என் மலர்
மற்றவை
- உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை.
- பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு ஒரு வாக்கியம் இருக்கே, அது எவ்வளவு உண்மை?
பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்துப் பழகி விட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்ணை முழுமையாக அருகிலிருந்து பார்க்கத் தவறி விட்டவர்களின் பக்குவமற்ற புலம்பல் இது.
உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை. இரண்டு பேரும் இல்லாமல் குடும்பமோ, சமூகமோ, உலகமோ, எதுவுமே முழுமையடையாது.
ஆனால், ஓர் ஆணால் உணர முடியாத சில நுட்பமான உணர்வுகளை ஒரு பெண்ணால் உணர முடியும்.
ஆண் தன்னுடைய புத்தியால் செலுத்தப்படுகிறான். பெண்ணோ தன்னுடைய உள்ளுணர்வால் செலுத்தப்படுகிறாள்.
புத்தி என்பது வெளியிலிருந்து சேகரித்தது. அது எந்தத் தரத்தில் கிடைத்ததோ, அந்தத் தரத்தில் தான் செயல்படும். உள்ளுணர்வு வெளி அழுக்குகளால் அசிங்கப்படாதது. தூய்மையானது; புத்தியை விட உயர்வானது. அதனால், பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.
உலகின் பல விஷயங்களை விஞ்ஞானப் பூர்வமாக பகுத்துப் புரிந்து கொள்ள ஆணுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவனுக்கு அருகிலேயே இருந்த பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது.
புரிந்து கொள்ள முடியாததின் மீது இயல்பாகவே அச்சம் வரும். அச்சத்தால் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க விடாமல், தன் முரட்டுத் தனத்தால் தாழ்த்தி வைத்தான்.
தன் உடல் வலுவைப் பிரயோகித்து, புத்தியின் தத்திரங்களைப் பயன்படுத்தி, அவளைத் தன் நிழலில் வைத்திருக்க வேண்டியதை எல்லாம் அவன் செய்து முடித்தான். அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை.
ஆவது நிச்சயமாக ஒரு பெண்ணால் தான், ஓர் உயிரைத் தன்னுள் வைத்து,உருவம் கொடுத்து இந்த உலகுக்கு உங்களைக் கொடுப்பவள் ஒரு பெண் தான். ஆனால், அழிவதற்கும் அவளையே பொறுப்பாக்கிப் பார்க்கிறான் என்றால், அப்புறம் அந்த ஆணுடைய பங்களிப்பு தான் என்ன?
ஓர் ஆண், பெண்ணை மரியாதையுடன் உரிய மதிப்புடன் கையாளத் தெரியாவிட்டால், அவளால் அழிந்து போகக் கூடும்.
- சாந்தசீலன்.
- முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது.
- இரு வேளைகளில் தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுக 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது.
காலை, மாலை என இரு வேளைகளில் தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
அதன்படி, 24ம் தேதி தேனி, ஆரணி, 25ம் தேதி தென்காசி, ஈரோடு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஆகஸ்டு 1ம் தேதி வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
- ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
- நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிகவும் அவசியம்.
* ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
* கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* இஞ்சி, தேனுடன் சிறிதளவு பேரீச்சம்பழம் சேர்த்து தினசரி சாப்பிட்டுவர இதைத் தடுக்கலாம்.
* உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை போன்றவற்றை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்துச் சாறாகக் குடிக்கலாம். இது உடல் வலுப்பெற உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
* தினசரி இரண்டு நெல்லிக்காய் மற்றும் 100 கிராம் அளவு கேரட்டை பச்சையாகச் சாப்பிட்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* தினசரி ஒரு வகையான பழம் என்னும் வீதம் பழமாகவோ பழச் சாறாகவோ குடிக்கலாம்.
- டாக்டர். கர்ணன் மாரியப்பன்.
- நம்ம திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்ப்பா.
- முதலில் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி.
'கன்பூசியஸ் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?'
'இன்னா சொல்லிக்கிறார்?'
