என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்... சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் த.வெ.க. உறுதியாக உள்ளது - விஜய்
    X

    கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்... சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் த.வெ.க. உறுதியாக உள்ளது - விஜய்

    • வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.
    • மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.

    * தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான். தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தான்.

    * வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.

    * உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும்.

    * மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    * ஒரு இளைஞருக்கு எதிராக உடன் இருந்தவர்களே கிணற்றில் தள்ளிவிட்ட பின்னரும் மீண்டும் வந்து அரசனாகும் கதை பைபிளில் உள்ளது.

    * தன்னை கிணற்றில் தள்ளிவிட்ட உடன் பிறந்த சகோதரர்களை, அந்த நாட்டு மக்களை அரசன் எப்படி காப்பாற்றினான் என படியுங்கள்.

    * எப்படிப்பட்ட எதிரிகளையும் நாம் ஜெயிக்கலாம் என்பதை இதுபோன்ற கதைகள் நமக்கு கற்றுத்தருகிறது.

    * நானும் த.வெ.க.வும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது.

    * ஒளி ஒன்று பிறக்கும் அந்த ஒளி நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    * நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×