை.
எனவே சிறந்த ஆன்மிக தலமான இதன் புகழ் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஹாசனில் இருந்து 54 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது. அதுபோல, பெங்களூருவில் இருந்து துமகூரு மாவட்டம் குனிகல், எடியூர் வழியாக காரில் பயணம் செய்தால் 2 மணி நேரம் 40 நிமிடத்தில் இக்கோவிலை சென்றடையலாம்.
இந்த கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோவிலில் உள்ள கோமதேஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகம் நடத்தப்படும். அப்போது கோமதேஸ்வரர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்.
இந்த திருவிழா 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கோமதேஸ்வரரை வழிபடுகிறார்கள். இங்குள்ள கோமதேஸ்வரரின் சிலையின் கலைநயம் உலகில் வேறு எங்குமில்லை.
எனவே சிறந்த ஆன்மிக தலமான இதன் புகழ் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஹாசனில் இருந்து 54 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது. அதுபோல, பெங்களூருவில் இருந்து துமகூரு மாவட்டம் குனிகல், எடியூர் வழியாக காரில் பயணம் செய்தால் 2 மணி நேரம் 40 நிமிடத்தில் இக்கோவிலை சென்றடையலாம்.
மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமாக இந்த ஸ்ரீசக்கரம் விளங்குகின்றது. உலகை காத்தருளும் அம்பிகையானவள், ஈசனோடு சேர்ந்து மகா மேருவில் வீற்றிருப்பவள்.
அம்பாளின் திருத்தலங்கள் பலவற்றில், ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டிருப்பதை நாம் அறிந்திருப்போம். இந்த ஸ்ரீசக்கரங்களை அம்பிகையின் திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்தவராக ஆதிசங்கரரை நாம் பார்க்கிறோம். அம்பிகையின் உக்கிரத்தை தணிப்பதற்காக, சிவபெருமானால் உருவாக்கப்பட்டது, இந்த ஸ்ரீசக்கரம் என்று சொல்லப்படுகிறது. ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்பாக இந்த ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது. நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும், முக்கோணங்களுமாகத் தெரியும் இந்த ஸ்ரீசக்கரம், அம்பிகையின் சர்வ சக்தியும் பொருந்தியதாக திகழ்கிறது.
ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும், அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர். மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமாக இந்த ஸ்ரீசக்கரம் விளங்குகின்றது. உலகை காத்தருளும் அம்பிகையானவள், ஈசனோடு சேர்ந்து மகா மேருவில் வீற்றிருப்பவள். எனவே அந்த மகாமேருவின் உருவத்தையே இந்த ஸ்ரீசக்கரத்திலும் பொறிக்கிறார்கள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீ சக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.
பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.
கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன்பாகவும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன்பு உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன்பு இருக்கும் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தன்னுடைய ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும், மற்றொரு காதில் சிவசக்கர தாடங்கத்தையும் அணிந்துள்ளார்.
கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம், அந்த அன்னையின் முன்பாக ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம் தான்.
சென்னை-காளிகாம்பாள் ஆலயத்திலும் ஸ்ரீசக்கரம் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை-திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சன்னிதியிலும் ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சென்னை-நங்கநல்லூரில் ராஜராஜேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு திதி நித்யா தேவிகளின் சக்கரங்களும், விக்கிரகங்களும் இரு புறமும் இருக்க, 16 படிகளின் மேல் மகாமேருவுடன் வீற்றிருக்கிறாள், அன்னை.
திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்கரத்தை தனி சன்னிதியில் தரிசிக்கலாம்.
தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும் வராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியர் பதினைந்து பேரும் எந்திர வடிவாக அருள்கிறார்கள்.
திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சன்னிதி ஸ்ரீசக்கர வடிவில் அமைந்திருக்கிறது.
மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலசுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்கரம் வைத்து வழிபடப்படுகிறது.
திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன்பு மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.
புன்னைநல்லூர் மாரியம்மனின் முன்பாகவும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இதனை பிரதிஷ்டை செய்தவர், சதாசிவபிரம்மேந்திரர் என்ற மகான்.
ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும், அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர். மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமாக இந்த ஸ்ரீசக்கரம் விளங்குகின்றது. உலகை காத்தருளும் அம்பிகையானவள், ஈசனோடு சேர்ந்து மகா மேருவில் வீற்றிருப்பவள். எனவே அந்த மகாமேருவின் உருவத்தையே இந்த ஸ்ரீசக்கரத்திலும் பொறிக்கிறார்கள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீ சக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.
பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.
கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன்பாகவும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன்பு உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன்பு இருக்கும் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தன்னுடைய ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும், மற்றொரு காதில் சிவசக்கர தாடங்கத்தையும் அணிந்துள்ளார்.
கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம், அந்த அன்னையின் முன்பாக ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம் தான்.
சென்னை-காளிகாம்பாள் ஆலயத்திலும் ஸ்ரீசக்கரம் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை-திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சன்னிதியிலும் ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சென்னை-நங்கநல்லூரில் ராஜராஜேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு திதி நித்யா தேவிகளின் சக்கரங்களும், விக்கிரகங்களும் இரு புறமும் இருக்க, 16 படிகளின் மேல் மகாமேருவுடன் வீற்றிருக்கிறாள், அன்னை.
திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்கரத்தை தனி சன்னிதியில் தரிசிக்கலாம்.
தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும் வராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியர் பதினைந்து பேரும் எந்திர வடிவாக அருள்கிறார்கள்.
திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சன்னிதி ஸ்ரீசக்கர வடிவில் அமைந்திருக்கிறது.
மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலசுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்கரம் வைத்து வழிபடப்படுகிறது.
திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன்பு மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.
புன்னைநல்லூர் மாரியம்மனின் முன்பாகவும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இதனை பிரதிஷ்டை செய்தவர், சதாசிவபிரம்மேந்திரர் என்ற மகான்.
கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்து அமைந்துள்ளது சுவாமிமலை திருத்தலம். இங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கூனஞ்சேரி திருத்தலம். இது மிகவும் சிறப்பு மிக்க சிவாலயத் தலமாகும். திவ்ய தேசங்களான புள்ளபூதங்குடி மற்றும் ஆதனூர் ஆகிய இரண்டு வைணவத் தலங்களுக்கு இடையே இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு
முன் காலத்தில் தானவ மகரிஷி என்பவர், தண்ட காருண்ய வனத்தில் தனது மனைவியுடன் இல்லற தர்மத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக புத்திரப் பேறு இல்லை. இதனால் அந்த தம்பதியர் சிவபெருமானை வேண்டிவந்தனர். இதை அடுத்து தானவ மகரிஷி கனவில் தோன்றிய ஈசன், “ஏழைச் சிறுவர்களுக்கு வேத ஆகமங்களைப் போதித்து வந்தால், விரைவில் புத்திரன் பிறப்பான்” என்று அருள்வாக்கு கூறினார். அதன்படியே ஏழைச் சிறுவர்களுக்கு, வேதங்களை போதித்து வந்தார், தானவ மகரிஷி. இதன் பலனாக தானவ மகரிஷியின் மனைவி சில காலத்திலேயே கருத்தரித்தாள்.
தானவ மகரிஷி மனைவி கர்ப்பவதியாக இருந்த காலத்தில் ஒரு நாள், தானவ மகரிஷி தன்னுடைய மாணவர்களுக்கு வேதங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அதைக் கண்ட மகரிஷி, அந்த மாணவனை எழுப்பி திட்டினார். அப்போது அவரது அருகில் நின்ற மனைவியின் வயிற்றில் இருந்த கரு விழித்துக் கொண்டது. அது, “தகப்பனாரே.. இரவு, பகலும் ஓய்வின்றி பிள்ளைகளுக்குப் பாடம் போதித்து வந்தால் பிள்ளைகள் தூங்கத்தானே செய்வார்கள்? வேதம் போதிக்கும் குருவான உங்களுக்கு இதுகூடவா தெரியவில்லை?” என்றது.
தன்னை எதிர்த்துப் பேசுவது தன் வாரிசு என்றும் பார்க்காமல், “நீ பிறப்பதற்கு முன்பே அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கிறாயா? வளைந்த கேள்விக்குறி போலவே, நீ அஷ்டகோணலாகப் பிறக்கக் கடவாய்” என்று சாபம் கொடுத்தார். இதனால் அந்தக் குழந்தைப் பிறந்தபோது, அஷ்ட கோணலாக பிறந்தது. உடலில் எட்டு வளைவுகளுடன் பிறந்ததால், அந்தக் குழந்தை ‘அஷ்ட வக்கிரன்’ என்றே அழைக்கப்பட்டது.
அஷ்ட வக்கிரரின் பிறப்புக்கு இன்னொரு கதையும் சொல்வார்கள். அதாவது ஈசனின் அருளால் கருவானவர் என்பதால், தானவ மகரிஷியின் குழந்தை கருவிலேயே நல்ல ஞானம் பெற்றிருந்தது. தானவ மகரிஷி வேத அறிவில் அவ்வளவு சிறந்தவரல்லர். அதனால் அவர் தன்னுடைய குரு உபதேசித்த மந்திரங்களை, தப்பும் தவறுமாக தனிமையில் அமர்ந்து சொல்வார். இதை தாயின் கருவில் இருந்து கேட்கும் குழந்தை, தன்னுடைய உடலை அஷ்ட கோணலாக மாற்றிக்கொண்டதாகவும், அப்படியே பிறந்ததாகவும் ஒரு கதை உண்டு.
அஷ்டவக்கிரர் தன்னுடைய புலமையின் காரணமாக, ஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஆஸ்தான பண்டிதராக இருந்தவரை வாக்குவாதத்தில் வென்று பெரும் புகழை அடைந்தவர். இவர் தன்னுடைய உடலில் அஷ்ட கோணல்களும் நீங்கப்பெற்ற திருத்தலமாக கூனஞ்சேரி திகழ்கிறது. இங்கு அவர் எட்டு பைரவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதன் பலனாக தன்னுடைய அங்க குறைபாடுகள் நீங்கப்பெற்றார். இதனால் இந்த ஊர், ‘கூன் நிமிர்ந்தபுரம்’ என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் ‘கூனஞ்சேரி’ என்று மாறியிருக்கிறது.
இந்தக் கோவிலில் சிவபெருமான், ‘கயிலாசநாதர்’ என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் ‘பார்வதி’ என்பதாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. அதன் அருகில் ஜடாமகுட சவுந்தர்ய நாயகி என்று அழைக்கப்படும் அம்மன் சன்னிதியும் இருக்கிறது.
கோவிலின் வடக்கு பிரகாரத்தில், கிழக்கு நோக்கியபடி பைரவ மூர்த்தியின் பார்வையுடன் இந்த எட்டு சிவலிங்கங்களும் அஷ்ட வக்கிரரால் நிறுவப்பட்டுள்ளன. இவை பஞ்ச பூதங்கள் மற்றும் சூரிய, சந்திரன், ஆன்மா ஆகியவற்றை குறிப்பதாக உள்ளன. பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவையே அந்த அஷ்ட லிங்கங்கள்.
உடல் ஊனமுற்றவர்கள், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால், அங்க குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. தொடர்ந்து 11 அஷ்டமி தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் அஷ்டமியன்று, கோவிலில் உள்ள விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 2-வது அஷ்டமி அன்று, கயிலாசநாதரையும், 3-வது அஷ்டமி முதல் தொடர்ந்து எட்டு அஷ்டமிகள் அஷ்ட லிங்கங்களையும், இறுதியாக 11 அஷ்டமி அன்று பார்வதி தேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அங்க குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள்.