'வேலைக்காரன் மீது சந்தேகப்படாதே. சந்தேகத்துக்குரிய நபரை வேலைக்காரனாக வைத்துக் கொள்ளாதே' அப்படின்னு சொல்லியிருக்கிறார். என்ன அருமையா சொல்லி இருக்கிறார் பாருங்க'
'அட. இதை நம்ம திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்ப்பா. 'தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்'
'சரி. இயேசு கிறிஸ்து பைபிள்ல என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?'
'என்ன சொல்லியிருக்கிறார்?'
'ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு… செய்தாயிற்று'
'அட. இதேமாதிரி திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்பா. 'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்'
'நெப்போலியன் போனபார்ட் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? (இன்னும் முடியலையா?)
''என்ன சொல்லியிருக்கிறார்?'
'முதலில் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. அப்போதுதான் கட்டளையிடுவது எப்படி என்பதை நீ கற்றுக்கொள்ள முடியும்னு சொல்லியிருக்கிறார்'
'அடேங்கப்பா. இதையும் நம்ம திருவள்ளுவர் ஏற்கெனவே சொல்லிட்டார். 'நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது'
அதாவது நுணுக்கமாக அடுத்தவர் பேசுவதைக் கேட்டு யார் ஒருத்தர் உள்வாங்குகிறாரோ நாளைக்கு அவர் பேசுறதைப் பார்த்து அடுத்தவங்க வணங்குற அளவுக்கு அவரோட பேச்சு இருக்கும் அப்படின்னு இதற்கு அர்த்தம்.
-மோகன ரூபன்
- பொண்ணு பார்க்க போன இடத்தில் பொண்ணை பிடித்துவிடவே சம்மதம் என தலையாட்டினேன்.
- ஒரு முறை வீட்டிற்கு வந்து போது என்னை பெற்ற தாயே, நடிக்க போன மூஞ்சியை பாரு என்று என்னை கேலி செய்தாள்.
எம் ஆர் ராதா அவர்களின் நாடக கம்பெனியில் ஆறு வருடங்கள் வேலை செய்தேன்.
ஒரு முறை வீட்டிற்கு வந்து போது என்னை பெற்ற தாயே, நடிக்க போன மூஞ்சியை பாரு என்று என்னை கேலி செய்தாள்.
என் அப்பா கூட வேலை செய்யும் ஆசிரியர் ஒருவரின் பெண் இருப்பதாகவும் அவரை கல்யாணம் பண்ணி கொள்கிறாயா என கேட்கவும் நானும் சும்மா தானே இருக்கிறோம் என சரி என்றேன்.
பொண்ணு பார்க்க போன இடத்தில் பொண்ணை பிடித்துவிடவே சம்மதம் என தலையாட்டினேன்.
ஆனால் அந்த பெண் உள்ளே சென்று இவன் வடக்க பார்க்க சொன்னா தெற்கே பார்க்கிறான் ...
இவனை கட்டிக் கொண்டு என்ன எழவ கொட்ட என்று தன் வீட்டாரிடம் சொன்னது என் காதில் விழுந்தது .
அன்று வீட்டை விட்டு கிளம்பினேன்.அதனால் தான் இன்றைக்கு 728 படம் நடிக்க முடிந்தது.
வெறி .. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி ..
மானசீகமாக என்னை புறக்கணித்த அந்த பெண்ணுக்கு நன்றி சொல்வேன் என்றார் நடிகர் குமரி முத்து.
-பிரசாந்த்
- நாவல் பழத்துல நிறைய சத்துக்கள் இருக்கு.
- நாவல் மர வேர் கூட நல்ல மருந்துதான்.
நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட்டு ஏறி பழம் பறிச்சி சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம்.
நாவல் பழத்துல நிறைய சத்துக்கள் இருக்கு. நாவல் பழம் சாப்பிட்டா மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. நீரிழிவுக்கும் இது நல்லது.
இதுல குறிப்பா நாவல் விதை சர்க்கரை வியாதிக்காரங்களுக்கு நல்ல மருந்து. நல்ல காய வச்ச புது விதைகளை இடிச்சி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடணும். பிறகு படிப்படியா சிட்டிகை அளவுல சாப்பிட்டாக்கூட போதும். விதைப்பொடியை அதிகமா சாப்பிட்டா நல்லதில்லை. அதேமாதிரி பழத்தையும் அதிகமா சாப்பிடக்கூடாது. நிறையபேர் பழம் ருசியா இருக்குன்னு சாப்பிட்டிருவாங்க. அப்பிடி சாப்பிட்டா நெல்லிக்காயை மென்னு தின்னுட்டு குளிர்ந்த தண்ணியை குடிச்சா போதும்.
