என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்
Byமாலை மலர்14 Jun 2019 11:42 AM GMT (Updated: 14 Jun 2019 11:42 AM GMT)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதற்கு கவுதம் காம்பீர் ஐசிசி மீது சாடியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நாடடிங்காமில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
மழை 2-3 மணி நேரத்தில் நின்றுவிட்டது. அவுட்பீல்டு (பவுண்டரி லைன் அருகில்) ஈரப்பதம் காணப்பட்டதால் பீல்டிங் செய்வதற்கும், கேட்ச் பிடிப்பதற்கும் கடினமாக இருக்கும் என்பதால் ஆட்டம் கைவிட்டப்பட்டது.
இதற்கு முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘பாதுகாப்பான வசதிகளை ஐசிசி இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியும். மழை 2-3 மணி நேரத்திற்குள் நின்றுவிட்டது. இருந்தாலும் போட்டி தொடங்கப்படவில்லை.
கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யும் என்பது எதிர்பார்க்கபட்ட ஒன்றுதான். ஆகவே, மைதானம் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அவுட்பீல்டு தயார் ஆவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை தவிர்த்திருக்கலாம்.
போட்டி வெளிச்சமின்மை, மின்சார கோபுரம் கோளாறு என மற்ற ஏதாவது காரணத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், இது அதுபோன்ற விவகாரம் கிடையாது. ஐசிசி இதுகுறித்து முக்கிய கவனம் செலுத்துவது அவசியம். ஏனென்றால் உலகளாவிய தொடர். பல மணி நேரம் காத்திருக்கும் ரசிகர்களுக்கும், டிவி-யில் போட்டியை பார்க்க காத்திருந்தவர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும்’’ என்றார்.
மழை 2-3 மணி நேரத்தில் நின்றுவிட்டது. அவுட்பீல்டு (பவுண்டரி லைன் அருகில்) ஈரப்பதம் காணப்பட்டதால் பீல்டிங் செய்வதற்கும், கேட்ச் பிடிப்பதற்கும் கடினமாக இருக்கும் என்பதால் ஆட்டம் கைவிட்டப்பட்டது.
இதற்கு முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘பாதுகாப்பான வசதிகளை ஐசிசி இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியும். மழை 2-3 மணி நேரத்திற்குள் நின்றுவிட்டது. இருந்தாலும் போட்டி தொடங்கப்படவில்லை.
கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யும் என்பது எதிர்பார்க்கபட்ட ஒன்றுதான். ஆகவே, மைதானம் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அவுட்பீல்டு தயார் ஆவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை தவிர்த்திருக்கலாம்.
போட்டி வெளிச்சமின்மை, மின்சார கோபுரம் கோளாறு என மற்ற ஏதாவது காரணத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், இது அதுபோன்ற விவகாரம் கிடையாது. ஐசிசி இதுகுறித்து முக்கிய கவனம் செலுத்துவது அவசியம். ஏனென்றால் உலகளாவிய தொடர். பல மணி நேரம் காத்திருக்கும் ரசிகர்களுக்கும், டிவி-யில் போட்டியை பார்க்க காத்திருந்தவர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X