தல வரலாறு
முன் காலத்தில் தானவ மகரிஷி என்பவர், தண்ட காருண்ய வனத்தில் தனது மனைவியுடன் இல்லற தர்மத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக புத்திரப் பேறு இல்லை. இதனால் அந்த தம்பதியர் சிவபெருமானை வேண்டிவந்தனர். இதை அடுத்து தானவ மகரிஷி கனவில் தோன்றிய ஈசன், “ஏழைச் சிறுவர்களுக்கு வேத ஆகமங்களைப் போதித்து வந்தால், விரைவில் புத்திரன் பிறப்பான்” என்று அருள்வாக்கு கூறினார். அதன்படியே ஏழைச் சிறுவர்களுக்கு, வேதங்களை போதித்து வந்தார், தானவ மகரிஷி. இதன் பலனாக தானவ மகரிஷியின் மனைவி சில காலத்திலேயே கருத்தரித்தாள்.
தானவ மகரிஷி மனைவி கர்ப்பவதியாக இருந்த காலத்தில் ஒரு நாள், தானவ மகரிஷி தன்னுடைய மாணவர்களுக்கு வேதங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அதைக் கண்ட மகரிஷி, அந்த மாணவனை எழுப்பி திட்டினார். அப்போது அவரது அருகில் நின்ற மனைவியின் வயிற்றில் இருந்த கரு விழித்துக் கொண்டது. அது, “தகப்பனாரே.. இரவு, பகலும் ஓய்வின்றி பிள்ளைகளுக்குப் பாடம் போதித்து வந்தால் பிள்ளைகள் தூங்கத்தானே செய்வார்கள்? வேதம் போதிக்கும் குருவான உங்களுக்கு இதுகூடவா தெரியவில்லை?” என்றது.
தன்னை எதிர்த்துப் பேசுவது தன் வாரிசு என்றும் பார்க்காமல், “நீ பிறப்பதற்கு முன்பே அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கிறாயா? வளைந்த கேள்விக்குறி போலவே, நீ அஷ்டகோணலாகப் பிறக்கக் கடவாய்” என்று சாபம் கொடுத்தார். இதனால் அந்தக் குழந்தைப் பிறந்தபோது, அஷ்ட கோணலாக பிறந்தது. உடலில் எட்டு வளைவுகளுடன் பிறந்ததால், அந்தக் குழந்தை ‘அஷ்ட வக்கிரன்’ என்றே அழைக்கப்பட்டது.
அஷ்ட வக்கிரரின் பிறப்புக்கு இன்னொரு கதையும் சொல்வார்கள். அதாவது ஈசனின் அருளால் கருவானவர் என்பதால், தானவ மகரிஷியின் குழந்தை கருவிலேயே நல்ல ஞானம் பெற்றிருந்தது. தானவ மகரிஷி வேத அறிவில் அவ்வளவு சிறந்தவரல்லர். அதனால் அவர் தன்னுடைய குரு உபதேசித்த மந்திரங்களை, தப்பும் தவறுமாக தனிமையில் அமர்ந்து சொல்வார். இதை தாயின் கருவில் இருந்து கேட்கும் குழந்தை, தன்னுடைய உடலை அஷ்ட கோணலாக மாற்றிக்கொண்டதாகவும், அப்படியே பிறந்ததாகவும் ஒரு கதை உண்டு.
அஷ்டவக்கிரர் தன்னுடைய புலமையின் காரணமாக, ஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஆஸ்தான பண்டிதராக இருந்தவரை வாக்குவாதத்தில் வென்று பெரும் புகழை அடைந்தவர். இவர் தன்னுடைய உடலில் அஷ்ட கோணல்களும் நீங்கப்பெற்ற திருத்தலமாக கூனஞ்சேரி திகழ்கிறது. இங்கு அவர் எட்டு பைரவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதன் பலனாக தன்னுடைய அங்க குறைபாடுகள் நீங்கப்பெற்றார். இதனால் இந்த ஊர், ‘கூன் நிமிர்ந்தபுரம்’ என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் ‘கூனஞ்சேரி’ என்று மாறியிருக்கிறது.
இந்தக் கோவிலில் சிவபெருமான், ‘கயிலாசநாதர்’ என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் ‘பார்வதி’ என்பதாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. அதன் அருகில் ஜடாமகுட சவுந்தர்ய நாயகி என்று அழைக்கப்படும் அம்மன் சன்னிதியும் இருக்கிறது.
கோவிலின் வடக்கு பிரகாரத்தில், கிழக்கு நோக்கியபடி பைரவ மூர்த்தியின் பார்வையுடன் இந்த எட்டு சிவலிங்கங்களும் அஷ்ட வக்கிரரால் நிறுவப்பட்டுள்ளன. இவை பஞ்ச பூதங்கள் மற்றும் சூரிய, சந்திரன், ஆன்மா ஆகியவற்றை குறிப்பதாக உள்ளன. பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவையே அந்த அஷ்ட லிங்கங்கள்.