நாவல் மர வேர் கூட நல்ல மருந்துதான். ராத்திரி நேரத்துல வேரை ஊற வச்சி காலையில எழுந்திரிச்சி தண்ணியை மட்டும் குடிச்சாக்கூட சர்க்கரை நோய் சரியாகும். இது உடம்புக்கு குளிர்ச்சியை தர்றதோட ஆண்மைக்குறைவுக்கும் நல்ல மருந்து. வேர்ப்பட்டையை கசாயம் வச்சி குடிச்சிட்டு வந்தா வயித்துப்போக்கு சரியாகும்.
-மரிய பெல்சின்
- என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.
- நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.
ஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்! அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்?'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?'' என்று கூறினார்.
என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.
என் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
"கண் போன போக்கிலே
கால் போகலாமா?
கால் போன போக்கிலே
மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே
மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை
மறந்து போகலாமா?''

என்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.
பிரபல பட அதிபர் `ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்?'' என்று எழுதியிருந்தார்.
இது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.
ஏனென்றால், அவர்கள் மூவரும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.
நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை.
`வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
`நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.
-கவிஞர் வாலி
- திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.
- துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.
உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்...
உங்களது கர்மாக்களை சதவிதமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம். அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...
(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
தானியங்கள் வைத்தால் = 5 % (-)
(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
(6)யானைகளுக்கு உணவளித்தால் = 68% (-)
(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-)
(10)சகோதர சகோதரிகள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(11)கர்பஸ்திரிகளுக்கு.. = 78% (-)
(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதவர்களுக்கு.. = 70% (-)
(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15)நோயளிகளுக்கு = 93% (-)
(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.
இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.
- அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து... ஜோதிடர் பழனியப்பன்
- பல் மருத்துவர்களுக்கான தகுதிகள் வகுக்கப்பட்டன.
- தமிழ் நாட்டில் சீன பல் மருத்துவர்கள் படிப்படியாக காணாமல் போய்விட்டனர்.
உலகின் முதல் பல் மருத்துவக் கல்லூரி, அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள பால்டிமோரில் 1840ஆம் ஆண்டு துவங்கப்பட்டது..
இந்தியாவின் முதல் பல் மருத்துவக் கல்லூரி, கல்கத்தாவில் 1920இல் தான் துவங்கியது. லண்டனில் படித்த டாக்டர் ஆர் அகமத் என்ற மருத்துவர்தான் அந்த கல்லூரியை நிறுவினார்.
ஆனால், கி மு 3800 முதல் கி மு 1300 வரையிலான காலகட்டத்தில் இந்திய துணைக் கண்டத்தில் பல் மருத்துவம் சிறப்புடன் இருந்து என்று பல்வேறு குறிப்புகளில் காணமுடிகிறது.
சிந்து சமவெளியில் அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பல்லைத் துளையிடும் மருத்துவக் கருவிகள் கிடைத்திருக்கின்றன.
இதன்படி பார்த்தால் பல் மருத்துவத்தின் அடித்தளமாக சிந்து சமவெளி இருந்திருக்கும் என்று கணிக்க முடிகிறது.
சுமார் 6000 ஆண்டுகளாக சீனாவில் பல் மருத்துவம் மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் பயன்பாட்டில் உள்ளது
1980கள் வரை, சீனத்துப் பல் மருத்துவர்கள், சீனாவுக்கு வெளியே, சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய ஆசிய நாடுகள் பலவற்றில் சிகிச்சை அளித்து வந்தனர்.
தமிழ்நாட்டில், 1990கள் வரை சீனத்து பல் மருத்துவ மனைகள் இல்லாத நகரங்கள் கிடையாது.
