என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026 ஆண்டு பற்றியோ, இளைய காமராசர் என்றோ பேசாதீர்கள்... மாணவ, மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்
- அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- தயவுசெய்து வேறு எதுவும் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மாமல்லபுரம்:
த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 2 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.
தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். நிகழ்ச்சியில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய விஜய், 2026-ம் ஆண்டு பற்றியோ, இளைய காமராசர் என்றெல்லாம் பேசாதீர்கள். நீங்கள் படித்த பள்ளிக்கூடம், ஆசிரியர்கள் குறித்து பேசுங்கள். தயவுசெய்து வேறு எதுவும் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.