உடல் ஊனமுற்றவர்கள், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால், அங்க குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. தொடர்ந்து 11 அஷ்டமி தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் அஷ்டமியன்று, கோவிலில் உள்ள விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 2-வது அஷ்டமி அன்று, கயிலாசநாதரையும், 3-வது அஷ்டமி முதல் தொடர்ந்து எட்டு அஷ்டமிகள் அஷ்ட லிங்கங்களையும், இறுதியாக 11 அஷ்டமி அன்று பார்வதி தேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அங்க குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, கோடி லிங்கேஸ்வரர் கோவில். கோவிலின் சிறப்பு அம்சமாக, மிக உயரமான 108 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக சிவன் கோவில்களில் மூலவர் சிவலிங்கம் தவிர்த்து ஆலயத்தைச் சுற்றிலும் ஒன்றிரண்டு சிவலிங்கங்கள் இருக்கக்கூடும். ஒரு சில ஆலயங்களில் மூலவர் லிங்கத்தைத் தவிர்த்து பஞ்ச லிங்க சன்னிதி என்ற வகையில் ஐந்து லிங்கங்கள் அமைந்திருக்கலாம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் கோடிக்கும் அதிகமாக லிங்கங்கள் இருப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. ஆலயத்திற்குள் நுழைந்ததாலே எந்தப் பக்கம் திரும்பினாலும் சிவலிங்கங்கள்தான் காணப்படுகின்றன. ஆலயத்தின் பெயரே ‘கோடிலிங்கேஸ்வரர்’ கோவில் தான்.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில். இங்கு உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்னும் வகையில், 108 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. இதைத் தவிர்த்து, கோவில் முழுவதும் பல்வேறு அளவுகளில் சிறியதும், பெரியதுமாக, ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கு தான் 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதன் காரணமாக ஆலயத்திற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் சாம்பசிவமூர்த்தி என்பவரால் முதல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு சிவலிங்கத்தை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கி விட்டனர். இவ்வாறு பல்கிப் பெருகியதன் காரணமாக இப்போது ஒரு கோடிக்கும் அதிகமான சிவலிங்கங்கள் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. இப்போதும் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் அனைவரும் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துதான் இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் 108 அடி உயரத்தில் மிகப்பெரிய சிவலிங்கமும், அதற்கு நேர் எதிரில் 35 அடி உயரம் கொண்ட நந்தி சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில் வளாகத்தில் பிரம்மதேவர், மகாவிஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, சீதாதேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கருமாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.
இதில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சன்னிதிக்குள் ‘சிவ பஞ்சயாதி’ என்னும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தைச் சுற்றிலும் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், பார்வதி மற்றும் நந்தி ஆகியோர் நின்று வணங்குவது போன்ற அமைப்பு உள்ளது.
கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டு நாகலிங்க மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், மணமானவர்கள் மணவாழ்க்கை இடையூறு இன்றி இன்பமாக அமைய வேண்டியும் சிவபெருமானை வேண்டிக்கொண்டு, இந்த நாகலிங்க மரங்களில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரண்டு வேளைகளில், 10 அர்ச்சகர்களால் மேளதாளங்கள் முழங்க பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும், நாள் தவறாமல் பூஜைகள் நடைபெறுவது சிறப்புக்குரிய விஷயமாகும்.
இந்தக் கோவிலில் வித்தியாசமான வழிபாட்டு முறை ஒன்றை வழக்கத்தில் இருக்கிறது. அது சிவலிங்க பிரதிஷ்டை வழிபாடு ஆகும். தங்கள் வேண்டுதல் நிறைவேற நினைக்கும் பக்தர்கள், தங்களால் முடிந்த அளவில் வெவ்வேறு அளவுகளில் சிவலிங்கத்தை செய்து கொண்டு வந்து, இந்தக் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கங்கள், அந்தந்த பக்தர்களின் பெயரிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறு கிறது. 108 அடி உயர சிவலிங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
கோலார் தங்கச்சுரங்கத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. பெங்களூருவில் இருந்து கோலார்பங்கார்பெட்டை வழியாக இந்தக் கோவிலை அடையலாம்.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில். இங்கு உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்னும் வகையில், 108 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. இதைத் தவிர்த்து, கோவில் முழுவதும் பல்வேறு அளவுகளில் சிறியதும், பெரியதுமாக, ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கு தான் 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதன் காரணமாக ஆலயத்திற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் சாம்பசிவமூர்த்தி என்பவரால் முதல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு சிவலிங்கத்தை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கி விட்டனர். இவ்வாறு பல்கிப் பெருகியதன் காரணமாக இப்போது ஒரு கோடிக்கும் அதிகமான சிவலிங்கங்கள் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. இப்போதும் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் அனைவரும் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துதான் இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் 108 அடி உயரத்தில் மிகப்பெரிய சிவலிங்கமும், அதற்கு நேர் எதிரில் 35 அடி உயரம் கொண்ட நந்தி சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில் வளாகத்தில் பிரம்மதேவர், மகாவிஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, சீதாதேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கருமாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.
இதில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சன்னிதிக்குள் ‘சிவ பஞ்சயாதி’ என்னும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தைச் சுற்றிலும் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், பார்வதி மற்றும் நந்தி ஆகியோர் நின்று வணங்குவது போன்ற அமைப்பு உள்ளது.
கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டு நாகலிங்க மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், மணமானவர்கள் மணவாழ்க்கை இடையூறு இன்றி இன்பமாக அமைய வேண்டியும் சிவபெருமானை வேண்டிக்கொண்டு, இந்த நாகலிங்க மரங்களில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரண்டு வேளைகளில், 10 அர்ச்சகர்களால் மேளதாளங்கள் முழங்க பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும், நாள் தவறாமல் பூஜைகள் நடைபெறுவது சிறப்புக்குரிய விஷயமாகும்.
இந்தக் கோவிலில் வித்தியாசமான வழிபாட்டு முறை ஒன்றை வழக்கத்தில் இருக்கிறது. அது சிவலிங்க பிரதிஷ்டை வழிபாடு ஆகும். தங்கள் வேண்டுதல் நிறைவேற நினைக்கும் பக்தர்கள், தங்களால் முடிந்த அளவில் வெவ்வேறு அளவுகளில் சிவலிங்கத்தை செய்து கொண்டு வந்து, இந்தக் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கங்கள், அந்தந்த பக்தர்களின் பெயரிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறு கிறது. 108 அடி உயர சிவலிங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
கோலார் தங்கச்சுரங்கத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. பெங்களூருவில் இருந்து கோலார்பங்கார்பெட்டை வழியாக இந்தக் கோவிலை அடையலாம்.
ஒய்சாலர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சன்னகேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகாவில் உள்ள ஹலேபீடு, ஒய்சாலா மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்குள்ள சன்னகேஸ்வரர் கோவிலின் வெளிசுவர்களில் வரிசையாக யானைகள், யாளிகள், அன்னங்கள், எண்ணற்ற தெய்வங்கள் காணப்படுகின்றன.