சொத்தையான பற்களை அகற்றுதல், Cavity எனப்படும் புழைகளை வெள்ளி தங்கம் போன்ற உலோகங்களால் அடைப்பது, எனாமல் எனப்படும் மேற்பூச்சு சிதைவுகளால் பாதிக்கப்பட்ட பற்கள் மீது தங்க முலாம் பூசுதல் ஆகியவை பண்டைய சீன பல் மருத்துவ முறைகளில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சீனத்து பல் மருத்துவர்கள் பரம்பரை பரம்பரையாக பல் சீரமைப்பு செய்பவர்கள்.
1985களுக்குப் பிறகு இந்தியாவில் பல் மருத்தும் அலோபதி வசப்பட்டு அதற்கான கல்லூரிகள் நாடெங்கும் நிறுவப்பட்டன. பல் மருத்துவர்களுக்கான தகுதிகள் வகுக்கப்பட்டன.
இதன் பிறகு தமிழ் நாட்டில் சீன பல் மருத்துவர்கள் படிப்படியாக காணாமல் போய்விட்டனர்.
-சுந்தரம்
- குத்துச்சண்டையை தொழிலாகக் கொள்வதற்கு பல தியாகங்களை செய்ய வேண்டும்.
- குத்துச்சண்டை உலகில் நீதான் எப்பொழுதும் எல்லோரையும் முந்தி இருக்கவேண்டும்.
மைக் டைசன் கூறுகிறார்:
"என்னுடைய மூத்த மகன் ஒரு நாள் என்னிடம் சொன்னான்,
"அப்பா.. நானும் உன்னைப்போல ஒரு முழுநேர குத்துச்சண்டை வீரனாக ஆசைப்படுகிறேன் .." என்று.
நான் சொன்னேன்…
"மகனே, உன்னால் குத்துச்சண்டை போட முடியாது. ஏனென்றால், நீ ஒரு புகழ் பெற்ற பள்ளியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறாய். உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறாய். உன்னால் ஒரு சண்டைக்காரனாக முடியாது.
யாருடன் சண்டை போட்டு வெல்ல விரும்புகிறாய்?
என்னைப் போன்ற மனிதர்களுடனா? நாங்கள் விலங்குகள். மனிதர்கள் அல்ல.
என் பிள்ளை அந்த வாழ்க்கைக்குள் செல்ல என்னால் அனுமதிக்க முடியாது.
அது முன்னேற்றம் இல்லை. உன் தரத்தை தாழ்த்திக்கொள்ளும் செயலாகும்.
உன்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் நீ குத்துச்சண்டையை தேர்ந்தெடுக்கலாம்.
குத்துச்சண்டையை தொழிலாகக் கொள்வதற்கு பல தியாகங்களை செய்ய வேண்டும். வலிகளை, துயரங்கள் அனுபவிக்க வேண்டும்.
அடிகளையும் குத்துக்களையும் நான் தாங்கிக்கொண்டது என் பிள்ளைகள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக. தமக்குப் பிடித்த நல்ல தொழில்களைச் செய்து முன்னேற வேண்டும் என்பதற்காக..
ஆனால் குத்துச்சண்டை உலகில் நீதான் எப்பொழுதும் எல்லோரையும் முந்தி இருக்கவேண்டும். எப்பொழுதும் மற்றவரை முன்னேற அனுமதிக்கும் மனப்பான்மை இருக்கக் கூடாது. அது ஒருவர் மனதை அழுத்தும் எவ்வளவு பெரிய பாரம் என்று எனக்கு தெரியும். அந்த பாரத்தை நீ சுமக்க வேண்டாம் மகனே…"
-சுந்தரம்
- விருப்பத்துடன் ஈடுபடும் செயல்கள் உடலுக்கும் மனதிற்கும் வலிமையை தரும்.
- உபகரணங்கள் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வதெல்லாம் மனதை ஏமாற்றும் வேலைதான்.
எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே உடற்பயிற்சி செய்வது ஓட்ட பயிற்சி செய்வதெல்லாம் உடலை வலுவிழக்க செய்யும். உடலும் மனமும் ஒருங்கிணைத்து செய்யகூடிய உடல் உழைப்பே மனிதனுக்கு ஆரோக்கியத்தை தரும்.
