search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரே நாளில் 21 ஆயிரம் பேரை அமெரிக்கா வெளியேற்றியது
    X
    ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரே நாளில் 21 ஆயிரம் பேரை அமெரிக்கா வெளியேற்றியது

    ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரே நாளில் 21 ஆயிரம் பேரை அமெரிக்கா வெளியேற்றியது

    37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8 ஆயிரத்து 900 பேரும் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    வாஷிங்டன் :

    ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-ந்தேதி முதல், அங்குள்ள தனது குடிமக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.

    திங்கட்கிழமை காலை தொடங்கி நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21 ஆயிரத்து 600 பேரை வெளியேற்றி இருக்கிறது. 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8 ஆயிரத்து 900 பேரும் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, 16 ஆயிரம்பேர் அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மக்களை வெளியேற்றும் பணியை 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும், கெடு நீட்டிப்பு கிடையாது என்று தலீபான்கள் கூறிவிட்டதால், மீட்புப்பணியை அமெரிக்கா விரைவுபடுத்தி உள்ளது.
    Next Story
    ×