கோவிலின் தென்புறத்தில் நர்த்தக விநாயகர் பெரிய வடிவிலும், உட்புறத்தில் இரணியன் உடலை கிழிக்கும் நரசிம்மர் சிலையும் உள்ளது. இதேபோல் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து ஆயரை காக்கும் கண்ணன், துவாரக பாலகர், நர்த்தன சரஸ்வதி ஆகியோரின் சிற்பங்களும் இங்கு உள்ளன.
இதேபோல் கோவிலின் சுவர்களில் ராமாயணம், மகாபாரத கதைகளை சித்தரிக்கும் ஓவியங்கள், சுவரின் மேல் பகுதியில் துவாரமிட்ட கல்திரைகள் மற்றும் சிவபெருமான், விஷ்ணு உருவங்கள் உள்ளன. இந்து கோவில்களை தவிர இங்கு சமண கோவில்களும் உள்ளன.
இங்குள்ள ஆதிநாத ஈஸ்வரர், சாந்தேசஸ்வர், பர்சுவணதேஸ்வரர் கோவில்கள் உள்பட பல கோவில்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றின் தூண்கள் கண்ணாடி போல பளபளவென்று மின்னும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஒய்சாலர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சன்னகேஸ்வரா கோவில் உள்ளது.
இந்த கோவில் கி.பி.1116-ம் ஆண்டு சோழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஒய்சாலா மன்னர் விஷ்ணவர்தனா கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம்.
கொரோனா நோய் பரவல் நீங்கியதும், இந்த ஆலயத்தை தரிசினம் செய்து வாருங்கள். பெங்களூருவில் இருந்து 221 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹாசனில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்திலும் இக்கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் தென்புறத்தில் நர்த்தக விநாயகர் பெரிய வடிவிலும், உட்புறத்தில் இரணியன் உடலை கிழிக்கும் நரசிம்மர் சிலையும் உள்ளது. இதேபோல் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து ஆயரை காக்கும் கண்ணன், துவாரக பாலகர், நர்த்தன சரஸ்வதி ஆகியோரின் சிற்பங்களும் இங்கு உள்ளன.
இதேபோல் கோவிலின் சுவர்களில் ராமாயணம், மகாபாரத கதைகளை சித்தரிக்கும் ஓவியங்கள், சுவரின் மேல் பகுதியில் துவாரமிட்ட கல்திரைகள் மற்றும் சிவபெருமான், விஷ்ணு உருவங்கள் உள்ளன. இந்து கோவில்களை தவிர இங்கு சமண கோவில்களும் உள்ளன.
இங்குள்ள ஆதிநாத ஈஸ்வரர், சாந்தேசஸ்வர், பர்சுவணதேஸ்வரர் கோவில்கள் உள்பட பல கோவில்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றின் தூண்கள் கண்ணாடி போல பளபளவென்று மின்னும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஒய்சாலர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சன்னகேஸ்வரா கோவில் உள்ளது.
இந்த கோவில் கி.பி.1116-ம் ஆண்டு சோழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஒய்சாலா மன்னர் விஷ்ணவர்தனா கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம்.
கொரோனா நோய் பரவல் நீங்கியதும், இந்த ஆலயத்தை தரிசினம் செய்து வாருங்கள். பெங்களூருவில் இருந்து 221 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹாசனில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்திலும் இக்கோவில் அமைந்துள்ளது.
கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற முருதேஸ்வரா கோவில் ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த கோவிலின் ராஜகோபுரம் 249 அடி உயரம் கொண்டது.
கர்நாடகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் முருதேஸ்வரா கோவிலும் ஒன்று. உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த கோவில் உள்ளது. இந்த மலையின் 3 பகுதிகளை அரபிக்கடல் சூழ்ந்து இருப்பது இதன் சிறப்பு. சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் 20 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோவிலை நோக்கி செல்லும் படிக்கட்டுகளில் 2 பிரமாண்டமான யானை சிலைகள் உள்ளன. இந்த கோவில் ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த கோவிலின் ராஜகோபுரம் 249 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் என கருதப்படுகிறது. இங்குள்ள லிங்கம், உண்மையான ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதி என நம்பப்படுகிறது. இந்த லிங்கமானது தரைமட்டத்தில் இருந்து கீழே 2 அடி ஆழத்தில் அமைந்து இருக்கிறது. அத்துடன் இந்த கோவிலின் அருகே பிரமாண்டமான சிவன் சிலையும் இருக்கிறது. 123 அடி உயரம் கொண்ட இந்த சிலை, உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2-வது உயரமான சிவன் சிலை ஆகும்.
இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆன்மிகவாதிகள் தினமும் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடை திறந்திருக்கும். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் கோவிலுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு உள்ள நெட்ரானி தீவு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இந்த தீவு பகுதியில் நீர்சாகச விளையாட்டுகள் செய்து சுற்றுலா பயணிகள் குதூகலிக்கலாம்.
இந்த கோவிலின் ராஜகோபுரம் 249 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் என கருதப்படுகிறது. இங்குள்ள லிங்கம், உண்மையான ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதி என நம்பப்படுகிறது. இந்த லிங்கமானது தரைமட்டத்தில் இருந்து கீழே 2 அடி ஆழத்தில் அமைந்து இருக்கிறது. அத்துடன் இந்த கோவிலின் அருகே பிரமாண்டமான சிவன் சிலையும் இருக்கிறது. 123 அடி உயரம் கொண்ட இந்த சிலை, உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2-வது உயரமான சிவன் சிலை ஆகும்.
இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆன்மிகவாதிகள் தினமும் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடை திறந்திருக்கும். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் கோவிலுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு உள்ள நெட்ரானி தீவு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இந்த தீவு பகுதியில் நீர்சாகச விளையாட்டுகள் செய்து சுற்றுலா பயணிகள் குதூகலிக்கலாம்.
