என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரண்ட் பில், பேருந்து வசதி, பெண்கள் பாதுகாப்பு... அடுக்கடுக்கான பிரச்சனைகளை எழுப்பிய விஜய்
- நிறைய மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை.
- இந்த இரண்டும் எவ்வளவு முக்கியமான விஷயங்கள்.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், இப்போ current-ல இருக்குற சில பிரச்சனைகளுக்கு வருவோம். இந்த கரெண்ட் பிரச்சனைக்கு வருவோம் என்று கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
மாதாமாதாம் கரண்ட் பில்லை கட்டுற மாதிரி மாத்துவோம் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? நிறைய வீடுகளில் 100 யூனிட் தான் ஒரு மாதத்திற்கு செலவாகிறது. மாதாமாதம் அந்த பில்லை கொடுத்தா அது அவங்களுக்கு ப்ரீயா ஆகிடும். ஆனா இரண்டு மாதத்திற்கு ஒரு பில்லு கொடுத்தா 200 யூனிட்டுக்கு மேல் போனால் அது அவங்களுக்கு அது சுமைதான். இதை எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது. இதை ஒரு மாடன் கராப்ஷன்னு எடுத்துக்கலாமா?
அடுத்து பஸ் வசதி. நிறைய கிராமங்களில் பஸ் வசதி இல்லைன்னு சொன்னா... இந்த ஒட்டுமொத்த தி.மு.க. அரசும் கத்துக்கிட்டு வந்துருவாங்க. நாங்க பஸ் விடாத கிராமமே இல்லைன்னு சொல்லுவாங்க. அது உண்மை அப்படின்னா முதல்வர் அவர்கள் கிட்ட எங்க தங்கச்சி ஒருத்தங்க கேள்வி கேட்டாங்களே, எங்க ஊருக்கு ஒரு மினி பஸ்சாவது விடுங்க சார் என்று. அத எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது. நிறைய மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை. நிறைய மலை கிராமங்களில் ஆஸ்பிட்டல் வசதி இல்லை. இந்த இரண்டும் எவ்வளவு முக்கியமான விஷயங்கள். பஸ் வசதியும், ஆஸ்பிட்டல் வசதியும் இல்லாததால் வீட்டிலேயே பிரசவ பார்க்குற ஆபத்து இருக்குதுன்னு எவ்வளவு நியூஸ் பார்க்குறோம். இதெல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது.
இதை எல்லா மீட்டிங்கில்லும் பேசுறது தான். பெண்களுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு நம்பர் ஒன்னா இருக்குறது என்று சொல்றாங்க. அது என்ன We Safe மாடலா? பெண்கள் என்ன சொல்றாங்க தெரியுமா அது We Safe மாடல் இல்லை, We are not safe மாடல் என்று சொல்கிறாங்க. இப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் எங்கே போனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக்கிடக்குதாம். இப்படி சொன்னா எப்படி சார். கேக்குறவங்க எல்லாம் கேசரி சாப்பிடுறவங்கன்னு நினைச்சிங்களா.
அடுத்து இந்த சட்டம் ஒழுங்கு. அது காணாமல் போய் ரொம்ப நாளாச்சு. இவன் வேற, இந்த விஜய் வேற எங்க போனாலும் இந்த மக்கள் கிட்ட சட்டம் ஒழுங்கு பற்றி பேசி ஞாபகம் படுத்திக்கிட்டு இருக்கான்னு முதல்வர் அவர்கள் கூட இருக்குறவங்க கிட்ட எல்லாம் சொல்லி சங்கடம் பட்டாராம். நாம என்ன பண்றது. நாம தான் தமிழ்நாட்டோட விசில் ப்ளோயர் ஆச்சே. நாம எப்படி சைலட்டா இருக்க முடியும். நாமளும் கேள்வியா கேட்குறோம். ஆனா பதில் தான் வந்த மாதிரியே தெரியல. இருந்தா தானே வரும். வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாரு. 5 வருஷமா பதிலே சொல்லாமல் கடந்து வந்துட்டார். இனிமேல் அப்படி இருக்க முடியாது. பதில் சொல்லியே ஆகணும். மக்களே.. இந்த தீய சக்தியை... அட்ராசிட்டியே... ஒரு எண்ட்ரி கார்டு போடணும்னு அப்படி என்றால் அவங்களை Switchoff பண்றது தான் ஒரே solution. அதுக்கான ரிமோட் தான் வரப்போகுற எலெக்ஷன். அந்த ரிமோட்டுல நீங்க ஒரு அழுத்த வேண்டியது ஒரேயொரு ஆப்ஷன். அதுதான் நம்ம விசில் சின்னத்தோட பட்டன். இந்த நாலு விஷயத்தை நீங்க செய்தாலே போது. ஒவ்வொரு EV மெஷினிலும் விசில் சின்னத்திற்கு நேரா இருக்கக்கூடிய பட்டனை பசக், பசக், பசக்குன்னு ஒரு அழுத்து அழுத்துங்க. அவ்வளவுதான் என்றார்.






