என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை எதிர்க்கும் ஒரே தலைவர் விஜய்' - உறுதியாக கூறும் ஆதவ் அர்ஜுனா
- பராசக்தி வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை
- விஜய் படத்திற்கு ஏன் பாஜக சான்றிதழ் வழங்கவில்லை என அனைவரும் கேட்கவேண்டும்.
சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,
"பாஜகவை எதிர்த்து பேசவில்லை என திருமாவளவன், சண்முகம் போன்றோர் கூறுகிறார்கள். ஜனநாயகன் படத்திற்கான சான்றிதழ் ஒன்றிய அரசிடம் உள்ளது. எந்த அழுத்தத்திற்கும் பயப்படமாட்டேன் என நம் தலைவர் கூறினார். தைரியமாக இன்று இந்தியாவில் பேசும் இரண்டே தலைவர் ஒன்று ராகுல் காந்தி, மற்றொருவர் எங்கள் தலைவர்.
அந்தநேரத்தில் மற்றொரு படம் (பராசக்தி) ரிலீஸ் ஆனது. அது வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. அந்தளவு மக்கள் தூக்கிப்போட்டு விட்டார்கள். ஜனநாயகன் ரிலீஸ் இல்லை என்பதால் ஒருவர்கூட தியேட்டர் போகவில்லை. முதலமைச்சரின் படம் ரிலீஸ் ஆகிறது.
ஆனால் எங்கள் தலைவர் இன்றுவரை நஷ்டத்தை தைரியமாக எதிர்கொண்டு வருகிறார். திமுக படத்திற்கு சான்றிதழ் வழங்கும்போது, விஜய் படத்திற்கு ஏன் பாஜக சான்றிதழ் வழங்கவில்லை என அனைவரும் கேட்கவேண்டும்.
இதுபோன்ற பொய்யான பிரச்சாரத்தை அரசியல் தலைவர்கள் நிப்பாட்ட வேண்டும். கரூர் சம்பவத்திற்காக மட்டும் விஜய் கண்கலங்கவில்லை. நேற்று 5 ஆயிரம் பேருக்குத்தான் காவல்துறை அனுமதி அளித்தது. சாலையில் 2 லட்சம் பேர் நின்றார்கள். அவர்களை பார்க்கமுடியவில்லை என்ற வலியில் கண்கலங்கினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு திமுக பார்த்து பயந்த ஒரே இயக்கம் தவெக. நம் தலைவர் விஜய். அதனால்தான் இவ்வளவு நெருக்கடி." எனப் பேசினார்.