3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் ஒரே கல்லால் ஆன 16 அடி உயர தூண் உள்ளது. அது ‘மகாஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு மத்தியில் எழிலுற அமைந்து உள்ளது மூடபித்ரி. இதற்கு ‘கிழக்கு மூங்கில் பகுதி’ என்று பொருள். இது 14 முதல் 16-ம் நூற்றாண்டு வரை ஜெயின் மதம், கலாசாரம், கலை, கட்டிடக்கலை ஆகியவற்றை பறைசாற்றுவதாக இருந்தது. இங்கு 18 பிரசித்தி பெற்ற ஜெயின் கோவில்கள் உள்ளன.
நாடு முழு வதும் இருந்து ஜைன மதத்தினர் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் ஏராளமான ஜெயின் கோவில்கள் இருந்த போதிலும் மூடபித்ரியில் உள்ள ஜெயின் கோவில் மிகவும் முக்கியமானது. இந்த கோவிலை பார்க்கும்போது, அது இமாலயர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. நேபாளத்தில் இதுபோன்று கலையம்சத்துடன் கூடிய கட்டிடங்கள் காணப்படுகிறது.
மூடபித்ரியில் உள்ள சந்திரநாதா கோவில் தான் கர்நாடகத்தில் இருக்கும் மிகப்பெரிய ஜெயின் கோவில் ஆகும். இது 1429 முதல் 1430-ம் ஆண்டுக்குள் நாமங்களா தளபதி தேவராய உடையரால் கட்டப்பட்டது. இந்த கோவில் 1,000 தூண்களை கொண்டது. அதில் இரு தூண்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த கோவில் கருவறையில் சந்திரநாத சாமியின் பஞ்சலோக சிலை உள்ளது.
3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் ஒரே கல்லால் ஆன 16 அடி உயர தூண் உள்ளது. அது ‘மகாஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள சுவர்கள், தூண்களில் சாமிகள், இலைகள், பூக்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒட்டகசிவிங்கி, சீன டிராகன் ஆகிய சிற்பங்கள் ஜெயின் வியாபாரிகள் ஆப்பிரிக்கா, சீன நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததை சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இதுதவிர இந்த கோவிலில் விலை மதிப்பற்ற ஆபரணங்களும், ஜெயின் சாமியார்களின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்தக்கோவில் அமைந்துள்ளது.
நாடு முழு வதும் இருந்து ஜைன மதத்தினர் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் ஏராளமான ஜெயின் கோவில்கள் இருந்த போதிலும் மூடபித்ரியில் உள்ள ஜெயின் கோவில் மிகவும் முக்கியமானது. இந்த கோவிலை பார்க்கும்போது, அது இமாலயர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. நேபாளத்தில் இதுபோன்று கலையம்சத்துடன் கூடிய கட்டிடங்கள் காணப்படுகிறது.
மூடபித்ரியில் உள்ள சந்திரநாதா கோவில் தான் கர்நாடகத்தில் இருக்கும் மிகப்பெரிய ஜெயின் கோவில் ஆகும். இது 1429 முதல் 1430-ம் ஆண்டுக்குள் நாமங்களா தளபதி தேவராய உடையரால் கட்டப்பட்டது. இந்த கோவில் 1,000 தூண்களை கொண்டது. அதில் இரு தூண்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த கோவில் கருவறையில் சந்திரநாத சாமியின் பஞ்சலோக சிலை உள்ளது.
3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் ஒரே கல்லால் ஆன 16 அடி உயர தூண் உள்ளது. அது ‘மகாஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள சுவர்கள், தூண்களில் சாமிகள், இலைகள், பூக்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒட்டகசிவிங்கி, சீன டிராகன் ஆகிய சிற்பங்கள் ஜெயின் வியாபாரிகள் ஆப்பிரிக்கா, சீன நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததை சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இதுதவிர இந்த கோவிலில் விலை மதிப்பற்ற ஆபரணங்களும், ஜெயின் சாமியார்களின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்தக்கோவில் அமைந்துள்ளது.
12 சிவபெருமானின் ரிஷப சேவை திருக்கல்யாண அருள்மழை பொழியும் திருக்காட்சி வைபவம் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆண்டு முதல் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது பெருஞ் சிறப்பாகும்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் கிராமத்தில் அருட்பாலிக்கிறார் ஸ்ரீ மதங்கீஸ்வரர். நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்று அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வரும் அடியார்களது வாழ்வில் ராஜயோகத்தினையும், பதினாறு வகை செல்வங்களையும் பெற்று மகத்தான வாழ்வு வாழ்ந்து வருவது கண்கூடு. தலத்தின் இறைவனாக மதங்கீஸ்வர சுவாமியும், இறைவியாக ஸ்ரீ ராஜமாதங்கீஸ்வரி அஞ்சனாட்சி அம்பிகையும் அருட்பாலிக்கிறார்கள். சகல கலைகளுக்கும் அதிபதியாக திகழ்கின்ற அம்பிகையாக காட்சி தருகின்றாள். அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில் சொன்ன பதினாறு பேறுகளை பெற இத்தல இறைவியை மனம், மொழி, மெய் ஒன்றுபட ஆத்மார்த்தமாக பூஜித்தால் எல்லா நலன்களையும் பெறலாம்.
