நோபல் பரிசு கேட்டு பிதற்றும் டிரம்ப் இஸ்ரேலின் அநியாயத்தை பார்த்து வாயை மூடிக் கிடப்பது ஏன்? - பெ.சண்முகம்

நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அப்படி கொடுக்காமல் போனால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.
நோபல் பரிசு கேட்டு பிதற்றும் டிரம்ப் இஸ்ரேலின் அநியாயத்தை பார்த்து வாயை மூடிக் கிடப்பது ஏன்? - பெ.சண்முகம்
Published on

இந்தியா பாகிஸ்தான் போர் உட்பட 7 போர்களை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார். எனவே தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அப்படி கொடுக்காமல் போனால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

இதற்கிடையே காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களை சிறைபிடித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "காசாவில் பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.

உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பிதற்றி வரும் டிரம்ப் இஸ்ரேல் அரசின் இந்த அநியாயத்தை பார்த்து வாயை மூடிக்கொண்டு இருப்பதேன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com