தெரிந்த நபரை சந்திக்க நீண்ட தூரம் ஆவலுடன் நடந்து செல்வது, விவசாய வேலை செய்து தோட்டத்தை செழுமை படுத்துவது, ஒரு பொருளை இடமாற்றுவதற்காக அதிக எடையை தூக்கி பயில்வது இவை எல்லாமே மனம் அந்த செயலில் விருப்பத்துடன் ஈடுபடும். விருப்பத்துடன் ஈடுபடும் செயல்கள் உடலுக்கும் மனதிற்கும் வலிமையை தரும்.
ஒட்டபயிற்சி என்ற பெயரில் தினமும் காலையில் வெறுமனே ஓடுவது. இதுக்கூட பரவாயில்லை, கொஞ்சம் பலன் கொடுக்கும். ஆனால் ஹெட்போனில் பாடல் கேட்டுகொண்டு ஒடுவது, ஹெட்போன் போட்டும் போடாமலும் டிரெட்மில்லில் ஓடுவதெல்லாம் மனதையும் உடலையும் ஒருங்கிணைக்க செய்யாமல் மனசிதறல் நோய் ஏற்படும். உடல் வலிமை இழக்கும். உபகரணங்கள் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வதெல்லாம் மனதை ஏமாற்றும் வேலைதான். நோய்தான் மிஞ்சும். உடலுக்கு ஆரோக்கியம் தராது..
காட்டுவேலை அல்லது வீட்டு தோட்ட வேலை செய்யுங்கள். எப்பொதெல்லாம் மன கவலை அதிகம் ஆகிறதோ அப்போதெல்லாம் மண்ணை கிளறி மரம் செடி நடுங்கள். வாய்ப்பு இருந்தால் நீச்சல் அடியுங்கள். சர்க்கரை நோய் போன்ற தீராத பல நோய்களுக்கு நீச்சல் பழகுவது நல்ல பலனை தருகிறது..
-ரியாஸ்
- மூன்றாம்படி, இதனை முன்னோரின் விஞ்ஞானமய கோசம் எனலாம்.
- முன்னோர் சொன்ன மனோமய கோசமாகக் கொள்ளலாம்.
அறிவு நான்கு நிலைகளில் செயல்படுகிறது. அதுன் வேறுபாடுகள் பற்றி பார்ப்போம்..
1] உடலறிவு:
மனிதனின் அறிவின் தரத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பசி, தாகம், பாலுணர்ச்சிவேகம் ஆகியவற்றைச் சமன் செய்து கொள்ளுதல் மட்டும் தான் வாழ்க்கை என்ற அளவில் சில பேருக்கு அறிவு நின்று விடும். இதுவே முதல்படி. முன்னோர் சொன்ன அன்னமய கோசம் இது என்று சொல்லலாம்.
2] மனஅறிவு:
உடல் தேவைகள் நிறைவு பெற்றுவிட்டன என்ற பிறகு அவற்றுக்கப்பால் மனதின் தேவை என ஒன்று வரும். இயற்கை அழகுகளை ரசித்தல் அவற்றைப் போல் போலி செய்தல் என்ற அளவில் சிலருக்கு அறிவு விரிந்து நிற்கும். இதுவே இரண்டாம் பிரிவு. இதனை முன்னோர் சொன்ன மனோமய கோசமாகக் கொள்ளலாம்.
3] விஞ்ஞான அறிவு:
அறிவின் தரம் இன்னும் ஒரு படி உயரும்போது, இயற்கை நிகழ்ச்சிகளுக்கும், இயற்கை நியதிகளுக்கும் காரணம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாக அறிவு எழுந்து நிற்கும். இதுவே மூன்றாம்படி, இதனை முன்னோரின் விஞ்ஞானமய கோசம் எனலாம்.
4] இறையறிவு:
நியதி தவறாமல் இயக்கம் நடத்தும் அந்த இயற்கையின் தத்துவம் என்ன? அதனை ஆராயும் நான் யார்? எனக்கும் அதற்கும் தொடர்பென்ன? உறவென்ன ? என்று ஆராயும் பக்குவம் பெற்ற அறிவின் நிலையே அதன் நான்காம் படி. இதனையே முன்னோர் சொன்ன பிராணமய கோசத்துக்கும் அதன் முடிவான ஆனந்தமய கோசத்துக்கும் ஒப்பிடலாம்.
- வேதாத்திரி மகரிஷி.