மகாசரஸ்வதி தேவிக்கே இத்தல ஈஸ்வரி வித்யாப்யாசம் செய்ததால் இத்தல இறைவியை வழிபடுவோர் கல்வி, உயர்பதவி, தொழில் மேன்மை பெறுவர் என்பது ஐதீகம். திருமணத் தடைகள் நீங்கி இனிய இல்லறம் நல்லறமாக அம்பிகை அருளால் அமையும். இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. இத்திருத்தலத்தில் ஸ்ரீ ஆனந்த மகாகாளி வடக்கு திசை நோக்கி ஆனந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள இத்தாயை வழிபட்டால் ஆனந்த வாழ்வை பெறலாம். இத்தலத்தில் இரு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவை கிழக்கு நோக்கி உள்ள நந்தியின் பெயர் சுவேத நந்தி. மேற்கு நோக்கி உள்ள நந்தி பெயர் மதங்க நந்தி எனவும் வழங்கப் பெறுகிறது. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய என்று இவ்விரு நந்தியம் பெருமான்களை பிரதோஷ தினங்களில் மனமுருக தரிசித்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ராஜயோகம் கிடைக்க திருவருள் பெற்றவர் மட்டுமே இத்திருத்தலத்தை தரிசிக்க முடியும் என்று கூறுவர். பராசவனம் என்பது திருநாங்கூரின் புராண கால பெயராகும். பராசவனத்தில் மதங்காசிரமத்தில் கடுந்தவம் புரிந்த மதங்க மாமுனிவரின் வேண்டுதல்படி திருமால் பன்னிரு மூர்த்திகளாகி பராசவனத்தில் வெவ்வேறு பகுதிகளில் எழுந்தருளி சர்வேஸ்வரனை வழிபட்டதாக பராசவனப் புராணம் கூறுகிறது. சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் தம் திருமுறையில் இத்தலத்தைப் பற்றி பெரிதும் போற்றி உள்ளார். சுந்தரர் காலம் 9ஆம் நூற்றாண்டு எனும்போது இத்தலமும் அதற்கும் முந்தியது எனலாம்.
சங்க இலக்கியங்களில் திருநாங்கூர் பற்றி உள்ளது பெருஞ்சிறப்பு.
பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் “நாங்கூர் வேளிர்” என்ற குருநில மன்னன் மகளை கரிகாற்சோழன் திருமணம் செய்து கொண்டதாக தகவல் உள்ளது. எனவே கரிகாற் சோழனின் மனைவி நாங்கூரைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகின்றது. சைவ சமயப் பெரியோர்களில் ஒருவரான சேந்தனார் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பாடியவர். இவர் திருநாங்கூரைச் சேர்ந்தவர். நாங்கூர் சேந்தன் என்று போற்றுகின்றனர். மதங்க மகரிஷிக்கு இத்தல அம்பிகையே மகளாகத் தோன்றி திருவெண்காட்டில் உள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரரை மணம் புரிந்தார் என்று பராசவன புராணம் கூறுகின்றது.
கோயில் அமைந்த விதமும் மகா அற்புதம். இத்தல கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்பிராகாரம், திருச்சுற்று மதில் கொண்டு கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் கிழக்கு புறத்தில் இடது பக்கத்தில் மாதங்கீஸ்வரி சந்நதியும், சண்டிகேசஸ்வரர் சந்நதியும் உள்ளது. திருச்சுற்றின் வடக்குப் புறத்தில் தெற்கு திசை நோக்கி காளி சந்நதியும், அடுத்து மதங்கமுனி சந்நதியும் உள்ளது. தென்மேற்கு மூலையில் ஸ்ரீவிநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீ வள்ளி தெய்வானை சந்நதிகளும், வடமேற்கு மூலையில் மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி சந்நதிகளும் திகழ்ந்து அருட்பாலிக்கின்றனர்.
இத்தல சிற்பங்கள் முற்கால சோழர்காலத்தை சார்ந்தவையாகும். ஒவ்வொன்றும் எழில் நலம் மிகுந்து காணப்படுகின்றன. திருச்சுற்று சந்நதிகளிலுள்ள நாராயணி சிற்பம், நவகிரக சிற்பங்கள் அருள் ததும்பும் விதமாக வீற்றிருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகப் பெருமான், பைரவர், சூரியன், தெய்வச் சிற்பங்கள் தனிச்சிற்பங்களாக உள்ளது.
108 வைணவ திவ்ய திருப்பதிகளில் பதினொன்று திருநாங்கூரில் அமைந்துள்ளது மிகவும் விசேஷம். ஒவ்வொரு ஆண்டும் 11 கருட சேவை உற்சவம் நடைபெறும். மிக மிக விசேஷம் இந்த 11 கருட சேவை உற்வசம் தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும். இதேபோன்று 12 சிவபெருமானின் ரிஷப சேவை திருக்கல்யாண அருள்மழை பொழியும் திருக்காட்சி வைபவம் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆண்டு முதல் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது பெருஞ் சிறப்பாகும்.
தலவிருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது. திருநாங்கூர் சைவமும் வைணவமும் சங்கமிக்கும் தண்வயல் சூழ் தெய்வத் திருத்தலம். பதினொரு வைணவ திருப்பதிகளையும் 11 (ஏகாதசி) ருத்ரர்களையும் தரிசிப்போர்க்கு ஸ்ரீவைகுண்டம் திருக் கயிலாய் மகா தரிசனம் செய்த பெரும் புண்ணியம் சித்திக்கும். பதவி, பட்டம், புகழ், செல்வாக்கு, செல்வங்கள் என அனைத்து நல்ல விஷயங்களை பெறவும், இழந்த நல்ல விஷயங்களை மீண்டும் பெற்று ராஜயோகத்துடன் பரிபாலனம் செய்யக்கூடிய உச்சத்தை வாழ்வில் பெற இத்தல இறைவியான ஸ்ரீ ராஜமாதங்கியையும் ஸ்ரீ மதங்கீஸ்வரரையும் மனதாற வழிபட்டாலே போதும். திருத்தலம் நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநாங்கூரில் உள்ளது
மகாசரஸ்வதி தேவிக்கே இத்தல ஈஸ்வரி வித்யாப்யாசம் செய்ததால் இத்தல இறைவியை வழிபடுவோர் கல்வி, உயர்பதவி, தொழில் மேன்மை பெறுவர் என்பது ஐதீகம். திருமணத் தடைகள் நீங்கி இனிய இல்லறம் நல்லறமாக அம்பிகை அருளால் அமையும். இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. இத்திருத்தலத்தில் ஸ்ரீ ஆனந்த மகாகாளி வடக்கு திசை நோக்கி ஆனந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள இத்தாயை வழிபட்டால் ஆனந்த வாழ்வை பெறலாம். இத்தலத்தில் இரு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவை கிழக்கு நோக்கி உள்ள நந்தியின் பெயர் சுவேத நந்தி. மேற்கு நோக்கி உள்ள நந்தி பெயர் மதங்க நந்தி எனவும் வழங்கப் பெறுகிறது. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய என்று இவ்விரு நந்தியம் பெருமான்களை பிரதோஷ தினங்களில் மனமுருக தரிசித்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ராஜயோகம் கிடைக்க திருவருள் பெற்றவர் மட்டுமே இத்திருத்தலத்தை தரிசிக்க முடியும் என்று கூறுவர். பராசவனம் என்பது திருநாங்கூரின் புராண கால பெயராகும். பராசவனத்தில் மதங்காசிரமத்தில் கடுந்தவம் புரிந்த மதங்க மாமுனிவரின் வேண்டுதல்படி திருமால் பன்னிரு மூர்த்திகளாகி பராசவனத்தில் வெவ்வேறு பகுதிகளில் எழுந்தருளி சர்வேஸ்வரனை வழிபட்டதாக பராசவனப் புராணம் கூறுகிறது. சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் தம் திருமுறையில் இத்தலத்தைப் பற்றி பெரிதும் போற்றி உள்ளார். சுந்தரர் காலம் 9ஆம் நூற்றாண்டு எனும்போது இத்தலமும் அதற்கும் முந்தியது எனலாம்.
