என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தானே! - விஜய் விமர்சனம்
    X

    தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தானே! - விஜய் விமர்சனம்

    • மணல் திருட்டின் மூலம் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்து உள்ளனர்.
    • 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

    மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தி.மு.க. தனது கொள்கைகளை அடகு வைப்பதாக விமர்சித்த விஜய் தொடர்ந்து பேசியதாவது:-

    * த.வெ.க.வுக்கு கொள்கை இல்லை என்று சொல்லும் தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தானே...

    * விமர்சனம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே அலறினால் எப்படி?

    * காஞ்சி மக்களின் உயிரோடு கலந்துள்ளது பாலாறு.

    * பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது.

    * 22.70 லட்சம் யூனிட் மணல் கொள்ளை அடித்து காஞ்சிபுரத்தில் ஜீவநதியான பாலாற்றை அழித்துவிட்டார்கள்.

    * மணல் திருட்டின் மூலம் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்து உள்ளனர்.

    * 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

    * அரசால் வேறு ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையத்தில் கட்டிக்கொடுக்க முடியாதா?

    * பரந்தூர் விவகாரத்தில் விவசாயிகள் பக்கம் தான் த.வெ.க. நிற்கும்.

    * நெசவாளர்கள் வறுமை, கந்துவட்டி கொடுமையால் அவதிபடுகின்றனர்.

    * மக்களை பற்றி யோசிக்கவே தி.மு.க.வினருக்கு நேரம் இல்லை என்றார்.

    Next Story
    ×