சங்க இலக்கியங்களில் திருநாங்கூர் பற்றி உள்ளது பெருஞ்சிறப்பு.
பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் “நாங்கூர் வேளிர்” என்ற குருநில மன்னன் மகளை கரிகாற்சோழன் திருமணம் செய்து கொண்டதாக தகவல் உள்ளது. எனவே கரிகாற் சோழனின் மனைவி நாங்கூரைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகின்றது. சைவ சமயப் பெரியோர்களில் ஒருவரான சேந்தனார் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பாடியவர். இவர் திருநாங்கூரைச் சேர்ந்தவர். நாங்கூர் சேந்தன் என்று போற்றுகின்றனர். மதங்க மகரிஷிக்கு இத்தல அம்பிகையே மகளாகத் தோன்றி திருவெண்காட்டில் உள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரரை மணம் புரிந்தார் என்று பராசவன புராணம் கூறுகின்றது.
கோயில் அமைந்த விதமும் மகா அற்புதம். இத்தல கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்பிராகாரம், திருச்சுற்று மதில் கொண்டு கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் கிழக்கு புறத்தில் இடது பக்கத்தில் மாதங்கீஸ்வரி சந்நதியும், சண்டிகேசஸ்வரர் சந்நதியும் உள்ளது. திருச்சுற்றின் வடக்குப் புறத்தில் தெற்கு திசை நோக்கி காளி சந்நதியும், அடுத்து மதங்கமுனி சந்நதியும் உள்ளது. தென்மேற்கு மூலையில் ஸ்ரீவிநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீ வள்ளி தெய்வானை சந்நதிகளும், வடமேற்கு மூலையில் மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி சந்நதிகளும் திகழ்ந்து அருட்பாலிக்கின்றனர்.
இத்தல சிற்பங்கள் முற்கால சோழர்காலத்தை சார்ந்தவையாகும். ஒவ்வொன்றும் எழில் நலம் மிகுந்து காணப்படுகின்றன. திருச்சுற்று சந்நதிகளிலுள்ள நாராயணி சிற்பம், நவகிரக சிற்பங்கள் அருள் ததும்பும் விதமாக வீற்றிருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகப் பெருமான், பைரவர், சூரியன், தெய்வச் சிற்பங்கள் தனிச்சிற்பங்களாக உள்ளது.
108 வைணவ திவ்ய திருப்பதிகளில் பதினொன்று திருநாங்கூரில் அமைந்துள்ளது மிகவும் விசேஷம். ஒவ்வொரு ஆண்டும் 11 கருட சேவை உற்சவம் நடைபெறும். மிக மிக விசேஷம் இந்த 11 கருட சேவை உற்வசம் தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும். இதேபோன்று 12 சிவபெருமானின் ரிஷப சேவை திருக்கல்யாண அருள்மழை பொழியும் திருக்காட்சி வைபவம் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆண்டு முதல் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது பெருஞ் சிறப்பாகும்.
தலவிருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது. திருநாங்கூர் சைவமும் வைணவமும் சங்கமிக்கும் தண்வயல் சூழ் தெய்வத் திருத்தலம். பதினொரு வைணவ திருப்பதிகளையும் 11 (ஏகாதசி) ருத்ரர்களையும் தரிசிப்போர்க்கு ஸ்ரீவைகுண்டம் திருக் கயிலாய் மகா தரிசனம் செய்த பெரும் புண்ணியம் சித்திக்கும். பதவி, பட்டம், புகழ், செல்வாக்கு, செல்வங்கள் என அனைத்து நல்ல விஷயங்களை பெறவும், இழந்த நல்ல விஷயங்களை மீண்டும் பெற்று ராஜயோகத்துடன் பரிபாலனம் செய்யக்கூடிய உச்சத்தை வாழ்வில் பெற இத்தல இறைவியான ஸ்ரீ ராஜமாதங்கியையும் ஸ்ரீ மதங்கீஸ்வரரையும் மனதாற வழிபட்டாலே போதும். திருத்தலம் நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநாங்கூரில் உள்ளது
சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
* மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.
* ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.
* கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.
* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.
* மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.
* தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.
* நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.
* தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப்பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.
* கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயககரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
* சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
* சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.
* தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.
* ஓசூர்-பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.
* திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
* திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.
* கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.
* திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.
* தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.
* ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.
* கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.
* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.
* மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.
* தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.
* நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.
* தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப்பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.
* கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயககரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
* சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
* சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.
* தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.
* ஓசூர்-பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.
* திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
* திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.
* கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.
* திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.
* தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.






